Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்! - இந்திய ஊடகத்திடம் உருத்திரகுமரன் ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார்.  இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.  இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என கருத்துக்கள் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து தமிழர்களை காப்பாற்றவே அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட போர்க் குற்றவாளிதான் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரகுமரன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் உண்டு என கருத்துக்கள் நிலவி வருகிறது. அது முற்றிலும் தவறான கருத்தாகும். இலங்கை அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருந்து தமிழர்களை காப்பாற்றவே அவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   

ஆயுதப் போராட்டங்களின் போது ஒரு சில குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கலாம், அதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட மனித உரிமை மீறல்களோடு விடுதலைப் புலிகளையும் இணைத்து பார்க்க கூடாது. இன்று இலங்கையில் ஜனாதிபதி பதவியில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன கூட போர்க் குற்றவாளிதான், மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, கடைசி 2 வாரங்களில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தவர் தான் இந்த மைத்திரிபால சிறிசேன.

இவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் அதிகளவிலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுமட்டுமல்லாது, இலங்கையில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலின் போது நடத்தப்பட்ட பிரச்சார மேடைகளில் சிங்களவர் மத்தியில் உரையாற்றிய சிறிசேன, தான் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான் அதிகளவான விடுதலைப் புலிகள் கொலை செய்யப்பட்டதாக கூறியிருக்கிறார். எனவே சிறிசேனவும் போர்க் குற்றவாளிதான் எனக் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=140783&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மஹிந்த மட்டுமல்ல மைத்திரியும் போர்க்குற்றவாளிதான்! - இந்திய ஊடகத்திடம் உருத்திரகுமரன் .

நாங்கள் இதை யாழ்களத்திலை ஏற்கனவே சொல்லீட்டம்.

கதையோடை கதையாய் இன்னுமொரு விசயத்தையும் சொல்லோணும்...

சிங்களவன் செய்தது பயங்கரவாதிகளை அழிக்கிறம் என்ற பெயரில் இன அழிப்பு செய்தது.
புலிகள் சிங்கள இராணுவத்திற்கும் சிங்கள அரசிற்கும் எதிராக போராடினார்களே தவிர.......சிங்கள மக்களை தேடி அழிக்கவில்லை. கிராமம் கிராமமாக நுழைந்து இன அழிப்பு செய்யவில்லை. சிங்கள மக்கள் கூடும் இடம் பார்த்து அழிவுகளை நடத்தவில்லை.

பேய்க்ககாய் ,

என்னமா வாயலை வடை சுடுகின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைபோல கையாலே சுட்டு 
ஊருக்கு வடை அன்னதானம் வழங்கும் திறமை 
எல்லோருக்கும் வாய்க்க வேண்டுமே ? 

அவர் கையாலே சுட்டால்தான் ......
அந்த வடையை எண்ணெய் கொதிக்க முன்பு சுட்டார் 
இந்த வடையை கவுட்டு வைச்சு சுட்டார் என்று 
எங்கள் வாழ்கையை ஓட்டாலம் .... என்றால் ?
இந்தாள்  வாயாலேயே சுட்டுக்கொண்டு இருக்கிறது .......

எங்கட நிலைமையை இந்தாள் எப்போதான் புரியுமோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.