Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தவர்களை மனதிலிருத்தியே அனைத்தும்! முதலமைச்சர் அழைப்பு! - Photo in

Featured Replies

இறந்தவர்களை மனதிலிருத்தியே நாம் அனைத்தையும் செய்யவேண்டும்.2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்க உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது உள்ளதாகவும் நினைவு கூர்ந்துள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

cm-1.JPG

கிளிநொச்சி மலையாளபுரம் சாரதாதேவி வித்தியாலய வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்வினில் கலந்து கொ:டு உரையாற்றிய அவர் கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணில்த்தான் இன்று இந்தக் கட்டடத் தொகுதி மிக அழகாக 6.2 மில்லியன் ரூபா செலவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றது.    இறந்து போன அந்தச் சிறார்களை இவ்விடத்தில் மனதில் நிறுத்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மனதுள் பிரார்த்திப்போமாகவெனவும் அவர் அழைப்பு விடுத்தள்ளார்.

cm-2.JPG
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் 'சம்' சம்திங் றோங் என்று செய்திகள் வந்தாலும் ஒரு அருமையான முதல்வரைத் தேடித்தந்து உதவியமைக்கு நன்றிகள்பல !!   :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் தேடல்ல.. வெளிநாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பலமட்ட அழுத்தங்களின் பேரில் தான் அத்தேர்வு நடந்தது. இருந்தாலும் விக்கி ஐயா மீது கொண்டிருந்த சந்தேகங்கள் நீங்க அவர்கள் உண்மையான மக்கள் பிரதிநிதியாக சேவையாற்றுவது அதுவும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் வரவேற்கப்பட வேண்டியது.

 

இதே இடத்தில் மாவையை நிறுத்தி இருந்தால்.. இந்தப்பள்ளிக்கூட நிதியையும் ஆட்டையைப் போட்டிருப்பார். :o:icon_idea:

உண்மையில் ஒரு மனசாட்சி உள்ள மனிதர் முதல்வராக உள்ளார் ... ஒரு நீதிபதியாக சிந்தித்து நல்ல மனிதராக நடக்கின்றார் ... அரசியல்வாதி அல்ல .... 
 
இதில் சம் ...ஒன்றும் புகழ் பாட முடியாது ...விசம ஏறின நச்சு பாம்புகள் ... கூடவே சுமந்திரன் என்ற இளம் விஷ பாம்பு .... 

நரம்பில்லாத நாக்கினால் இவைகள் இல்லை இதுக்கு மேலையும் சொல்லுவீங்கள் ,சிங்களச்சம்பந்தி ,கொழும்பு மேட்டுக்குடி ----யாழ் களத்திலேயே பதிவுகள் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
பிஞ்சுகளின் இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணின் மீதே இன்று மாடிக்கட்டடங்கள்; வடக்கு முதல்வர்
7670019cd65e9e7fc1dbe40e56b3f494.jpg

கொத்துக் குண்டுகள் மூலமும்  எறிகணைகள் மூலமும்  எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின்  உடல்களிலிருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிப் போன மண்ணில் தான் இன்று மாடிக்கட்டடங்கள்  முளைத்துள்ளன என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

 
கிளிநொச்சி மலையாளபுரத்திலுள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்தின் கட்டடத்திறப்பு விழா நேற்று இடம்பெற்றது. அதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 
அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது, 
 
புதிய கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட  ஓலைக் கொட்டில்களில்  கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்.
 
அவ்வாறு இருந்த போதிலும் அவர்களின் கல்வி முன்னெடுப்புக்கள் எதுவித குறைகளுமின்றி வளர்ச்சியுற்று இன்று 350 ற்கும் மேற்பட்ட பிள்ளைகளையும் 15 ஆசிரியர்களையும் கொண்ட ஒரு பாடசாலையாகத் திகழ்ந்து வருவது பெருமையளிக்கின்றது. 
 
1977ஆம் ஆண்டு மற்றும் 1983ல் நடைபெற்ற இனக்கலவரங்கள் காரணமாக மலையகப்பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்து வந்த மிகக் கூடுதலான மக்கள் கிளிநொச்சிப் பகுதியில் அமைந்துள்ள பாரதிபுரம், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், ஆகிய பகுதிகளில் குடியமர்ந்தனர். 
 
இவர்களுடைய பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகப் பாரதிபுரத்திலே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 
 
எனினும் 1000 பாடசாலைத் திட்டத்தின் கீழ் அதனுடைய ஆரம்பப்பிரிவு தனியானவொரு அலகாக இயங்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. 
 
ஆரம்பப் பிரிவைத் தனியலகாக வேறொரு இடத்தில் ஆரம்பிக்கும்படி அதிகாரிகளின் தொடரழுத்தங்கள் இருந்து வந்தன. 
 
இராணுவக் கெடுபிடிகள் போன்ற பல சிரமங்களுக்கு மத்தியில் அக்காலத்தில் அதிபராக இருந்த திரு.இராஜேந்தின் அவர்களின் கடுமையான முயற்சியின் காரணமாக 5 ஏக்கர் காணியை இப்பாடசாலைக்காகப் பெற்றுக் கொண்டனர்.
 
அதில் 100 அடி நீளம் 25 அடி அகலக் கொட்டில் ஒன்றையும் அதே போன்று 50-25 அளவிலான இன்னொரு கொட்டிலையும் அமைத்து இப்பாடசாலை பாரதி ஆரம்பப் பாடசாலை என்ற பெயருடன் ஆரம்பிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
 
எனினும் ஏற்கனவே பாரதி வித்தியாலயம் என்கின்ற பாடசாலை இயங்கிக் கொண்டிருந்தமையால் இப் பெயரில் ஒரு ஆரம்பப் பாடசாலையைத் தொடங்க முடியாது என அறிவுறுத்தப்பட்டது.
 
அதனையடுத்து அன்னை சாரதாதேவி ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இப்பாடசாலையைப் பதிவு செய்யப்பட்டது. 
 
இன்று நல்ல முறையில் இப்பாடசாலை இயங்கி வருகின்றமை இது இங்குள்ள ஆசிரியர்களினதும் அதிபரினதும் கடுமையான உழைப்பையும் ஊக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. 
 
நான் இப்பகுதிக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் குறைகேள் கூட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தேன். அப்போது இப்பாடசாலை பற்றிய மிகவேதனைக்குரிய குறிப்பொன்றை இப்பாடசாலையின் அதிபர் எமக்கு வழங்கி இருந்தார். 
 
2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்க உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது என்றும் கூறியிருந்தார். 
 
இவ்வாறு கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்திய இரத்தத்தினால் சிவப்பேறிய மண்ணில்த்தான் இன்று 150 அடி நீளத்தையும் 25 அடி அகலத்தையும் கொண்ட 6 வகுப்பறைகள், ஒரு காரியாலய அறை, ஒரு களஞ்சிய அறை என்பனவற்றைக் கொண்ட இந்தக் கட்டடத் தொகுதி மிக அழகாக 6.2 மில்லியன் ரூபா செலவில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. 
 
இறந்து போன அந்தச் சிறார்களை இவ்விடத்தில் மனதில் நிறுத்தி அவர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று மனதுள் பிரார்த்திப்போமாக! 
 
காணாமல் போனவர்கள் இன்னும் உயிரோடிருந்தால் கல்லூரி அதிபருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அவர்களிடம் ஒரு கோரிக்கையை விடுவோமாக!
 
இப்பாடசாலை ஒரு அழகிய கட்டிடத் தொகுதியைக் கொண்டுள்ள போதிலும் கழிப்பறைகள் எதுவும் இங்கு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இது மிகவும் பாரியதொரு குறைபாடாக நான் கருதுகின்றேன். 
 
உரியவர்கள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி சில கழிப்பறைகளை இங்கு அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்  அவர் மேலும் தெரிவித்தார்.  
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=357244094619873607#sthash.pTiTSV5Z.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ் பாஞ்,

சம் சும் மட்டுமில்லை என்றால் விக்கி அரசியல் பக்கமே தலை வைத்தும் படுத்திரார்.

எதிரியே ஆனாலும் உண்மையை ஏற்கும் பக்குவம் வேண்டும்.

சம்-சும்-விக் இன் நிதானமான தலைமையில் எனக்கு நம்பிக்கை இருக்கு.

வானம் ஏறி வைகுண்டம் போகாவிடினும், கூரை ஏறிக் கோழி பிடிகாவிடினும், கதிரை ஏறி பல்பை ஆவது மாற்றுவார்கள்.

புலமும், சுரேசும் மாவையும் கதிரையை இழுத்து விடாது இருந்தால்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.