Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

உன்னோடு 
பேசவில்லை என்பதால் .....
உன்னை மறந்து விட்டேன் ....
உன் நினைவுகள் இல்லை ....
என்றெல்லாம் அர்த்தமில்லை ....!!!

பேசும் போது வரும் துன்பத்தை ....
பேசாமல் இருந்து நினைத்தேன் ....
பேசாமல் இருக்கும் துன்பம் ....
பேசும் துன்பத்தை காட்டிலும் ...
கொடுமையிலும் கொடுமை ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இறைவனின் படைப்பில் ....
உன்னத படைப்பு - நீ .....
இறைவனின் கிடைப்பனவில் ....
உன்னத கிடைப்பனவு -கனவு ....!!!

நீ எனக்கு 
இல்லை என்றாகிவிட்டது.....
இதற்காக இறைவனை ....
நிந்திக்க மாட்டேன் ....!
உன் நினைவோடும் 
கனவோடும் கல்லறை வரை 
இனிமையோடு களிப்பேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

உயிரே ....
நான் எழுதிய கவிதைகளை ....
கவனமாக சேர்த்துவை .....
அடுத்த ஜென்மத்திலும் ....
நீதான் என் காதலி ......!!!

என் கவிதையூடாக ....
என் விதியை மாற்றி ....
எழுதிக்கொண்டிருக்கிறேன் ....
அடுத்த ஜென்மத்திலும் நாம் 
காதலறாய் பிறப்போம் ....!!!
+
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

  • தொடங்கியவர்

நீ 
என்னுள் விதைக்கும் ...
ஒவ்வொரு எண்ணங்கள் ...
என்னும் விதைதான் ...
என் கவிதை என்னும் ....
அறுவடை .....!!!

என் மனம் ....
தரிசு நிலமானாலும் .....
வரண்ட பயிரென்றாலும் ....
உன் நினைவால் வளரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை

கவிதைகள் நன்றாக இருக்கின்றன  இனியவன் பாராட்டுக்கள் 

  • தொடங்கியவர்

கவிதைகள் நன்றாக இருக்கின்றன  இனியவன் பாராட்டுக்கள் 

மிக்க நன்றி நன்றி 
கருத்துரைத்தமைக்கு நன்றி 

  • தொடங்கியவர்

ஆயிரம் ஆயிரம் ....
உவமைகள்  சொல்லி ....
கவிதை வடிக்கிறேன் ....
நீயோ ....
ஒரு மெய் சொல்லிவிட்டாய் ......
என்னை பிடிக்கவில்லை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஈழத்து கவிஞர் 
காதல் சிதறல்கள் 

  • தொடங்கியவர்

கவிதையை ....
ரசித்த அளவுக்கு என்னை ....
எப்போது ரசிப்பாய் ...?
உன்னை உயிராய் ....
ரசிக்கிறேன் கவிதை ...
உயிரை கொள்கிறது ...!!!

என் 
கவிதை எழுதிய கைக்கு ....
முத்தம் இடவேண்டும் என்கிறாய் ....
எனக்கு எப்போது தருவாய் ...?
+
காதல் சிதறல்கள்

  • தொடங்கியவர்

எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

பேச்சு சுதந்திரம் காணாமல் .....
போய் காலாவதியாகி விட்டது .....
இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு .....
போராடுகிறோம் .....!!!

மூச்சை காப்பாற்ற ஒரு இனம் ....
மூச்சை கையில் பிடித்தபடி வாழ ....
மூச்சை பறிக்க ஒரு கும்பல் .....
வெறியோடு அலைந்து திரிய .....
மூச்சு சுதந்திரம் பேச்சுக்கு கூட ....
இல்லாமல் போகிறது....!!!

எழுத்து சுதந்திரம் இருக்கு.....!
இறுமாப்புடன் எழுதினான் ....
எழுத்தாளன் - இப்போ அவன் ....
எழுந்து நடக்க நாதியில்லாமல் ....
படுக்கையில் பட்டமரமானான் .....!!!

மூக்கு எனக்கு கட்டளையிட்டது ....!
உயிரிருக்கவேண்டுமென்றால் .....
காற்றை உள்ளே எடுத்து வெளியேவிடு ....
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பினால் ....
உன்னிலிருந்து வெளியே சென்றிடுவேன் ...
மீண்டும் உள்ளே வரமாட்டேன் .....!!!

சுதந்திர காற்றுக்காய் அலையாதே ....
தூசியும் குப்பையும் நிறைந்த ....
காற்றுத்தான் உலகில் வீசுகிறது ....
சுவாசி- நீ - வசி -மடிந்துபோ ...
எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

+
கே இனிவனின் குமுறல் 

  • தொடங்கியவர்

நாம் பிரிந்து வாழ்கிறோம் 
இணைந்து வாழ்ந்தால் இறப்பீர்கள் 
தண்டவாளம் 

@@

எரிகிறேன் 
சாம்பலாகமாடேன்
மெழுகுதிரி 

@@

கண்ணீர் வருகிறது 
கவிதை வருகிறது 
வலி 

@@

பறக்கிறது
பட்டமில்லை 
கற்பனை 

+
கே இனியவன் ஹைக்கூகள் 

  • தொடங்கியவர்

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!

  • தொடங்கியவர்

என் கவிதைகள் ...
மெழுகாய் உருகுகின்றன ...!

எண்ணங்கள் தீபமாய் ....
ஒளிர்கின்றன ....!!!

எண்ணங்களில் கலந்தாய்
கவிஞனாய் மாறினேன் ....!!!

வரிகளாய் வந்தாய் ....
வலிகளில் துடிக்கிறேன் ...!!!

மௌனத்தில் என்னை....
வாழ்சொல்லுகிறாய் ....
நடமாடும் பிணமானேன் ....!!!

  • தொடங்கியவர்

பூத்துக்குலுங்கும்
மலர்களை விட...
என்னவளின் கூந்தலில் ...
வாடி விழுந்த மலரையே 
நான்...
அதிகம் நேசிக்கிறேன்....!!

ஆம்

அது அவள் கூந்தலில்
இருந்து உதிர்ந்த மலர்கள்....
அவளே ஒரு பூந்தோட்டமாச்சே....!!!

@@@@ 

உன் மௌனம்கூட அழகு தான்
வார்த்தைகளால்என் மனதை
காயப்படுத்தாமல் இருப்பதினால்..!

உன்னில் அதிக அக்கறை ....
வைத்துவிட்டேன் -அதனால் ....
எதை சொன்னாலும் கேட்பாய் ...?
தப்பு கணக்கு போட்டுவிட்டேன் ...!!!

கோபத்தில் 
என்னை மறந்துவிடு என்று
சொன்னால்,  ஒரேயடியாகவா ....
மறந்து போவாய்....!!!"

  • தொடங்கியவர்

காதல் அலைகள் ஓய்வதில்லை...
என்னைப் பற்றிய நினைவுகள்....
உன் மனதிற்குள்ளும் அலையும் ....
உன்னைப் பற்றிய நினைவுகள்
என் மனதிற்குள்ளும் அலையும் ....!!!

கரையிருந்தால் இறங்கிவிடலாம் ....
காதலுக்குதான் கரையே இல்லையே.....
துடுப்பை கவனமாய் வலித்துகொள் ....
கடலில் தத்தளிப்பதை தங்கமுடியாதே ....!!!

காதல் இன்பமாய் இருந்தால் ....
இதயத்தின் சுமையோ சமன் .....
காதல் தோல்வியாய் அமைந்தால் ....
ஒரு இதயத்துக்கே சுமை ....!!!

  • தொடங்கியவர்

முள்ளை முள்ளால் தான் .....
எடுக்கவேண்டுமென்றால் ....
வலியை வலியால் தானே ....
விலக்கவேண்டும் .....?

பணமிருந்தால் குணமிராது ....
குணமிருந்தால் பணமிராது ....
உன்னிடம் இரண்டுமிருந்தும் ....
எனக்கேன் காதல் வரவில்லை ...?
என்னுள் இன்னொருத்தியின் ...
வலி வலித்துகொண்டிருகிறது....!!!

அவளுக்காக நான் எழுதிய 
அத்தனை கவிதைகளையும், 
கிழித்தெறிந்து விட்டேன், 
ஆனால் வரிகளை தான் 
மறக்க முடியவில்லை....!!!

அவள் தந்த நினைவு ....
பொருட்கள் எல்லாம் ....
தூக்கி எறிந்து விட்டேன் ....
நினைவுகளை தூக்கி ....
எறிய முடியவில்லை ....!!!

  • தொடங்கியவர்

குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!

  • தொடங்கியவர்

ஒற்றை பூ தான் பூக்கிறது.....!!!

உயிரே ....
என் பிறந்தநாளுக்கு .....
ரோஜா செடியை தந்தாய் ....
பிரியாத வயதில் நீ தந்தது ....
பரிசு என்று நினைத்தேன் ....
இன்றுவரை அது ஒற்றை பூ ....
தான் பூக்கிறது.....!!!

உன் 
திருமண நிகழ்வில் ......
என்னை கண்டதும் ....
உன் கடைகண்ணில்.....
வழிந்த கண்ணீரில் புரிந்தது ....
உன் ஒற்றை காதலின் வலி ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 01

  • தொடங்கியவர்

உன் இதயத்துக்கு எப்போது புரியுமோ ....?

போதும் உயிரே ....
உன்னை நினைத்து நான் ...
ஏற்கும் இதய வலியின் வலி ....
என்னை நீ ஏற்பாயா....?
தூக்கி எறிவாயா ..........?
உனக்கும் எனக்கும் இடையே ....
உள்ள இடைவெளி -காதல் ....!!!

நீயோ ....
கோபுரத்தில் வாழ்பவள் ....
நானோ கோபுரத்தின் முன் ....
தரிசனத்துக்கு நிற்பவன் ....
இதயத்துக்கு புரியவில்லை ....
உன் அந்தஸ்து -என்னசெய்வது ....?
கூலிக்கும் காதல் வரும் ....!
உன் இதயத்துக்கு...... 
எப்போது புரியுமோ ....?

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 02

  • கருத்துக்கள உறவுகள்

"வன் வேய் லவ்" என்றும்... ஏற்புடையதல்ல.
அதற்காக... ஏங்குவது வீண். சரி வரா விட்டால், அடுத்ததுக்கு முயற்சிக்க வேண்டும்.
எமது வாழ்வை.... காதல், கத்தரிக்காய் என்னும் மோகத்தில் வீழ்ந்து நாமே, பாழாக்க கூ டாது. 

மேலே... எழுதியது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே தவிர, 
உங்கள் மனதை நோகடிக்கும் எண்ணம் அல்ல....  கவிப்புயல் இனியன்.:)

  • தொடங்கியவர்

உன் புகைப்படத்தோடு பேசுகிறேன்

எல்லோரும் காதலியோடு ....
போசுவார்கள் ..உண்பார்கள் ....
சுற்றி திரிவார்கள் .......!!!

நான் ....
உன் புகைப்படத்தோடு ....
பேசுகிறேன்..சுற்றி திரிகிறேன் .....
ஒருதலை காதல் என்றால் ...
ஒரு இதயம் தானே ....
வலியை தாங்கவேண்டும் ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 03

  • தொடங்கியவர்

ஒருதலை காதலருக்கு .....!!!

எங்கிருந்தாலும் வாழ்க ....
இது காதல் தோல்வியால் ....
வரும் வார்த்தை .....!!!

ஒருதலை காதலருக்கு .....
எங்கிருந்தாலும் வாழ்க .....
இதயத்தில் நிரந்தரமாய் ....
எழுதபட்டிருக்கும் வாசகம் .....
இணையமாட்டோம் என்பது ....
நிச்சய நிகழ்வுதானே ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 04

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததை பாருங்கோ.... எண்டு, சொன்னால்,
கேட்க.... மாட்டேங்குறாங்க.......
கடைசியல... தாடி வளத்துக் கொண்டு, பைத்தியம் பிடிச்சு.... அலையப் போறாங்க. :grin:

  • தொடங்கியவர்

உனக்கு வேதனையில்லை அதுபோதும்....!!!

நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!

போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!

+
ஒருதலை காதல் உறவுகளுக்காய் ....
கவிப்புயல் இனியவன் தரும் .
கவி மழை தொடர் 05

"வன் வேய் லவ்" என்றும்... ஏற்புடையதல்ல.
அதற்காக... ஏங்குவது வீண். சரி வரா விட்டால், அடுத்ததுக்கு முயற்சிக்க வேண்டும்.
எமது வாழ்வை.... காதல், கத்தரிக்காய் என்னும் மோகத்தில் வீழ்ந்து நாமே, பாழாக்க கூ டாது. 

மேலே... எழுதியது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே தவிர, 
உங்கள் மனதை நோகடிக்கும் எண்ணம் அல்ல....  கவிப்புயல் இனியன்.:)

உங்கள் கருத்தும் சரிய்தான் 
ஆனால் இன்று ஒருதலை காதலால் வாழ்கையை இழந்துகொண்டிருப்பவர்கள் 
நிச்சம இருகிறார்கள் . கவிதை கற்பனையில் கொஞ்சம் அதிகமாக இருக்கும் 
ஆனால் இந்தவகை காதலும் உண்டு ( எனக்கு இல்லை ) 

tw_blush:

கவிதைகளுக்கு நன்றி 

ஒரு தலை காதலின் வலியில் வாழ்வது கூட ஒரு சுகம் தான் தமிழ்சிறி அண்ணை

  • தொடங்கியவர்

கவிதைகளுக்கு நன்றி 

ஒரு தலை காதலின் வலியில் வாழ்வது கூட ஒரு சுகம் தான் தமிழ்சிறி அண்ணை

அவ்வளவுதான் புரிஞ்ச்சுகிட்டியல் சகோ ....
கவிதை எல்லோரையும் நினைக்கவைக்கும் 
அவளவுதான் ....
நன்றி நன்றி 

அடுத்ததை பாருங்கோ.... எண்டு, சொன்னால்,
கேட்க.... மாட்டேங்குறாங்க.......
கடைசியல... தாடி வளத்துக் கொண்டு, பைத்தியம் பிடிச்சு.... அலையப் போறாங்க. :grin:

அதுக்குள்ளையா ....?
உங்க வாக்கு பலிக்காமல் இருக்கட்டும் :rolleyes:

  • தொடங்கியவர்

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.