Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

Featured Replies

 
உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
 
 

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார்.

அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர்  எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார் என்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/156784/உண-ண-வ-ரதப-ப-ர-ட-டம-தற-க-ல-கம-க-க-வ-டப-பட-டத-#sthash.s8z2hpJh.dpuf
  • தொடங்கியவர்
ஜனாதிபதி உறுதிமொழி: உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
ஜனாதிபதி உறுதிமொழி:  உண்ணாவிரதம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

பொதுமன்னிப்பு அளித்து தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் நாடு தழுவிய ரீதியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை கைவிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்து மூலம் வழங்கியுள்ள உத்தரவாத்தினைத் தொடர்ந்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இன்று மெகசின் சிறைச்சாலைக்கு சென்று கைதிகளைப் பார்வையிட்டதுடன், ஜனாதிபதியின் உறுதிமொழி தொடர்பில் அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியின் உறுமொழியை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கொடுத்துள்ள அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தினை நிறைவு செய்துள்ளனர்.அத்துடன், ஜனாதிபதியின் உறுதிக்கு அமைவாக நவம்பர் 7ஆம் திகதி முடிவு கிடைக்கவில்லையாயின் அன்று தொடக்கம் மீண்டும் தமது போராட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதpயின் உறுதிமொழிக்கு அமைய நவம்பர் 7 ஆம் திகதி அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிடின், அவர்களுடன் இணைந்து தாமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/1400

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நவம்பர் 7 க்கு முதல் இது பற்றிய ஒரு பொறிமுறையை உருவாக்குவேன் என்று கொடுத்த வாக்குறுதியை சம்பந்தனும் சுமந்திரனும் அரசியல் கைதிகளிடம் எடுத்துக் கூறி, அந்த உத்தரவாதத்தின் பெயரில் அரசியல் கைதிகள் தம் போராட்டத்தை கைவிட்டு உள்ளதாய் கொழும்பு ஊடகம் சொல்கிறது.

 

 

http://www.dailymirror.lk/91653/hunger-strike-by-ex-ltte-cadres-called-off

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் பெயரில் அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் காரியாலயத்தில் பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு வரிசையாய் வரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
அணிலா? புலுனியா? கிணறு வெட்டியது....??
 
ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு கைதிகளுக்கு தீர்வளித்த வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்
[ சனிக்கிழமை, 17 ஒக்ரோபர் 2015, 11:21.31 AM GMT ]
cv_my3.jpg
சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் ஜனாதிபதியின் உத்தரவாதம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடமாட்டோம் என உறுதியாகத் தெரிவித்திருந்த நிலையிலேயே வடக்கு முதல்வர் மேற்படி அவசர கடிதத்தை நேற்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு முதல்வர், ஜனாதிபதியுடன் தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு முயற்சித்த போது ஜனாதிபதி செயலகத்தில் அவருக்குப் பதிலாக ஜனாதிபதியின் செயலாளரே மறுமுனையில் பதிலளித்தார்.

அப்பொழுது ஜனாதிபதியின் செயலாளர் வடக்கு முதல்வரிடம் தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றது. தற்போது ஜனாதிபதி அவர்கள் பொலநறுவையில் நடைபெறும் நிகழ்வொன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளமையினால் அவருடன் தொடர்புகொள்ள முடியாது எனவும், தங்களின் கடிதம் தொடர்பாக உடனடியாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு உண்ணாவிரதமிருக்ககும் கைதிகளில் 33 பேரின் நிலைமை மிகமோசமான நிலையை எட்டியுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், அவர்களின் விடுதலைக்கு தங்களின் எழுத்துமூலமான உத்தரவாதம் மிகமிக அவசியமாக உள்ளது என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதனையடுத்து வடக்கு முதல்வரின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி அவர்கள், கைதிகளின் விடுதலை தொடர்பிலான உத்தரவாதம் அடங்கிய  விரிவான  கடிதமொன்றினை சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அனுப்பி, அவர் மூலமாக சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்து வரும் கைதிகளுக்கு ஜனாதிபதியின் உத்தரவாத கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது.

அதன் பின்னரே ஜனாதிபதியின் உத்தரவாதக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவாறு நவம்பர் மாதம் 7ம் திகதி வரை தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்தனர்.

அத்துடன் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக முழுமூச்சுடன் அரசின் உயர்மட்டங்கள் அனைவரையும்  நேரடியாக தொடர்புகொண்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Lankasri.com

  • கருத்துக்கள உறவுகள்

கீரைக் கடை எதிர்கடை எல்லாத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டுள்ள ஒரு சொப்பிங் செண்டர் ஆக கூட்டமைப்புச் செயல்படுவது வரவேற்க்கத் தக்கதே.

அநேகமாய் புலவாலுகளுக்கும் கஜே கம்பனிக்கும் சங்க கடையும் மிஞ்சாது போலத்தான் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வ‌ருதே ஞாப‌கம் வ‌ருதே மட்டக்களப்பு சிறைசாலை உடைப்பு ....உரிமை கோரால் துண்டுப்பிரசுரம் ........ஞாபகம் வ‌ருதே ஞாப‌கம் ......:)

... பயங்கரவாத கைதிகளின் அவசியமற்ற உண்னாவிரத பயங்கரவாதத்தை முடிபிற்கு கொணருவதற்கு ... சிங்களவர்களுடன் இதயங்களால் ஒன்றாகிவிட்ட வருங்கால எதிர்கட்சித்தலைவர் சுமந்திரனின் பங்கு அளப்பரியது! பாராட்டுக்கள்! ... உண்மையில் இப்பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு... அதனால்தான் இன்று வரை கோட் வாசல் கூட இவர்கள் எட்டிப்பார்க்கவில்லை???.... அடைத்து வைக்கப்பட்ட கைதிகள் ... ஜெனீவா கூட்டத்தொடர் மூட்டம் உண்ணாவிரத பயங்கரவாத நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள  முற்பட்டிருக்கிறார்களாம் ... அப்பயங்கரவாத நடவடிக்கையையும் முறியடித்த பெருமை சுமந்திரனையே சாரும் என சொல்கிரார்கள்???? ... வாழ்த்துக்கள் சுமந்திரன், இப்பயங்கரவாதிகளை நிரந்தரமாக உள்ளிருக்க செய்யுங்கள்!! ... நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவா மூட்டமாம்? அது முடிஞ்சு ஒரு மாசம்.

கொசுத்தொல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.