Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாணம் எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது - சி.வி.விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடமாகாணம் எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு சேதனப் பசளைப் பிரயோகத்தினை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சி இடம்பெற்றது. அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில், 
 
 
தென்னைப் பயிர்ச்செய்கை சபையானது தெங்குப் பயிர்ச் செய்கையை ஊக்குவிக்க பல திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது. 
 
இன்றைய இந்த நிகழ்வும் அப்பேர்ப்பட்டதே. அதாவது தெங்குப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுபவர்களிடையே சேதனப் பசளைப் பிரயோகத்தினை பிரபல்யப்படுத்தி ஊக்குவிக்கவும், மக்களிடையே சேதனப் பசளை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அசேதனப் பசளை பற்றி எச்சரிக்கை ஊட்டி அதன் பிரயோகத்தைக் குறைக்கவும் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றேன். 
 
 
 விவசாயியின் மகனான எங்கள் தற்போதைய ஜனாதிபதியும் சேதனப்பசளை பற்றிய முழு அறிவையும் பெற்றவர் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 
 
சேதனப் பசளையின் மூலப் பொருட்கள் எமக்கு அருகிலிருந்தே கிடைக்கின்றது. சேதனப் பசளையை மக்கள் தமது வீட்டிலே கிடைக்கக் கூடிய கழிவுப் பொருட்களைக் கொண்டே தயாரிக்கக் கூடியதாக இருக்கின்றது. அத்துடன் அவற்றை உச்ச பயனுள்ள வகையில் சூழலுக்கு நேசமான முறையில் முகாமைப்படுத்தவும் முடியும். 
 
அசேதனப் பசளைப் பாவிப்பைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து தற்போது எங்கணுமே மேலோங்கியுள்ளது.  அசேதனப் பசளையால் காலக்கிரமத்தில் பெருத்த நட்டங்களை நாம் எதிர்நோக்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இன்று பலவிதமான செயற்றிட்டங்களை வெளியில் இருந்து வந்து பலர் வடமாகாணத்திற்கு நன்மை தரும் என்று அறிமுகப்படுத்தப் பார்க்கின்றார்கள். ஆனால் அவற்றின் நீண்ட காலப் பாதிப்பைப் பற்றி எமது அலுவலர்கள் முற்றாக ஆராய்ந்தே எமக்கு அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளைத் தரவேண்டும். 
 
அலுவலர்களின் கையில் வைத்தும் பையில் வைத்தும் தமது காரியத்தை முடிக்கப் பலர் எத்தனித்து வருகின்றார்கள். தூரகால அனுசரணை அற்ற பாதிப்பைப் பற்றித் தெரிந்தும் எமது அலுவலர்கள் சிலர் குறுகிய நன்மைக்காக, சுய நன்மைக்காக இப்பேர்ப்பட்ட செயற்றிட்டங்களுக்கு இடமளித்தால் காலக்கிரமத்தில் அவர்களின் வருங்கால சந்ததியினரே அவற்றால் அவதிக்குள்ளாவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
 
அசேதனப் பசளைப் பிரயோகத்தினால் எமது சமூகம் எதிர் கொள்ளக் கூடிய சவால்களை நாங்கள் அறிந்து தடுக்க முன்வர வேண்டும். அசேதனப் பசளைக் கம்பெனிகள் தர முன்வரும் “சந்தோஷங்களுக்கு” நாம் இடமளித்தல் ஆகாது. 
 
தெங்குப் பொருள் உற்பத்தி அலகில் எதிர் கொள்ளப்படும் அல்லது எதிர் கொள்ளக் கூடிய பாதிப்புக்களை மக்களுக்கு அடையாளப்படுத்திக் காட்டி அவற்றை விமர்சித்து அசேதனப் பசளைப் பாவிப்பால் ஏற்படக் கூடிய நேரிடைப் பாதிப்புக்களை விளங்கவைத்து எமது பயிர்ச்செய்கை முறைகளில் நன் மாற்றங்களை ஏற்படுத்துவதே இன்றைய இந்த நிகழ்வின் நோக்கு. 
 
சேதனப் பசளைப் பிரயோகத்தினை மேற் கொண்டு நோயற்ற ஆரோக்கியமான மனித வாழ்விற்கு அனுசரணையான சூழலை உருவாக்குவதே இன்றைய நிகழ்வின் எதிர் பார்ப்பு. 
ஆகவே அசேதனப் பசளைப் பிரயோகத்தால் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுத்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க சேதனப் பசளையைப் பாவிப்போமாக!
 
இயற்கையாகக் கிடைக்கப் பெறும் வளங்களை உச்சப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி தெங்குப் பயிர்ச் செய்கையினை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வோமாக!
 
அசேதனப் பசளைப் பிரயோகத்தினால் எமது சமூகம் எதிர் கொள்ளக் கூடிய சவால்களைத் தடுப்போமாக!
 
எமது வடமாகாணம், வன்முறைகளில் இருந்து வன்செயல்களில் இருந்து படிப்படியாக வெளிவந்து கொண்டிருக்கின்றது. எதேச்சாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. 
 
அதே போல் மரணத்தைத் தரும், மயக்கத்தைத் தரும், ஊனங்களை உருவாக்கக் கூடிய பொருட்களைத் தீண்டாது விட்டு சுகமான சுத்தமான, சுகாதாரமான, சுபீட்சம் மிகுந்த ஒரு வருங்காலத்தை நோக்கிப் பயணிப்போம் என தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் விக்னேஸ்வரனை.... சம்சும் கும்பல், "மூழைச் சலவை" செய்து போட்டுது. tw_astonished:
இனி..தமிழினம்... உருப்பட்ட மாதிரித்தான்.
இதுக்காகத்தான்.... தமிழின எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், நேற்று... யாழ்ப்பாணம் போனவர் போலுள்ளது.:mellow:
சிங்களவனை விட, கெட்டவர்கள்... தமிழ் ----- அரசியல்வாதிகள்.

Edited by நிழலி
நீக்கம்..

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா ஒரு இடத்தில் சொல்லுறார் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி,

இன்னுமொரு இடத்தில் சொல்லுறார் இன்னும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்க முடியாது என,

தமிழர்கள் எதற்காக வன்முறையைக் கையிலெடுத்தார்கள் ஏன் வன்முறையைக் கையிலெடுத்தர்ர்கள் என்பது தனக்குப் புரியாதுள்ளதது எனவும் கூறுகிறார்.

இதுபற்றி நான் என்ன சொல்லுறது, 

ஆனால் மிஸ்ரர் பொதுசனம்  என்ன சொல்லினம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுஜனம் இவையிண்ட சாணக்கியத்தால  உச்சி குளிர்ந்து தீர்வை எதிர்பாத்துகொண்டிருக்கினம் ....இதுக்குள்ள நீங்க வேற 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.