Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பம்!
[Wednesday 2015-07-15 19:00]
வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சினால் முன்னாள் போராளிகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள், மாவீரர் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக மாகாண கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று காலை மேற்படி செயற்றிட்டம் தொடர்பில் அமைச்சின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  

கடந்த 2014.12.19ம் திகதி மாகாணசபையில் தொடக்கி வைக்கப்பட்ட மேற்படி செயற்றிட்டத்தின் கீழ் வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் விண்ணப்பங்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 12676 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பாக முன்னாள் போராளிகளிடமிருந்து 6322 விண்ணப்பங்களும், மாவீரர் குடும்பங்களிடமிருந்து 6030 விண்ணப்பங்களும், சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களிடமிருந்து 324 விண்ணப்பங்களும் எமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

இதற்கமைப எமது அமைச்சுக்கு ஊடாக 46 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டு முதற்கட்டமாக சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்கள் 324ற்கும் நிரந்தர வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான செயற்றிட்டம் நாளைய தினம் நடைமுறைக்கு வருகின்றது.

மேலும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் குடும்பங்களுக்கு உதவும் செயற்றிட்டம் 2ம் கட்டமாக நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில் மேற்படி செயற்றிட்டத்திற்கு உதவியளிப்பதற்கு பல புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு தூதுவராலயங்களும் முன்வந்திருக்கின்றன.

எனினும் நிரந்தர வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு நிதி பற்றாக்குறை போதாமலிருக்கின்றது. இந்நிலையில் எமது கண்காணிப்பின் கீழ் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் மேற்படி வகைப்பாட்டிலுள்ள, பயனாளிகளுக்கு நேரடியாகவும் எமக்கு ஊடாகவும் உதவிகளை வழங்க முடியும். நான் கிராமிய அபிவிருத்தி அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் பல கிராமங்களுக்குச் சென்றிருந்த போது அங்கே முன்னாள் போராளிகள், இந்த நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த, மாவீரர்களுடைய குடும்பங்கள் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உள்ளாகி வறுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதை நேரடியாக கண்டு மனவேதனையும், கோபமும் அடைந்த நிலையிலேயே இந்த திட்டத்தை முன்மொழிந்தோம்.

இந்நிலையில் இந்த செயற்றிட்டம் வெற்றிகரமானதாக இப்போது நடைமுறைக்கு வருகின்றது. இதற்கு அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=135932&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரி பொங்கல் பானையை தூக்கிட்டாங்க

அரசியற்கைதிகளுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

அரசியற்கைதிகளின் வாழ்வாதார உதவித்திட்ட செயற்பாடுகள், மீன்பிடி போக்குவரத்து கிராமிய அமைச்சினால் புதன்கிழமை 15 ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மீன்பிடி, கைத்தொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


'யாழ். மாவட்டத்தில் 157 குடும்பங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 61 குடும்பங்களும் வவுனியா மாவட்டத்தில் 23 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 38 குடும்பங்களும் முல்லைதீவு மாவட்டத்தில் 45 குடும்பங்களும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்தக்குடும்பங்கள் யாரிடமும் கையேந்தும் நிலை இருக்க கூடாது. இந்த 324 குடும்பங்களும் தமது பிள்ளைகளை கல்வியில் முன்னேற்ற வேண்டியது அவசியமாகும்.

இதற்காக 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இக்குடும்பங்கள் உரிய முறையில் கிராமிய அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூலம் இனங்காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன' என அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/150309#sthash.RpR12upS.dpuf

வடமாகாண மாற்றுதிறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டை

 

 article_1437022385-DSC00300.jpg

வடமாகாணத்தில் வதியும் மாற்றுத்திறனாளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர்; அவர்களின் தரவுகள் கணினி மயப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர்களின் மருத்துவ விபரங்கள் அடங்கிய விசேட அடையாள அட்டைகளை வழங்கவுள்ளதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ்வமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வடமாகாணத்தில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக, நடந்து முடிந்த யுத்தத்தினால் தமது அவயவங்களை இழந்த பலர் விசேட தேவையுடையவர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள்.

எனினும், இவர்களின் எண்ணிக்கை, விசேட தேவையின் தன்மை போன்ற தரவுகள் தெளிவாக இல்லை. இதற்காக சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் தரவுகள் திரட்டும் வேலைத்திட்டமொன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதுதொடர்பான பரீட்சார்த்த நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக தொண்டர்களை வேலைக்கு அமர்த்தி வீடு வீடாகச் சென்று தரவுகள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் விபரங்கள் கணினிமயப்படுத்தப்படவுள்ளன.

அந்த தரவுகளின் அடிப்படையில்; சுகாதார திணைக்களத்தினால் விசேட நடமாடும் மருத்தவ சேவைகள் நடத்தப்பட்டு, அவர்கள் தொடர்பாக மருத்தவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ நிலை தொடர்பான விபரங்களுடன் விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதன்மூலம் விசேட தேவையுடையவர்களுக்கான தேவைகளை இலகுவாக இனங்காண முடியுமெனவும்  அவர்களுக்கான விசேட செயற்றிட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தவும் உத்ததேசித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 http://www.tamilmirror.lk/150318#sthash.b7gGuXlE.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலத்தில் வந்தாலும்....இது ஒரு நல்ல திட்டம் சம்பந்தப்பட்டவர்கள்  பாராட்டப்பட வேண்டியவர்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் திட்டம் தேர்தல் முடிய கிடப்புக்கு போயிடுமே புத்து. அப்ப பாராட்டின பாராட்டை என்ன செய்யுறது. பின்வாங்கவும் முடியாதே. :grin::innocent:

தேர்தல் காலத்தில் வந்தாலும்....இது ஒரு நல்ல திட்டம் சம்பந்தப்பட்டவர்கள்  பாராட்டப்பட வேண்டியவர்கள்......

அண்ணை இது தேர்தல் காலத்தில் வரவில்லை....தேர்தலுக்காக வந்தது....:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

""இலங்கையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட முன்னாள் ஆயுதக் குழு உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கைதிகள், போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத உதவித் திட்டம் ஒன்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்திருக்கிறார்.""

 

இதுதாண்டா bbc இல வந்த செய்தி...

 
விடுதலை புலிகளும் ஒரு முன்னால் ஆயுத குழுவாக, ஏனைய குழுக்களுடன் இணைந்தார்கள்.. 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.