Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்க்குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய இராணுவம்! - விசாரணைகளில் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத்தினரால் ஆயிரக்கணக்கிலான ஆயுதங்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல தமிழ் அமைப்புக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ் அமைப்புகள் குறித்த ஆயுதங்களை பயன்படுத்தி சிவில் உறுப்பினர்கள் பலரை கொலை செய்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

   

அவ்வாறு வழங்கப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் குறித்த அமைப்புகளிடம் உள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர் ரவிராஜ் கொலை மற்றும் பிரகித் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம் பல தகவல்களை வெளியிடுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு ஆயத்தமாகியுள்ளது.

எக்னெலிகொடவை கடத்தி சென்று கொலை செய்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ கேணல் ஒருவரே ரவிராஜ் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானிடம் ஒப்படைத்தவர் என தெரியவந்துள்ளது. இராணுவத்தினரால் குறித்த கேணலுக்கு கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் பல முக்கியமான கடமைகள் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=141668&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா ஆகா ...முள்ளிவாய்கால் இன அழிப்புக்காரணம் தமிழ்குழுக்களே என்ற தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும்:unsure:

ஆகா ஆகா ...முள்ளிவாய்கால் இன அழிப்புக்காரணம் தமிழ்குழுக்களே என்ற தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும்:unsure:

உலகிற்கு பேய்க்காட்ட வேண்டும் ... சிங்கள இராணுவத்தை பாதுக்காக்க வேண்டும் ... இருக்கவே இருக்கிறார்கள் வேள்விக்கு வளர்த்த கடாக்களாக ... ஒட்டுக்குழுக்கள்! ... பொறுத்திருந்து பாருங்கள் .. வேள்விதான்!

**************** ... சில வருடங்களுக்கு முன்னம் ஆயுதங்களை பறிக்கும் மட்டும் சிங்கள கொலைக்கூட்டத்தோடு நல்ல உறவாம், சேர்ந்து பலதுகள் செய்யப்பட்டதாம்... ஆயுதங்கள் பறிக்கப்பட்ட பின்தான்  தமிழ்த்தேசிய நினைவு வந்ததாம், அதோடு வவுனியாவிற்கும் பாஃய் சொல்லி விட்டு சுமந்திரன் அனுசரணையில் யாழ் வந்ததாம் ... ஆனால் கும்பல் ஆயுதங்களோடு அங்கு நடந்த கூத்துக்களோடு, சிங்கள இராணுவ கூத்துக்களையும் சேர்க்கப்படலாம்  ... 

Edited by நியானி
கண்ணியமற்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. பண்பாக கருத்துக்களை வையுங்கள்.

ஆகா ஆகா ...முள்ளிவாய்கால் இன அழிப்புக்காரணம் தமிழ்குழுக்களே என்ற தீர்ப்பு வெகுவிரைவில் வெளிவரும்:unsure:

கடைசியில் நாலு பேர்கள் தான் புலிகளையும் தமிழ் மக்களையும்அழித்தார்கள் என்று சொன்னாலும் நம்ப சனம் இருக்கு .:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுவதும் தெரிந்த விடயம் இப்போ ஏன் தூசி தட்டி புதிதாக விட்டிருக்கிறார்கள்?

கடைசியில் நாலு பேர்கள் தான் புலிகளையும் தமிழ் மக்களையும்அழித்தார்கள் என்று சொன்னாலும் நம்ப சனம் இருக்கு .:rolleyes:

ம்ம்... எங்கட சனத்துக்கு நன்னாக தெரியும், சிங்களவனால் வேள்விக்கு வளர்த்த தமிழ் ஒட்டுக்கும்பல்களால் செய்ய(செய்ய முடிந்தது) இயலுமானவை என்னவென்பது? ... காட்டிக்கொடுப்பு, கூட்டிக்கொடுப்பு, உள்ளுக்குள் அகப்பட்டதுகளை கடத்தல், கொலை .. வேறென்ன முடியும்! ... அதுவல்ல நாங்கள் இங்கே சொல்ல வந்தது ... தாங்கள் (சிங்களம்) செய்த பலதுகளில் சிலதை உந்த வேள்விக்கடாக்களின் தலைகளில் போட்டு, அவர்கள் தப்ப திட்டம் ... அதைத்தான்

ஏற்கனவே உலகை ஏமாற்%ற தொடங்கப்பட்ட பிரகீத் எக்னெலிகொட, ரவிராஜ் கொலைகள் கருணாம்மான், பிள்ளையான்மான் மீது கிட்டத்தட்ட போட்டாச்சு ... நாளை மண்ணெண்ணையின் கொலை குத்தி மீது விழலாம் ... தராக்கியின் கொலை ..?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.