Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 100 வீத சமாதானம் உள்ளது; என்கிறார் வடக்கு டிஐஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் 100 வீத சமாதானம் உள்ளது; என்கிறார் வடக்கு டிஐஜி
902b7436a668f1a12132daec5030a1ff.jpg
காட்டுச் சட்டம் என்பது பலமுள்ளவர்கள் பலமில்லாதவர்கள் மீது பிரயோகிப்பதாகும். அந்த சட்டம் 14ஆம் 15 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலேயே இருந்தது.அது விடுதலைப்புலிகளது சட்டம் இல்லை என வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர் லலித் ஏ . ஜயசிங்க தெரிவித்தார்.
 
யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுக்கும்  வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபருக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.  
 
அதன்போது காட்டுச்சட்டம் என்று கூறுவது விடுதலைப்புலிகளது சட்டமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
காட்டுச் சட்டம் என்பது பலமுள்ளவர் பலமில்லாதவர் மீது பிரயோகிப்பதாகும். அந்தச் சட்டம் நாட்டில் சட்டங்கள்  உருவாக்கப்படமுன்னரான 14, 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்ததாகும். அது விடுதலைப்புலிகளது சட்டம் இல்லை.
 
எனினும் காட்டுச்சட்டத்தின்  ஊடாக தண்டனை வழங்கப்படுவதற்கு அநேகர் பயந்தனர். இதனால் பாரிய குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. 
 
ஆனால் கலாச்சாரத்திற்கு உட்பட்ட நாட்டில் சட்டம் ஒன்று இருக்கும். யாராவது குற்றம்  ஒன்றினைச் செய்தால் அது தொடர்பில் புலனாய்வினை மேற்கொண்டு நீதிமன்றத்தில் நாம் முற்படுத்த வேண்டும். 
 
நீதிமன்ற தண்டனையே இலங்கையின்  சட்டமாகவுள்ளது. சட்டத்தில் கூறப்பட்டுள்ளது ஒருவர் குற்றவாளி என நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கும்  வரை அவர் சாதாரண ஒரு நபர் மட்டுமே. 
 
அரச சட்டதிட்டம் காட்டுச்சட்டங்களில் அல்ல. யாருக்கு தகைமை உள்ளதோ அவர்களே வழக்கை விசாரித்து தண்டனை கொடுப்பதாகும். அவ்வாறாக காட்டுச்சட்டங்களை ஒழித்து நிறைய வருடங்கள் ஆகிவிட்டன.
 
சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள்  100 வீத சமாதானத்தை அனுபவித்து வருகின்றனர். அதற்கு ஆதாரமாக 20 ஆம் திகதி  இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து அதன்பின்னர் மக்கள்  தமது காரியங்களை மேற்கொண்டனர்.
 
சட்டத்தில் அவர்களுக்கு அவ்வாறானதொரு உரிமை இருக்கின்றது. ஒருவர் குற்றம் செய்துவிட்டார் என்று மரணதண்டனையை நாம் கொடுக்க முடியாது. அது நீதிமன்றத்தின்  ஊடாகவே கொடுக்கப்பட வேண்டும். அதுவே அரச சட்டம் என்றார்.   
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=178764057329801978#sthash.RM8oFe7F.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

902b7436a668f1a12132daec5030a1ff.jpg

 

புலிகளின் சட்டத்தை.... காட்டுச் சட்டம் என்று, வடக்கு டி.ஐ.ஜி. சொன்னதை... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
புலிகளின் சட்டத்தால்... ஈழத் திருநாட்டில், இப்போது நடக்கும் அளவுக்கு.... எந்த தீய பழக்கங்களும் இருக்கவே இல்லை.
புலிகளின் ஆட்சி.... பொன்னான ஆட்சி. அது, இந்த டி.ஐ. ஜீக்கு புரிய மாட்டாது. ஏனென்றால்... அவன் சிங்களவன்.

  • கருத்துக்கள உறவுகள்
அதன்போது காட்டுச்சட்டம் என்று கூறுவது விடுதலைப்புலிகளது சட்டமா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
காட்டுச் சட்டம் என்பது பலமுள்ளவர் பலமில்லாதவர் மீது பிரயோகிப்பதாகும். அந்தச் சட்டம் நாட்டில் சட்டங்கள்  உருவாக்கப்படமுன்னரான 14, 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்ததாகும். அது விடுதலைப்புலிகளது சட்டம் இல்லை.

 

 

புலிகளது சட்டம் காட்டுச் சட்டம் இல்லை என்று தான் கூறியுள்ளார் இந்த சிங்கள டி ஐ ஜி. :lol::icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளது சட்டம் காட்டுச் சட்டம் இல்லை என்று தான் கூறியுள்ளார் இந்த சிங்கள டி ஐ ஜி. :lol:  :icon_idea:

 

ஓ.... அவசரப் பட்டு வாசித்ததில், அவர் சொன்னதை வடிவாக... கிரகிக்க முடியவில்லை.

நான்... சொன்ன கருத்தை, வாபஸ் பெறுகின்றேன்.

தவறை.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நெடுக்ஸ். :rolleyes:

 

சிங்களவரிலும், நல்லவர்கள் உள்ளார்கள் என்பதற்கு....

வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்.. லலித் ஏ. ஜயசிங்க நல்ல முன் உதாரணமாக திகழ்கின்றார். :)

ஓ.... அவசரப் பட்டு வாசித்ததில், அவர் சொன்னதை வடிவாக... கிரகிக்க முடியவில்லை.

நான்... சொன்ன கருத்தை, வாபஸ் பெறுகின்றேன்.

தவறை.. சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நெடுக்ஸ். :rolleyes:

 

சிங்களவரிலும், நல்லவர்கள் உள்ளார்கள் என்பதற்கு....

வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்.. லலித் ஏ. ஜயசிங்க நல்ல முன் உதாரணமாக திகழ்கின்றார். :)

 

ஒரு காத்திரமான அரசியல்வாதியாக வரவேண்டியவர் வீணாக வெளிநாடு போய் திறமைகளை  வீனக்குகிறீர்கள். 

தான் காட்டு சட்டம் என்று கூறியது புலிகளின் சட்டத்தை பற்றியது இல்லை என்று அந்த மனிசன் தெளிவா சொல்லுது.
இங்க புலம்பெயர் வீர கூட்டம் புலிகளின் சட்டம் காட்டு சட்டம் இல்லை என டிஐஜி கூறினார் என்று உல்டாவா விளக்கம் அளிச்சு அதுக்கும் விசிலடிக்குதுகள். என்ன கொடுமை சரவணா இது.   :huh:
இதுக்குள்ள டி ஐ ஜிக்கு உத்தமர் பட்டம் வேற.  :lol:  :D
 
 

902b7436a668f1a12132daec5030a1ff.jpg

 

புலிகளின் சட்டத்தை.... காட்டுச் சட்டம் என்று, வடக்கு டி.ஐ.ஜி. சொன்னதை... மிக வன்மையாக கண்டிக்கின்றேன்.
புலிகளின் சட்டத்தால்... ஈழத் திருநாட்டில், இப்போது நடக்கும் அளவுக்கு.... எந்த தீய பழக்கங்களும் இருக்கவே இல்லை.
புலிகளின் ஆட்சி.... பொன்னான ஆட்சி. அது, இந்த டி.ஐ. ஜீக்கு புரிய மாட்டாது. ஏனென்றால்... அவன் சிங்களவன்.

 

ஈழத் திருநாட்டில புலிகளின் சட்டத்தின் கீழான பொன்னான ஆட்சியில்  நீங்க எவ்வளவு காலம் அண்ணை வாழ்ந்தனீங்க? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.