Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே  மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!!

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கட்சிகளையே  மக்கள் ஆதரிக்க வேண்டும்! - பொங்குதமிழுக்கு மனோ கணேசன் செவ்வி!!

 

வடக்குக் கிழக்கிலே இருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும், இரு தேசம் ஒரு நாடு  என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும் நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன. இதனை யாரும் நிராகரிக்க முடியாது.

வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அது கட்டாயமானது. கூட்டமைப்பா அல்லது மக்கள் முன்னணியா என்பதை மக்கள் முடிவு செய்வர். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எந்தவொரு பெருந்தேசிய வாதக்கட்சிக்கும் வாக்களிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லைஎன கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பொங்குதமிழ் இணையத்தளத்திற்கு அவரளித்த பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.  அவரது பேட்டியின் முழுமை வருமாறு:

இன்றைய நிலையில் கொழும்பு தேர்தல் களம் தங்கள் தரப்பினைச் சேர்ந்த தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தளவில் எவ்வாறுள்ளது?

கொழும்பு மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் இரு தமிழ் வேட்பாளர்களே  போட்டியிடுகின்றோம். அது, நானும் குகவரதனும் ஆகும். பாராளுமன்றத் தேர்தலில் 5 வீத வெட்டுப்புள்ளி சட்டம் காணப்படுகின்றமையினால் ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டுச் சேர்ந்தே நாம் போட்டியிடுகின்றோம்.

கொழும்பு மாவட்டத்தின் நிலைமை தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாகாண தேர்தல் மாவட்டத்தினையோ அல்லது நுவரேலியா மாவட்டத்தினைப் போன்றதோ அல்ல. இங்கு சிறுபான்மையாக வாழும் நாம், எமது வாக்குகள் சிதறடிக்கப்பட சிறிதளவு இடமளித்தால் அதன் மூலம் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை இழந்துவிட நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய பின்னணியின் அடிப்படையிலேயே கொழும்பு மாவட்டத்தில் நாம் இருவரும் வெற்றி பெற வேண்டிய சாத்தியக் கூறுகளை நாம் கொண்டுள்ளோம்.

தற்போது தேர்தலுக்கான இறுதித் தினங்களில் உங்களது எதிர்பார்ப்பு என்னவாகவுள்ளது?

கொழும்பு மாவட்ட வாக்காளர்கள் நாங்கள் போட்டியிடும் எமது இன்றைய பொதுச்சின்னமாகிய யானைச்சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இதேயிடத்தில், யானைக்கு வாக்களித்து விட்டு வேலை முடிந்துவிட்டது என வாக்காளர்கள் நினைக்காது தங்களது மூன்று விருப்பு வாக்குகளில் முதல் இரண்டு விருப்பு வாக்குகளை எமது இலக்கங்களுக்கு (8,9) வழங்க வேண்டும்.

இதில் விருப்பு வாக்கு வழங்குவதில் அசமந்தமாக வாக்காளர்கள் இருந்தால் யானை வெற்றிபெற்று வரும். ஆனால் அதில் நாம் இருக்க மாட்டோம். இதனை ஓர் அபாய எதிர்வுகூறலாகக் கருதி விருப்பு வாக்குகளை மக்கள் அளிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வடக்குக் கிழக்கு அரசியலில் தொடர்பினை பேணி வந்தீர்கள். பாராளுமன்றத் தேர்தல்களில் நீங்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்றீர்கள். அவ்வாறான நிலையில் வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடனான உங்கள் உறவு எப்படியாக அமைகின்றது?

வடக்குக் கிழக்கில் தமிழ்த் தேசிய வேட்பாளர்கள் வெற்றி பெறவேண்டும். அது கட்டாயமானது. கூட்டமைப்பா அல்லது மக்கள் முன்னணியா என்பதை மக்கள் முடிவு செய்வர். வடக்குக் கிழக்கில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட எந்தவொரு பெருந்தேசியவாதக் கட்சிக்கும் வாக்களிப்பதில் எமக்கு உடன்பாடு இல்லை. நான் ஏற்கனவே கூறியது போல் தென்னிலங்கையில் நிலவும் சனத்தொகை எண்ணிக்கை காரணமாகவும், நிலவும் தேர்தல் சட்டம் காரணமாகவும் நாம் ஐக்கிய தேசிய முன்னணியுடன் உடன்பாடு செய்து கொண்டு போட்டியிடுகின்றோம்.

இது தேர்தல் உடன்பாடே தவிர, கொள்கை உடன்பாடு கிடையாது. எனவே வடகிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். தென்னிலங்கையில் தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு என்ற எங்களது உறுதியான நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். இதில் குழப்பமோ மாற்றமோ முரண்பாடோ எதுவும் கிடையாது.

தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு பற்றி கூறினீர்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் புதிதாக நீங்கள் உருவாக்கிய தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு என்ன வகிபாகத்தினைக் கொண்டுள்ளது?

தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற வகையில் நாம் கொழும்பு, நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தனபுரி, கம்பகா ஆகிய ஆறு மாவட்டங்களில் ஒன்பது வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளோம். நாங்கள் வெற்றிபெற்று எதிர்வரும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ஓர் பலமிக்க அணியாக அமைச்சரவையிலும் இடம்பெற்று செயற்படுவோம்.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அமைந்தால் அதில் அமைச்சரவையில் இடம்பெறுவீர்கள் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றீர்கள். உண்மையில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்களில் கொழும்பில் இருந்து குரல்கொடுக்கும் நீங்கள் அமைச்சரவைப் பொறுப்பினை பெற்றுக்கொண்டால் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த வகையில் காத்திரமாகப் பணியாற்ற முடியும்? அமைச்சரவை அரசாங்கத்திற்குக் கூட்டுப் பொறுப்புடையது என்ற வகையில் உங்கள் பயணத்தில் மட்டுப்பாடுகள் நிலவாதா

இதில் எந்தக் குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. வரலாறு முழுக்கவே நான் எனது கொள்கை நிலைப்பாடுகளுடன் ஒரு தெளிவான நேர்கோட்டிலேயே முன்செல்கின்றேன். அதில் இரண்டு பிரதான கொள்கைகள் உள்ளன.

1) தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளையும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் தேசிய, சர்வதேச ரீதியில் முன்னெடுத்து நிமிர்ந்து நிற்பது.

2) ஒன்றுபட்ட இலங்கை என்ற கொள்கை அடிப்படையில் சிங்கள தேசிய இனத்துடன் சமத்துவத்துடன் கூடிய ஐக்கியத்தையும் சகவாழ்வையும் முன்னெடுத்து அதற்கான வழிவகைகளைத் தேடுவது.

ஆகவே இந்தப் பிரதான இரு அடிப்படைகளுடையதாகவே நான் அரசாங்கத்திற்குள் இருக்கப் போகின்றேன். ஆருடம் கூறமுடியாது. பொறுத்திருந்து பாருங்கள்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியதில் தமிழ் தலைமைகளிடத்தில் உங்கள் பங்கு பிரதானமானது. இந்த நிலையில் மைத்திரிபால பதவியேற்பின் பின்னர் அவரது நடவடிக்கைகளை தற்போதைய தேர்தல் பிரசார அரசியலுக்கு அப்பால் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் இந்தத் தென்னிலங்கை மாற்றம் தொடர்பிலோ அல்லது மைத்திரி, ரணில், சந்திரிக்கா ஆகியோர் தொடர்பிலோ அதீத நம்பிக்கையினையும் எதிர்பார்ப்பினையும் வைத்திருக்கவில்லை. நாங்கள் உடனடியாக எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டு பாலும் தேனும் ஓடும் என ஒருபோதும் தென்னிலங்கையிலோ அல்லது வடக்குக் கிழக்கு மக்களிடத்திலோ போலி நம்பிக்கையினை ஏற்படுத்தவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் காலப் பகுதிய எனது தேர்தல் கருத்துக்களை ஊடகங்களில் தட்டிப் பாருங்கள், இது புரியும். ஏனைய தமிழ் அரசியல் தலைவர்களோ கட்சிகளோ இத்தகைய நம்பிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.

மைத்திரியின் ஆட்சியில் சில மாற்றங்கள் முன்னேற்றகரமாக உள்ளன. அதை மறுக்க முடியாது. ஆனால் இவற்றை நாங்கள் ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொள்ளவும் முடியாது.

நான் தான் சொன்னேனே... இவர்கள் எவர்கள் தொடர்பாகவும் எனக்கு அதீத நம்பிக்கை எதுவும் கிடையாது என. இதற்காக இவர்களுடன் அரசியல் கலந்துரையாடல்களை முற்று முழுதாக விட்டுவிட்டு மீண்டும் ஆயுத அல்லது ஜனநாயக கெரில்லா யுத்தத்தினை ஆரம்பிக்கவும் முடியாது. ஆயுதப் போராட்டம் தோல்வி, பின்னடைவினைக் கண்டுள்ள இவ் யுகத்தில் நாம் படிப்படியாகத்தான் முன்னேற முடியும். அதற்காக நகர்ந்து கொண்டிருக்கின்றோம்.

மகிந்தவின் தற்போதைய அரசியல் நகர்வுகளை எந்தவகையில் விமர்சனம் செய்கின்றீர்கள்? அவருக்கான எதிர்கால அரசியல் தளம் சாதகமாக அமையும் சாத்தியக் கூறுகள் தென்படுகின்றனவா?

உண்மையிலேயே சாம்பலில் இருந்து எழுந்துவரும் பீனிக்ஸ் பறவையாகத்தான் தன்னைக் காட்டிக்கொள்ள மகிந்த முனைகின்றார். விரக்தியடையாமல் சளைக்காமல் நாளை நமதே எனத் தொடர்ச்சியாகப் போராடிவரும் ஓர் போராளி என்ற அடிப்படையில் மகிந்தவின் இந்த முயற்சியினை நான் மதிக்கின்றேன்.

ஆனால், அது அவ்வளவு தான். மகிந்தவின் இம் முயற்சிகள் கைகூடப்போவதில்லை. எவ்வளவுதான் இடைவிடாமல் உழைத்தாலும் உழைப்பு வெற்றி பெற புறச்சூழலும் அகச் சூழலும் கூடி வரவேண்டும். மேலும், அடிப்படையில் நீதி உள்ள நேர்மையான முயற்சிகளே வெற்றி பெறும். மகிந்தவிடம் இது கிடையாது. ஆகவே அவர் தோற்றுப்போவார். அவரது ஆளணி அதிக பட்சமாக ஓர் 50 ஆசனங்களைக் கைப்பற்றலாம். நான் அறிந்த வகையில் மகிந்த பாராளுமன்றம் வந்து ஓர் எதிரணி உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்யமாட்டார். கடைசியாக நான் இங்கு கூறியது ஒரு ஆரூடம் தான்.

கடந்த பாராளுமன்றம் கட்சித்தாவல்களுக்கு பெரிதும் பேர்போனதாகக் காணப்பட்டது. இம் முறை கட்சிகள், தலைமை ரீதியில் பிளவுபாடுகளுடனேயே தேர்தலில் போட்டியிடுகின்றன. மகிந்தமைத்திரி போட்டியினைக் குறிப்பிடலாம். இந்நிலையில் இம்முறை பாராளுமன்றம் எவ்வாறாக அமையும் என எதிர்பார்க்கிறீர்கள்? கட்சித் தாவல்கள் சகஜமானதொன்றாக அமையுமா

மகிந்தவுடன் வெற்றிபெறும் உறுப்பினர்களில் கணிசமானோர் வெற்றி பெற்றவுடன் தங்களது விசுவாசத்தினை மைத்திரிக்கு வெளிப்படுத்துவர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக செயற்படுவோரை மகிந்தவின் விசுவாசிகள் எனலாம். இவ்வாறாகச் செயற்படுவோரின் நோக்கம், மகிந்தவைப் பயன்படுத்தி பாராளுமன்றத்திற்குள் நுழைவது தான். இவ்வாறானவர்கள் தமது நோக்கம் நிறைவேறிவிட மகிந்தவை பிரிவர். ஆகவே மகிந்தா செல்லாக் காசாகிவிடுவார். ஆனால், மைத்திரி அடுத்த 5 வருடங்களுக்கும் ஜனாதிபதி தான். அது மட்டுமல்ல சு.கவின் தலைவரும் கூட. ஆகவே சுவாரஸ்சியமான கட்சித்தாவல்கள் எல்லாம் அடுத்துவரும் பாராளுமன்றத்தில் அவதானிக்கலாம்.

நடைபெற்ற தேர்தல் பிரசாரங்கள் இடையே அரசியல் தீர்வு தொடர்பில் வடக்குத் தெற்கில் எதிரும் புதிருமான தேர்தல் விஞ்ஞாபனங்கள் முன்வைக்கப்பட்டு பிரசாரங்கள் நடைபெற்றன. சமஸ்டி, இரு தேசம் ஒருநாடு, ஒற்றையாட்சி என பலதரப்பட்ட வாதங்கள் தொடர்கின்றன. இந்த நிலையில் உங்களது தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு என்ன நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது?  

வடக்குக் கிழக்கிலே இருந்து ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஸ்டிக் கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும், இரு தேசம் ஒரு நாடு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுவதற்கும் நியாயமான அடிப்படைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல,  கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி வரலாறு முழுக்க பெடரல் கட்சி என்றே அறியப்பட்டு வந்துள்ளது. எனவே ஏதோ புதியது கூறப்பட்டு விட்டதாகக் காட்டுவதற்கு மகிந்த அணி முயல்கின்றது. அதன் ஒரு பிரதிபலிப்பினை ஐக்கிய தேசியக் கட்சியும் காட்டுகின்றது. அங்கே சமஸ்டி என்றால் இங்கே ஒற்றையாட்சி. ஆனால், அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு உலகம் உத்தரவாதம் தருகின்றது.

சட்டரீதியாக பகிரப்பட்ட அதிகாரங்களை மீண்டும் திருப்பி எடுக்க முடியாது. கறந்த பால் முலை ஏற முடியாது. எதிர்வரும் அரசாங்கம், ரணில் தலைமையில் அமைந்தாலும் சரி ஒருவேளை எங்கள் கணிப்புத் தவறி மகிந்த தலைமையில் அரசாங்கம் அமைந்தாலும் சரி. இது தான் 'பொட்டம் லைன்' என்று சொல்லக்கூடிய குறைந்த பட்ச நிலைப்பாடு. இதில் கைவைப்பதற்கு தென்னிலங்கை அரசியல் தலைமைகள் முயற்சிக்குமானால் அவர்கள் உலகின் கடுமையான விரோதத்தினை சந்திக்க வேண்டி வரும். அப்படியானால் அது இலங்கைத் தீவை இரண்டாகப் பிளவுபடுத்துவதில் தான் போய் முடியும். கொடூரங்கள் நடந்து முடிந்து விட்டன. வரலாறு முழுவதும் வாக்குறுதிகள் தந்து ஏமாற்றி நாட்டை சீரழித்து விட்டார்கள். இனிமேலும் உலக சமூதாயம் பொறுமை காக்காது என்ற பட்டறிவு தென்னிலங்கை தலைவர்களிடம் இருக்கின்றது என நம்புகின்றேன்.

இம் முறைய தேர்தல் களம் பற்றி புலம் பெயர் தமிழ்த் தரப்புக்களுக்கு என்ன கூற விளைகின்றீர்கள்

நடைபெறப்போவது ஓர் தீர்க்கமான தேர்தல். இங்கே பேசப்படும் உடன் படிக்கைகள், சமஸ்டி ஒற்றையாட்சி ஆகிய சொல்லாடல்களை எல்லாம் பெரிதும் கணக்கில் எடுக்காதீர்கள். இங்கு வரப்போகின்ற ஆட்சியின் நிறம் பச்சையோ நீலமோ அல்லது எதுவாக இருந்தாலும் கூட, அந்த அமைப்புக்குள்ளே நமது தமிழர் அணி பலமாக இருந்தால் தான் இங்கே எதுவும் நடக்கும். எதுவும் கிடைக்கும். இது எனது பட்டறிவு சொல்லும் உண்மை. ஆகவே வட கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளையும் வேட்பாளர்களையும் ஆதரியுங்கள்.

தென்னிலங்கையில் போட்டியிடும் தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரியுங்கள். நாளைய கட்டத்தில் நாம் ஒன்றுபட்ட அணியாக செயலாற்றி, இலங்கையில் வாழும் உங்கள் உறவுகளிடம் அணிதிரண்டு வாக்களிக்கச் சொல்லுங்கள்.   

இவ்வாறு கொழும்பு மாவட்ட வேட்பாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=5fbc4242-79a3-4f15-b7b7-d610cd1e0cf7

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வாழ் மக்களே உங்கள் பொன்னான வாக்குகளை மனோகணேசனுக்கு நேராக போடுங்கள்.

தமிழ் தலைவர்கள் வாய் திறக்க பயந்து இருந்த நேரம் தனது வாழ்வை பற்றி சிறிதும் யோசிக்காது எமக்காக குரல் கொடுத்தவரை 

நன்றிக் கடனாக இம்முறை திரு.மனோகணேசனை பெருவெற்றியடையச் செய்யுங்கள்.

இனிவரும் காலங்களிலும் எமது இனத்துக்காக நிச்சயம் குரல் கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசன் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் கொழும்பு வாழ் தமிழர்களின் வாக்குக்களைப் பிரிப்பதற்காகவே சங்கரியார் கொழும்பில் நிற்கின்றாராம் என்று ஒரு செய்தி உலாவுகின்றது.

அதையும் மீறி அனைவரும் மனோ கணேசனுக்குத் தங்கள் விருப்பு வாக்குக்களை அள்ளி வழங்கி அவரை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

வணக்கம் மனோ கணேசன் அவர்களே! தங்கள் பெருந்தன்மைக்கு வாழ்த்துக்கள்.தாங்கள் போட்டியிடுவது தெரிந்தும் தங்கள் பகுதியில் போட்டியிட வந்த ஆனந்தமானவரை மன்னித்தது போன்ற தோற்றப்பாட்டுடன் வெளியிடப்பட்ட செவ்வியானது மிகவும் பெருந்தன்மை மிக்கது.தாங்கள் வெற்றி பெற்று தங்கள் மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.இதே வேளை கொழும்பில் தேர்த்தல் மனு தாக்கல் செய்த ஆனந்தமானவரை உடனடியாகக் கண்டித்திருக்க வேண்டும் அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும்,இதை சம் சும் குழுமம் செய்யத்தவறி விட்டது.கொழும்பு வாழ் அனைத்து தமிழர்களும் மனோ கணேசன் அவர்களுக்கு தங்கள் பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி அவரின் மக்கள் பணி தொடர வழி சமைத்து கொடுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி போன மாகாணசபை தேர்தலோடு கூட்டமைப்பை விட்டுப் போயிட்டார்.

கூட்டணி அவரின் கட்டுப் பாட்டில் இருக்கும் கட்சி. தமிழரசு கட்சியில் அவர் இல்லை.

இதில் எங்கே இருந்து சம் சும் சங்கரியை நீக்க முடியும்.

செம விளக்கம் :)

 

தேர்தலுக்கு முன்பே மனோவுடன் பேசி சுமந்திரன் ஒரு அண்டஸ்டாண்டிங்க்கு வந்தது செய்தி வந்ததே?

பழைய செய்தியளத்தான் படிபியள்/இணைப்பியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரி போன மாகாணசபை தேர்தலோடு கூட்டமைப்பை விட்டுப் போயிட்டார்.

கூட்டணி அவரின் கட்டுப் பாட்டில் இருக்கும் கட்சி. தமிழரசு கட்சியில் அவர் இல்லை.

இதில் எங்கே இருந்து சம் சும் சங்கரியை நீக்க முடியும்.

செம விளக்கம் :)

 

தேர்தலுக்கு முன்பே மனோவுடன் பேசி சுமந்திரன் ஒரு அண்டஸ்டாண்டிங்க்கு வந்தது செய்தி வந்ததே?

பழைய செய்தியளத்தான் படிபியள்/இணைப்பியளோ?

சங்கரி ஐயா அவர்கள் தான் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாக எங்கும் அறிவித்ததாக அறியவில்லை.
அவருக்கு இந்த முறை கூட்டமைப்பில் இடம் கிடைக்காததால் அவர் தனது  கட்சியில் கொழும்பில் நிற்பது உண்மை.
ஆனால் அவரின் யாழ் மாவட்ட ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை வேட்பாளர்கள் அனைவரும் கூட்டமைப்பிற்காகவே யாழில் வேலை செய்கின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சில வீராங்கனைகள் கொழும்பில் கூட்டமைப்பு போட்டியிட வேண்டும் என்று மனப்பால் குடித்தது ஞாபகத்தில் வருகிறது. நல்ல காலம் போட்டியிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு வாழ் மக்களே உங்கள் பொன்னான வாக்குகளை மனோகணேசனுக்கு நேராக போடுங்கள்.

தமிழ் தலைவர்கள் வாய் திறக்க பயந்து இருந்த நேரம் தனது வாழ்வை பற்றி சிறிதும் யோசிக்காது எமக்காக குரல் கொடுத்தவரை 

நன்றிக் கடனாக இம்முறை திரு.மனோகணேசனை பெருவெற்றியடையச் செய்யுங்கள்.

இனிவரும் காலங்களிலும் எமது இனத்துக்காக நிச்சயம் குரல் கொடுப்பார்.

உண்மை

தாயகத்தமிழருக்கு தேவை இவர் போன்ற ஒருத்தர் தான்..

கொழும்பிலிருந்து அவர் எமக்காக ஊரல் கொடுக்கின்றார்

நாம் அவருக்கு காலை வாருகின்றோம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.