Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் புலிகளை ஆதரிக்கவில்லை - விக்கினேஸ்வரனை விடுதலைப் புலியாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர்

Featured Replies

 

sam.jpgவடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நாடு இன்று ஒருவிதமான குழப்பத்திற்குள் இருந்து வருகின்றது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

போர் நிறைவடைந்த பின்னர் சிறிலங்காவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனிடம் அன்றைய அரசாங்கம் பல உறுதிமொழிகளை வழங்கியிருந்தது.

அத்துடன் அனைத்துலக நாடுகளிடமும் அதே வகையான உறுதிப்பாடுகளை வழங்கியிருந்தது. எனினும் அந்த உறுதி மொழிகள் அன்றைய அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இதன் மூலம் கடப்பாடு மற்றும் பொறுப்பு என்பன மீறப்பட்டுள்ளன. அதன் பின்னரும் கூட அனைத்துலக சட்டங்கள் மீறப்பட்ட நிலைமையை காண முடியும்.

அனைத்துலக ரீதியில் இன்னும் புலிகள் இயங்கி வருவதாக கூறுகின்றனர். இது ஒரு புதிய விடயமல்ல. இதனை நாமும் அறிந்தே வைத்திருக்கின்றோம்.

இருந்தபோதிலும் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு ஒன்று வேண்டும் என்பதை வலியுறுத்தியே கடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வாக்களித்து வந்துள்ளனர்.

நாம் முன்னைய அரசாங்கத்துடன் 18 சுற்றுப் பேச்சுகளை மேற்கொண்டிருந்தோம். இருப்பினும் எந்தவித முடிவும் இன்றிய நிலையில் அவர்களே அந்த பேச்சுக்களை முறித்துக் கொண்டனர்.

அனைத்துலகத்துக்கு எடுத்துக்காட்டாக நடந்து கொள்ளாமைக்காக அன்றைய ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.

உள்ளக விசாரணை ஒன்றே 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனைத்துலக நாடுகளின் கோரிக்கையாக இருந்தது.

எனினும் முன்னைய அரசாங்கம் அதனை செயற்படுத்தாத காரணத்தால் தான் அனைத்துலக விசாரணை ஒன்றுக்கு தள்ளப்பட்டுள்ளது.

அக்காலப் பகுதிகளில் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான விடயங்களை அன்றைய பெருந்தோட்ட அமைச்சர் நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளை, அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பின்வரிசையில் அமர்ந்திருந்ததையிட்டு வெட்கப்படுகின்றேன்.

நாம் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால் இங்குள்ளவர்கள் கூறுவது போன்று புலம்பெயர் தமிழர்கள் அனைவருமே புலிகள் அல்ல.

புலம்பெயர் தமிழர்களில், முதலீட்டாளர்கள் கல்விமான்களும் இருக்கின்றனர். அவர்கள் எமது நாட்டில் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கின்றனர்.

வடக்கில் மட்டுமல்லாது முழு நாட்டிலும் முதலீடுகளை செய்து இந்நாட்டினை அபிவிருத்தி செய்ய விரும்புகின்றனர். ஐக்கிய இலங்கைக்குள் அவர்கள் செயற்படவே விரும்புகின்றனர்.

ஆனால் அவர்களைப் புலிகள் என்று சித்தரித்து அவர்கள் சிறிலங்கா  திரும்புவதையும் முதலீடுகளை மேற்கொள்ள முற்படுவதையும் தடுக்கிறீர்கள். சமூகப் பொறுப்புள்ளவர்களை இந்த நாட்டிக்குள் அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.

சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் அவர்களது நிர்வாகப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கு அனைத்து உரிமையும் கொண்டிருக்கிறார்.

அவ்வாறு கூறுவதால் அவரை விடுதலைப் புலியாக சித்திரிக்க முயற்சிக்கின்றனர்.

சுதந்திரக்கட்சி யில் தொங்கிக் கொண்டிருப்பவர்களே இவ்வாறு சித்தரிக்கின்றனர். இந்நாட்டில் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் புலிகள் என்றும் அச்சுறுத்தல்காரர்கள் என்றும் அனைத்துலகத்துக்கு சித்தரித்துக் காட்டுவதற்காக முயற்சிக்கின்றனர்.

இப்படி தொங்கிக் கொண்டிருப்பவர்கள் தொடர்பில் நான் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன்.

இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாது விடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை” என்றார். http://www.pathivu.com/news/41123/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்


இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாது விடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை” என்றார். http://www.pathivu.com/news/41123/57//d,article_full.aspx

ஒரு தகப்பனாக குட்டுவதில் உடன்பாடுண்டு...

கீழே உள்ளதைத்தான் நாமும் சொல்கின்றோம்

சமத்துவம் இல்லாத நாட்டில் இறைமை பற்றி ஐயா எதற்கு பேசணும் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சும் ஆட்ட ஆடுற சம் பொம்மையாகிட்டார்.

இவருக்கு தெரியாதாக்கும் உரிமையை கேட்கிற தமிழனை சிங்களவன் தந்தை செல்வாக்குப் பிறகு புலியாத்தான் பார்க்கிறான் என்று.

இவரைப் போல உரிமையை விட்டுக்கொடுக்கிற ஆக்களை அவன் நல்லாவே எலும்பு போட்டு வளர்ப்பான். அப்படி ஒன்றிரண்டு புலம்பெயர்ந்து புலியைப் போராட்டத்தைச் சசாட்டி அசைலம் அடிச்சிட்டு இருக்குதுங்க தான்.

இவர் என்ன தாளம் போட்டாலும் சிங்களவனுக்கு தப்புத்தாளம் தான். பாவம் சம். சாகிற வயசில... :lol::rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைவன் எப்படி இருக்கணும்.....

 

வேலுப்பிள்ளையின் மகன் உதித்தெழுந்து இந்நாட்டில் இனவிரிசலை ஏற்படுத்தவில்லை!- மனோ கணேசன்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வானத்தில் இருந்து குதித்து வந்தோ அல்லது மண்ணுலகில் உதித்து எழுந்தோ இந்நாட்டில் இருந்திராத இன விரிசலை ஏற்படுத்தவில்லை. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது.

இதை இந்த நாட்டின் அனைத்து இன அரசியல் தலைவர்களும் மனதில் கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்து, பெளத்த கலாச்சார பேரவை விழா, கொழும்பு இராமகிருஷ்ணா மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஹெல உறுமய கட்சி தவிசாளர் அதுரலியே ரத்ன தேரர் எம்பி, அமைச்சர்கள் கரு ஜெயசூரிய, விஜேதாச ராஜபக்ச, பீலிக்ஸ் பெரேரா ஆகியோர் பங்குபற்றிய இந்த விழாவில் சிங்கள மொழியில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த விழாவின் நோக்கங்களையிட்டு நான் மகிழ்வுறுகிறேன். சிங்கள, தமிழ் அல்லது இந்து, பெளத்த ஐக்கியம் என்பது நல்ல விடயம்தான். ஆனால், இந்த ஐக்கியம் என்பதற்கு இருக்கின்ற முதன்மை நிபந்தனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதுதான், சமத்துவம் என்பதாகும்.

மொழிகள், மதங்கள், இனங்கள் மத்தியில் சமத்துவம் இருக்க வேண்டும். எங்கே சமத்துவம் இருக்கின்றதோ அங்கே ஐக்கியம் தளைக்கும். எங்கே சமத்துவம் இல்லையோ அங்கே ஐக்கியம் காணாமல் போய் விடும்.

உண்மை சமத்துவத்தை நோக்கியதான முயற்சிக்கு நான் எப்போதும் ஆதரவளிப்பேன். அதை ரத்ன தேரர் முன்னெடுக்கின்றார் எனின் அதற்கு அரசியல் பேதங்களுக்கு அப்பால் சென்று உதவிட நான் தயாராக உள்ளேன்.

ஆனால், நடந்து முடிந்த யுத்தத்திற்கும், இன்றைய நமது எல்லா துன்பங்களுக்கும், இனங்களுகிடையேயான விரிசல்களுக்கும் ஆக வேலுப்பிள்ளை பிரபாகரனே காரணம் என்ற கூற்றை இந்நாட்டு அரசியல் தலைவர்கள் கைவிட வேண்டும்.

அது அப்படியல்ல. உண்மையில் இந்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த இனவாதம்தான் வேலுப்பிள்ளை பிரபாகரனை விடுதலை புலி பிரபாகரனாக மாற்றியது.

இனவாத ஆரம்பத்திற்கு அன்றைய அரசாங்களும், சிங்கள தலைவர்களும், தமிழ் தலைவர்களும் காரணமாக அமைந்தார்கள்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் பின்பாதி காலகட்ட நடவடிக்கைகள் சில இனவிரிசலுக்கு காரணமாக அமைந்தன என்பதும் உண்மைதான். ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லா பழிகளையும் புலிகளின் மீது போட்டு விட்டு தப்பும் முயற்சிகளை நாம் ஏற்க முடியாது.

யுத்தம் நடந்தமைக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பதற்கு இந்த புரிந்துணர்வு அவசியம்.

http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfx1H.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.