Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கிள்ளி எறிவோம்" சூளுரைக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர.

Featured Replies

பயங்கரவாதம் என்ற போர்வையில் தனி நாட்டை அமைக்க புலிகள் முயற்சித்தால் கிள்ளி எறிவோம் சபையில் அமைச்சர் மங்கள சூளுரை

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகின்றது. இருந்தபோதிலும் பயங்கரவாத செயற்பாடுகளை புலிகள் கைவிடவில்லை. பயங்கரவாதம் என்ற போர்வையில் தனிநாட்டை அமைக்கும் முயற்சியில் புலிகள் ஈடுபடுவார்களேயானால் அதனை கிள்ளி எறிவதற்கும் அரசாங்கம் தயங்காது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சமாதான நடவடிக்கைகள் புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது. பேச்சு மூலம் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நிகழ்ச்சி நிரல் தேவையில்லை. பேச்சு மேசைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாகவே பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அதற்காக அரசாங்கம் எந்த நேரமும் தயாராகவே இருக்கின்றது. ஐ. தே. க. அரசாங்கத்தினால் வடக்கு தெற்கு இணைக்கப்படவில்லை, பிரிக்கப்பட்டது. அரசாங்க நிர்வாக பிரதேசம், புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி என்று பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அரசாங்கம் இன்று இருந்திருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்கும். இனப்பிரச்சினை தீர்விற்காக அரசாங்கம் ஆக கூடுதலான முன்னுரிமையை வழங்கியுள்ளது. எம்முடன் நட்புறவு கொண்டுள்ள நாடுகளுடன் இணைந்து அரசாங்கம் இலக்கை அடைவதற்கு தயாராக இருக்கின்றது.

புலிகளுடன் அருகருகே இருந்து பேச்சு நடத்துவதற்கு தயார் என்று ஜனாதிபதி கூறியிருந்த போதும் புலிகள் அரசியல் படுகொலைகள், சிறுவர்களை படையில் இணைத்து கொள்வதை தொடர்ந்து முன்னெடுத்ததுடன் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்முறைகளில் சிவிலியன்களும் படையினரும் பலியானார்கள். யார் யார் எங்கு எங்கு கொல்லப்பட்டனர் என்ற விபரங்களை திரட்டியுள்ளோம். சில சமயங்களில் சுய தேவைக்காக அந்த தொகை கூடுதலாக கூறப்பட்டிருக்கலாம்.

இக்காலத்தில் ஜனாதிபதி பெறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட்டார். இவ்வளவு காலமாக பொறுமையை கடைப்பிடித்த ஒருவரை உலகத்தில் எங்காவது காட்ட முடியுமா? ஸ்ரேலின் யுத்தம் ஏற்பட்டபோது அங்கும் ஆட்கடத்தல்கள் இடம்பெற்றதை எவ்வாறு இடம்பெற்றது என்பதை அறிந்ததன் பின்பே யுத்தம் எவ்வளவு கோரமானது என்பதை அறிந்தனர்.

பொறுமையை சோதித்தனர்இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் பொறுமையை சோதித்தனர் மாவிலாறு முதல் ஹபரனை வரையிலான தாக்குதல்களின் போதும் பின்னரும் நாம் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் என்பதுடன் நிபந்தனையின்றி பேச்சுக்கு தயாரானோம்.

சர்வதேசத்தின் அழுத்தங்கள் காரணமாக புலிகள் ஜெனிவா பேச்சுக்கு வந்தனர். அதன்போது ஐரோப்பிய யூனியனின் தடை அதற்கு மைற்கல்லாக அமைந்தது.

சமாதான நடவடிக்கை புலிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதுடன் புலிகளின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் ஒரு போதும் அங்கீகரிக்காது அத்துடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக உள்நாட்டு அரசியல் அழுத்தம் மட்டுமல்ல, இந்தியாவும் ஒத்துழைப்புகளை வழங்கி உந்து சக்தியாக செயல்படுகின்றது.

ஊது குழலாக செயற்படக்கூடாது இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உபாயத்தை புலிகள் மேற்கொண்டனர். அச்செயற்பாடுகளை சரியென்று கூறி புலிகளுக்கு நாம் ஊது குழலாக செயல்படக் கூடாது.

புலிகளுடன் பேச முனைந்த சகல தலைவர்களும் படுகொலைச் செய்யப்பட்டனர். எனவே இதில் இலங்கை அரசாங்கத்தின் மீது பழிபோட வேண்டாம். புலிகளுடன் பேச்சை ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது. சம்பந்தன் குறுக்கீடு இதன் போது குறுக்கிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் தலைவர் சம்பந்தன் வட கிழக்கு பிரிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளை எவ்வாறு நம்புவது என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மங்கள சமரவீர உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க முடியாது என்றாலும் வட கிழக்கு இணைப்பு குறித்து என்னிடம் தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அதைப் பற்றி தனியாக பேசுவோம்.

அரசாங்கத்தின் எந்த குறையும் இல்லை என்று சொல்லவில்லை. இராணுவம் கட்டுக் கோப்புடன் ஒழுக்கத்துடன் செயற்படுகின்றனர். என்பதனால் தான் எமது வீரர்கள் 5 வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். சில இளம் வீரர்களுக்கு மரண அச்சுறுத்தல் வரும்போது அவர்கள் பொறுமை இழக்கலாம். இராணுவத்திடம் ஒழுக்கக்கேடு நடந்தால் தண்டிக்க தவறமாட்டோம். திருகோணமலையில் 5 மாணவர்கள் கொலைச் செய்யப்பட்டபோது அக்கொலையை இராணுவத்தின் மீது சுமத்தினர். ஆனால் இக்கொலையை இராணுவம் செய்தமைக்கான போதிய ஆதாரம் இல்லையென்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரசின் மீது குற்றச்சாட்டு இவ்வாறு நாம் செய்கின்ற போதும் தொண்டர் நிறுவன ஆதரவுடன் செயல்படும் குமார் ரூபசிங்க அரசாங்கத்தை குற்றஞ் சுமத்துகின்றனர். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா?

எவ்வாறான ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றை பொலிஸுக்கு தெரிவிப்பதில் அச்சம் இருந்தால் வேறு வழியில் எங்களுக்கு தெரியப்படுத்தவும் கடந்த கால கொலைகள் தொடர்பான விசாரணைகள் ஆதாரமின்றியே தேங்கி கிடக்கின்றன. இராணுவத்தினர் மத்தியில் ஒழுக்கக்கேடான நடவடிக்கை இருந்தால் தண்டனை வழங்குவோம், அதற்கான அதிகாரம் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில பழங்கள் அழுகி விட்டது என்பதற்காக சகல பழங்களும் கெட்டவை என்று கூற முடியாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மனித உரிமை மீறல்களுக்கு இடம் வழங்காது பயங்கரவாதம் மிகவும் மூர்க்கத்தனமாக எதிர்கொண்டு வெற்றிக் கொள்ள வேண்டும். பயங்கரவாதிகளிடம் ஜனநாயக அரசாங்கம் அடிபணிய முடியாது. சர்வதேச சமூகம் எமது கரங்களை பலப்படுத்துகின்றன என்பதனால் பயங்கரவாதத்தின் மூலமான தீர்வு காண முடியாது என்பதனை புலிகளுக்கு சர்வதேசம் கூற வேண்டும்.

புலிகள் ஒரு விடுதலை இயக்கம் என்று கூறப்படுகின்ற போதும் தமிழ் மக்களின் உரிமைக்காகவா? குரல் கொடுக்கின்றது. இல்லை கடந்த கால தலைவர்கள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சித்த போதும் அத்தலைவர்களுக்கு புலிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண முடியும். அதற்கு அரசாங்கம் எந்நேரமும் தயாராகவே இருக்கின்றது.

www.paraparapu.com

Edited by YARLVINO

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் இதுவரை கிள்ளி எறியாதது, உலக நாடுகள் ஏன் என்று கேட்டுடும் என்றுதானே,

ஒரு பிரச்சினையில் பாதிக்கப் பட்டவனுக்கு பாதித்தவனே நீதி சொல்லும் நிலை வந்தால், பாதிக்கப்பட்டவன் பாடு பிழைக்கும்தான். றம்புக்கலவேதாளம் சொல்லுது, உலகம் கேட்குது நாமும் கேட்ப்போம்.

Edited by தேவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க வேரோட புடுங்கி எறிவம்!!

இலங்கை அரசியலின் கோமாளி. கிள்ள முந்தி கொத்தா புடுங்கி ஏறியப்படப் போரது யாரேன்டு தெரியாம ஏதோ அலட்டுதுகள்.

ஈழத்திலிருந்து

ஜானா :(:lol:

இவ்வளவு காலமும் கிள்ளுறார் இன்னும் வரவில்லை இனி உடன கிள்ளி எறிந்திடுவார் செய்தாலும் செய்வார் எதுக்கும் கவனமாய் இருப்பம் என்ன

கிள்ளி எறிய வருவதற்க்கு முன் அவர்களை கிளைமோர் வைத்து கிளப்பி எறிந்து விடுவார்கள் எங்கட போராளிகள்.

:angry: யோவ்...மங்களா நீ கிள்ளி எறிய நாங்க ஒன்றும் கிளிப்பிள்ளை அல்ல.....ஆனால் உன்னை நுள்ளி எறிய ஒரு நொடி போதும்....(அ)மங்களா.....????? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களது உந்த திமிர் விரைவில் அடங்கும்.. அப்போது தெரியும் யாரை யார் கிள்ளி எறிவததென்று.. உங்களது ஆணவம், கர்வம் அனைத்தும் வேரோடு புடுங்கியெறியப்படும் காலம் வந்துவிட்டது.. அப்போது தெரியும் தமிழனின் பலம்.. அப்போது நீங்கள் இப்ப சொன்னதையிட்டு வெட்கத்தில் தலைகுனிந்து நடப்பீர்கள்... மன்னிக்கவும் உங்களுக்கேது வெட்கம், மானம், சூடு சொரணை...?

இவ்வளவு நாளும் நல்லா இருந்த மனுசன்.

ஆள் இருக்கிறதே தெரியாது.

வெளிநாட்டு அமைச்சர் என்ற கர்வம் கொஞ்சமும் இல்லை.

என்னவோ ஆயிற்று பாவம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.