Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை அரணாக வைத்துக் கொண்டு கொல்ல காரணமாக இருந்தவர் பிரபாகரன்: சூட்டை கிளப்பும் இளங்கோவன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை: தமிழர்களை அரணாக வைத்துக் கொண்டு, அவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தவர் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் என்று கூறி சூட்டை கிளப்பி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.

1.jpg

மறைந்த முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகளை நிறுத்திய மத்திய அரசை கண்டித்தும், அந்த உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, ''நாட்டுக்கு நல்ல திட்டங்களை கொடுத்தவர்கள் என்ற முறையிலும், நாட்டின் உயர்வுக்கு வழிவகுத்தவர்கள் என்ற முறையிலும் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தபால் தலைகளை தற்போது மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு நிறுத்தியுள்ளது. அவர்களின் புகழை மறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி ஒரு நடவடிக்கையை பா.ஜ.க. அரசு மேற்கொண்டுள்ளது. அடுத்து ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை அகற்றி விட்டு, தன்னுடைய படத்தை போடச்சொன்னாலும் சொல்லுவார் இந்த மோடி.

2.jpg

பிரிவினைவாதத்தையும், பயங்கரவாதத்தையும் இந்த நாட்டில் அனுமதிக்க மாட்டோம் எனச்சொல்லி, அதனாலே தங்கள் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்த இவர்களது தபால் தலைகளை நிறுத்திவிட்டு, காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தபால் தலை வெளியிடப்போகிறார்களா?. ஏற்கனவே கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி தபால் தலைகள் நிறுத்தப்பட்டதை உடனடியாக திரும்ப பெறுவதோடு, மீண்டும் தபால் தலைகளை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டங்களில் நாங்கள் ஈடுபடுவோம்" என்றார் ஆவேசமாக.

அதன்பின் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி சர்வதேச விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும். எப்படி ராஜபக்சே தமிழர்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தாரோ, அதேபோல் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனும் தமிழ் மக்களை அரணாக வைத்துக் கொண்டு, அவர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தார். எனவே, இதைப்பற்றி எல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். மோடி தேர்தல் நேரத்தில் 100க்கும் அதிகமான வாக்குறுதிகள் தந்தார். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரும் என்றார். இதுவரை அவர் யாருக்கும் எதுவும் தரவில்லை. பல இடங்களில் மோடி மீது வழக்குபோட தயாராக இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை தனிபெரும் கட்சியாக ஆட்சியமைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். முடியவில்லை என்றால் மேலிட வழிகாட்டுதலின் பேரில் கூட்டணி சேருவோம். எங்களுடைய கூட்டணி யாரோடு இருக்கும் என சொல்ல முடியாது. கூட்டணி இருக்குமா? இல்லையா என்பதே தேர்தல் நேரத்தில்தான் தெரியும். அதேநேரத்தில், கூட்டணி அமையும் என்று சொன்னால் எங்களுடைய கொள்கைகளை ஏற்கும் கட்சிகளோடுதான். மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். இலவச கல்வி அளிக்க வேண்டும் போன்ற எங்கள் கொள்கைகளை ஏற்பவர்களுடன் கூட்டணி அமைப்போம்.

தமிழகத்தில் விதி எண் 110க்கு 144 போட வேண்டும் என பலமுறை சொல்லியிருக்கிறேன். எதற்கெடுத்தாலும் 110 விதியின் கீழ் பேசி தப்பித்துக்கொள்கிறார் ஜெயலலிதா. அதோடு இருக்கின்ற மற்ற அமைச்சர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. அறிவிப்பின் மீது விவாதங்கள் நடக்க சாத்தியக்கூறும் இல்லாமல் போய்விடுகிறது. இதுதான் அ.தி.மு.க. அரசின் செயல்பாடு. பல்லடத்தில் இன்ஸ்பெக்டரின் பைக்கையே திருடி இருக்கிறார்கள். இதுதான் தமிழகத்தில் இன்று நிலவும் சட்டம் ஒழுங்கின் நிலை.

சகாயத்துக்கு தமிழக அரசு முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளை ஹைதராபாத் அல்லது பெங்களூருவில் டி.என்.ஏ. டெஸ்ட் எடுக்க வேண்டும். தமிழகத்தில் எடுக்கக் கூடாது. பா.ஜ.க., அ.தி.மு.க. இடையே கள்ள உறவு இருக்கிறது என ஏற்கனவே நான் சொன்னேன். கள்ள உறவு தொடர்கிறது. வாசன் ஐ கேரின் பினாமி என சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதாக நான் நம்பவில்லை. வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். சட்டப்படி அதை சிதம்பரமும், அவரது மகனும் எதிர்கொள்வார்கள்.

இந்திராகாந்தி தபால் தலை நிறுத்துவது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியது பற்றி கேட்கிறீர்கள். பொன்ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் அனுபவமும் கிடையாது. அரசியல் வரலாறும் தெரியாது. இந்திராகாந்தி இல்லை என்றால் பாகிஸ்தான் போரில் இந்தியா வென்றிருக்க முடியுமா? வாலாட்டிய பாகிஸ்தானின் வாலை வெட்டியதோடு, அந்த நாட்டையே பிளவுபடுத்திய பெருமை இந்திராகாந்திக்கு உண்டு. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியவில்லை என்றால் வாஜ்பாயிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.

ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

 

http://www.vikatan.com/news/article.php?aid=52600&utm_source=vuukle&utm_medium=referral

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்

மத்திய அரசைக்கண்டிக்கும் செய்தியில் கூட

தலைவர் பிரபாகரனது பெயரைப்பாவித்தால் தான் செய்தி விற்பனையாகும் என்றநிலை...:(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'அப்பாவை சுட வேண்டாம்- கதறி அழுத மகன்' என்று தலைப்பு போடும் செய்திகளை விட 'பிரபாகரன்' பெயரை போட்ட திரிகளுக்குத் தான் தமிழ் தேசிய தூண்களாகிய நீங்களே வந்து எட்டிப்பார்க்கின்றீர்கள் எனும் போது அவர்களும் வேறு என்ன செய்வார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்க் கூட்டணி அமைவதைப் பொறுத்து இவர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வார்கள்.
நாளைக்கே சீமானுடன் கூட்டுச் சேர்ந்து பிரபாகரனின் புகழ் பாடவும் இவர்கள் தயார்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்லவாறார் என்றால் ...
இலங்கையில் தமிழர் இருந்தால்தான் ... அவர்கள் படுகொலை செய்தார்களாம்.

இலங்கையில் தமிழர் இல்லது போயிருந்தால் 
பிரபாகரனும் இருந்திருக்க மாட்டார்.


அணை அலை பின்பு அதனால்தான் வந்திருக்கிறது.

ஏழைகளுக்கு உணவு இல்லை என்றால் .....
அவர்களுக்கு வயிறு இருப்பதால்தான் பசிக்கிறது என்று சொன்னாலும் சொல்லுவார். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளங்கோவன் ஒரு தன்னினம் மறந்த கேவலம் கெட்ட அரசியல்வாதி. இவர் இருக்கும் கட்சிசார்ந்த முக்கிய பிரமுகர்களே ஒதுங்கிவிட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.