Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் 5 ஜோடிகளுக்கு வெளிநாட்டு தமிழா் என்ன செய்தார்? பாருங்கள் இதை……

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Wading1ஐரோப்பிய நாடொன்றில் இருந்து விடுமுறையில் வந்தவர் முன்னுதாரணமான காரியமொன்று செய்துள்ளார்.

வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஜோடிக்கு இன்று திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது திருமணநாளை முன்னிட்டே இந்த முன்னுதாரணமான காரியம் செய்துள்ளார்.
Wading-011

இன்று புலம் பெயா் நாடுகளில் பல வாழும் 100 வீதத்தில் நுாறு வீதத்தில் 95 வீதமானவா்கள் தமது குடும்பம் தமது உறவுகள் என வாழும் நிலையில் அன்னலவாக 5 வீதத்தினா் இப்படியான நல் உள்ளங்களும் இருப்பது மனதிற்கு ஆறுதல் எனக் கூறும் தாயக மக்கள்.

வெளிநாடு சென்றது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவாகளும் 5 வீதத்தினரே ஏனையவா்கள் எல்லாம் பாதிக்கப் பட்டவா்களின் கதையையே வெளிநாடுகளில் கூறி வதிவிடம் பெறுவது வழமை இதை யாரும் மறுப்பாா்களா இல்லை ஆனால் இதை நாம் கூறினால் அவா்கள் செசய்ததற்கு அனுபவிக்கிறாா்கள் என்பாா்கள் பறவாயில்லை மா இடிக்கும் ராசாத்தி அக்கா மற்றும் விறகு முறிக்கும் கந்தையாவின் மகன் துவக்கு பிடிக்காவிட்டால் பலருக்கு வெளிநாடு பகல் கனவு.

ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய மன ஆறுதலுடன் வீரத் தலைவனின் வழி நடத்தலில் வாழ்ந்த பெருமையுடன் தாயக ஏழையின் பயணம் அமையட்டும்…….

http://www.todayjaffna.com/19266

வசதி படைத்தவனும் பணக்காரனுக்குமான உலகமாக வீறு நடை போடும் உலகு என்றோ ஒரு நாள் ஓய்வுக்கு வருவது உறுதி அன்று இந்த ஏழையின் மதிப்பும் மகிமையையும் சகலரும் நன்கறிவா் குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி மங்காதாம் அது இன்று பொய்யாகலாம் வரலாற்றில் என்றும் பொய்யாகாதாம் என கூறினாா் முல்லைத்தீவின் தம்பித்துரை

இந்த ஐந்து பேருக்கும் திருமணம் செய்த புண்ணியவான் போன்று வெளிநாட்டு நம்மட உறவுகள் முன்வந்தால் நல்லது காத்திருப்போம்……

 

சுவிஸ் நாதன் கடை உரிமையாளர்   தான் என்று நினைக்கிறேன்.  நல்ல  விசயம்

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் தடல்புடலா முடிஞ்சுது. அது நல்லது தான். அதோட வாழ்க்கை முடிவதில்லையே. எனித்தானே மிச்ச சொச்சம். அதையும் இந்த 5 சோடிகளுக்கு திருமணம் செய்து வைச்சவர் கவனிப்பாரா..?! தனி ஒருவன் ஏழ்மையில் இருந்ததை.. இப்ப இரண்டு பேராக்கி.. அதை இன்னும் ஒரு வருடத்தில் 3 பேராக்கி... இப்படியே பெருக்கிக் கிட்டு போறதிலும்.. தடல்புடலற்ற திருமணங்களோடு.. ஒரு நிதிய வைப்பை வைத்து... இவர்களின் திருமணத்துக்குப் பிந்தைய வாழ்வும் சிறக்கச் செய்வது தான் நன்மை..! :rolleyes:

சபா.......................திருமணம் எண்டாலே இந்தாளுக்கு பத்திக்கிட்டுவருகுது

அப்படி என்னதான் நடந்திருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தலைமையில் 1500 சோடிகளுக்கு திருமணம்.. ஜெ தலைமையில் 5000 சோடிகளுக்கு திருமணம்.. அஷ்ரப் தலைமையில் புத்தளத்தில் 500 சோடிகளுக்கு திருமணம்... விஜய் தலைமையில் 100 பேருக்கு திருமணம்.. விசால் தலைமையில் திருமணம்..  சூர்யா தலைமையில் திருமணம்.. இப்படி.. சுப்பர் டூப்பர் திருமணங்களை எல்லாம் பார்த்ததன் விளைவு தான். எடுபிடி திருமணங்கள் செய்திகளை அலங்கரிக்க சோக்கா இருக்கும். ஒரு நாள் கூத்தை முடிச்சிட்டு அவையவை தங்களுக்குரிய விளம்பரங்களை தேடிக்கிட்டு போயிடுவினம். 

திருமணம் என்ற அந்த பந்தத்தின் தொடர்ச்சியாக வாழ்க்கையில் வர இருக்கும் மாறுதல்களை சமாளிக்க முடியாமல் திணறும் போது இந்த தம்பதிகளுக்கு இந்த தலைமைதாங்கிகள் உதவுவினமோ..??!

நாங்கள் யதார்த்ததையும்.. குடும்பங்களின்.. சமூகத்தின் நீண்ட கால நலன்களையும் பற்றி சிந்திக்கிறம். நீங்கள் குறுகிய காலத்தோட நிற்குறியள்.. இதுதான் சேவியர் நடக்குது. வேற எதுவும் அல்ல.

அத்தோடு.. நாங்கள் திருமணங்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துவருவாக்கத்தை மறுதலிக்கிறம். திருமணங்கள் குறுகிய நோக்கில் அன்றி நீண்ட நோக்கில் நோக்கப்பட்டு.. அதன் அடிப்படையில் நடத்தி வைக்கப்படனும். ஏனெனில்.. குடும்பங்கள் தான் எமது தாயக சமூக அமைப்பின் அடிப்படை இயங்கு அலகு ஆகும். அது பலவீனப்படுவது சமூகத்தை.. இனத்தை பலவீனப்படுத்தும். tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் காசில் திருமணம் செய்ய முடியாதவை எப்படி குடும்ப வாழ்வை நகர்த்த போகினம்? 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அத்தோடு.. நாங்கள் திருமணங்களுக்கு எதிரானவர்கள் என்ற கருத்துவருவாக்கத்தை மறுதலிக்கிறம். திருமணங்கள் குறுகிய நோக்கில் அன்றி நீண்ட நோக்கில் நோக்கப்பட்டு.. அதன் அடிப்படையில் நடத்தி வைக்கப்படனும். ஏனெனில்.. குடும்பங்கள் தான் எமது தாயக சமூக அமைப்பின் அடிப்படை இயங்கு அலகு ஆகும். அது பலவீனப்படுவது சமூகத்தை.. இனத்தை பலவீனப்படுத்தும்tw_blush::rolleyes:

வரவேற்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இவர்களுக்கான வாழ்வாதாரத் தேடலுக்கான வளங்களையும் ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற  செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள்  வேறு ஆர்வமுள்ளவர்களையும் இணைத்து ஒருவலுவான செயற்றிட்டத்தை  முன்னெடுக்க முயற்சித்தால்  மேலும் நன்மைபயக்குமல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.