Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெண்களுக்கு மட்டும்

Featured Replies

பெண்களுக்கு மட்டும்

சகோதரிகளே நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையாய் வருபவரிடம் எதிர்பார்க்கும் / எதிர்பார்த்த குணாதிசயங்கள் என்ன ?

பல இருந்தால் வரிசைப்படுத்திச் சொல்லுங்களேன்

  • Replies 63
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொல்லிக்கிற மாதிரி ஒன்னுமே இல்லை அம்மணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி மொட்டையாய் பதில் சொன்னால் எப்படி கறுப்பியக்க????

அடிக்கடி கண்ணை மாற்றுகிறீர்கள் ???

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மொட்டையாய் பதில் சொன்னால் எப்படி கறுப்பியக்க????

அடிக்கடி கண்ணை மாற்றுகிறீர்கள் ???

இப்போ கண்ணுக்கு கொஞ்சம் மேக்கப் போட்டு வந்திருக்கேன் அதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது நடிகை தபுவின் கண் மாதிரி தெரியுது. ?????!!!!!!

கலியாணம் இன்னும் செய்யாதவை எல்லோ சொல்லவேணும், கறுப்பி அக்காட்ட கேட்டா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே நம்ம யாழ்கள "இளசுகள்"? சின்னப்பு, முகத்தார், கந்தப்பு & co'வின் பதிவுகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறோம். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்காக என்று போட்டாலும் என்னால் கருத்துச்சொல்லாமல் இருக்க முடியவில்லை.. :P

1) மனைவி கணவனுக்குப் போடும் வரைமுறை மனைவிக்கும் பொருந்துமென வாதாடும் கணவன் கூடாது.

2) சேர்ந்து முடிவெடுக்கும் கணவன் வேண்டும். அதாவது, மனைவி எடுக்கும் முடிவைக் கணவன் ஆதரித்தால் போதும்.

3) வீட்டு வேலைகளில் என்ன உதவி செய்தாலும் பிறரிடம் காணவன் அதைக் காட்டிக்கொள்ளக்கூடாது.

4) பேசினால் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு மட்டும் என்று போட்டிருக்கு.ஆணால் கறுப்பியை தவிர வேறு பெண்மனிகளை கானோம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது! அந்த அழகான விழிக்குச் சொந்தக்காரியான எங்கள் கறுப்பியக்காவுக்கு கலியாணம் ஆகவில்லையா. நம்ப முடியவில்லை!

நாரதரே உண்மையாகவா!

உண்மையாக இருந்தால் எங்கள் கறுப்பியக்காவுக்காக ஒரு குட்டிக் கதை சொல்லுகிறேன்.

நான் பிரான்சில் இருந்தபோது எனது வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அக்கா இருந்தா. அவாவுக்கு அப்போது 28 அல்லது 29 வயது இருக்கும். கலியாணம் ஆகவில்லையே என்ற வருத்தம் அவாவின் குரலில் அவ்வப்போது எதிரொலிக்கும். தன்னுடைய அனுபவங்கைளை எல்லாம் ஒன்று விடாமல் எனக்குச் சொல்லுவா. அவா சொன்னதை எல்லாம் கேட்ட பின்பு எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவாவின் பெற்றோரின் வரட்டுக் கொளரவமும் அந்தஸ்து வெறியும்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

நான் அவாவுக்கு சொன்னேன் கலியாணம் என்று வரும்போது முக்கியமா நாங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்கக் கூடாது என்று.

என்ன விந்தை நான் சொல்லி இரு மாதங்களில் அவவுக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் ஆவாவிடம் காரணத்தை வினவினேன்.

அத ற்கு அவா, நான் கூறிய தாரகமந்திரம்தான் காரணம் என்றா. அதற்குப் பின் நான் லண்டன் வந்து விட்டேன். சென்ற முறை பிரான்ஸ் சென்றபோது அவாவைப் போய்ப் பார்த்தேன். அழகான பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகியிருந்தா. அந்தக் குழந்தையை அவாவின் பெற்றோர் போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறிக் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

கதை எப்படி?? அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்பதால்தான் நமது தமிழ்ச் சமூகத்தில் முதிர் கன்னிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

Edited by ilango3112

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முன்பு எல்லாம் எதிர்ப்பாக்கிறது இருக்கும்.

கல்யாணம் முடிஞ்சபின்பு தான் எதிர்ப்பார்த்தது ஒன்றையும் காணமாட்டிங்கள்.

கல்யாணத்துக்கு முன்பு விழுந்து விழுந்து உபசரிப்புக்கள் கிடைக்கும்.

கல்யாணத்துக்குப்பிறகு அடிக்கடி திட்டுக்கள் ஏச்சுக்கள் கிடைக்கும்.

கல்யாணத்துக்கு முதல் பாடும் பாட்டு 'பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காதே'

கல்யாணத்துக்கு பிறகு பாடும் பாட்டு 'என் விதி அப்போது தெரிந்திருந்தாலே கற்பத்தில் நானே கலைஞ்சிருப்பேனே'.

நான் உங்களுக்கு சொன்னால் யார் கேக்கப்போயினம். ஆசை யாரை விட்டது.சனம் அடம்பிடிக்குதுகள். அடி வாங்க, திட்டு வாங்க அடம்பிடிக்குதுகள். விதி யாரை விட்டது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மரியாதைக்குரிய கந்தப்பு அவர்களே!

இப்படிச் சொல்லி என் போன்றவர்களை பயமுறுத்தாதீர்கள் .

என்னது! அந்த அழகான விழிக்குச் சொந்தக்காரியான எங்கள் கறுப்பியக்காவுக்கு கலியாணம் ஆகவில்லையா. நம்ப முடியவில்லை!

நாரதரே உண்மையாகவா!

உண்மையாக இருந்தால் எங்கள் கறுப்பியக்காவுக்காக ஒரு குட்டிக் கதை சொல்லுகிறேன்.

நான் பிரான்சில் இருந்தபோது எனது வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அக்கா இருந்தா. அவாவுக்கு அப்போது 28 அல்லது 29 வயது இருக்கும். கலியாணம் ஆகவில்லையே என்ற வருத்தம் அவாவின் குரலில் அவ்வப்போது எதிரொலிக்கும். தன்னுடைய அனுபவங்கைளை எல்லாம் ஒன்று விடாமல் எனக்குச் சொல்லுவா. அவா சொன்னதை எல்லாம் கேட்ட பின்பு எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவாவின் பெற்றோரின் வரட்டுக் கொளரவமும் அந்தஸ்து வெறியும்தான் எல்லாவற்றுக்கும் காரணம்.

நான் அவாவுக்கு சொன்னேன் கலியாணம் என்று வரும்போது முக்கியமா நாங்கள் பெற்றோரின் பேச்சைக் கேட்கக் கூடாது என்று.

என்ன விந்தை நான் சொல்லி இரு மாதங்களில் அவவுக்கு திருமணம் ஆகிவிட்டது. நான் ஆவாவிடம் காரணத்தை வினவினேன்.

அத ற்கு அவா, நான் கூறிய தாரகமந்திரம்தான் காரணம் என்றா. அதற்குப் பின் நான் லண்டன் வந்து விட்டேன். சென்ற முறை பிரான்ஸ் சென்றபோது அவாவைப் போய்ப் பார்த்தேன். அழகான பெண் குழந்தை ஒன்றுக்கு தாயாகியிருந்தா. அந்தக் குழந்தையை அவாவின் பெற்றோர் போட்டி போட்டுக்கொண்டு மாறி மாறிக் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.

கதை எப்படி?? அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்பதால்தான் நமது தமிழ்ச் சமூகத்தில் முதிர் கன்னிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஐயோ

நான் சொன்னது விளங்கேல்லையா :icon_idea:

கறுப்பி அக்கா என்னதைச் சொல்ல எண்டு சலுச்சுக் கொண்டதில இருந்து பாத்தா, கறுப்பி அக்கா இனி என்னத்தச் சொல்லி என்னத்தப் பாக்கிறது எண்ட மாதிரி இருந்திச்சு அது தான் உது கலியாணம் ஆகப் போறவையிட்ட அல்லோ கேக்க வேணும் எண்டு சொன்னன்.கனவு காணுறது அவை தானே? இது கனவல்ல நிஜம் எண்ட முடியுமோ? நிஜமும் நிழலும் ஒன்றாக இருக்க முடியுமோ? என்னக்கா சொல்லுங்கோ? :icon_idea::(

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் சார் அது என்ன நிசமும் நிழலும்

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொல்ல சகோதரிகளைக் கூப்பிட்டா அது என்ன கறுப்பியின் கதையை இழுக்கிறியள்.

நாரதர் சார் அது என்ன நிசமும் நிழலும்

கனவு காணுறது நிழல் உருவைத் தானே , ஆன நிஜம் அப்படி இருப்பது இல்லைத் தானே.காதலிக்கும் போதோ இல்லை கலியாணம் பேசும் போதோ எல்லோரும் தம்மை நல்லவர்களாகக் காட்டத்தானே முயற்ச்சிப்பார்கள்.ஆனால் நிஜம் அதுவல்லவே.

கருத்துச் சொல்ல சகோதரிகளைக் கூப்பிட்டா அது என்ன கறுப்பியின் கதையை இழுக்கிறியள்.

நீங்கள் ஏன் மற்றவையக் கூப்பிட வேணும்.முதலில நீங்க சொன்னாத் தானே மற்றவையிட்டக் கேட்கலாம். நீங்க சொல்லாம ஒரு வரியில , சொல்லி என்ன பிரியோசனம் எண்டா, நீங்க சொல்லிறதுக்கு விளக்கம் கேட்க வேண்டித் தானே இருக்கு.விளங்கிற மாதிரிச் சொன்னா வேற கதை இருக்காது அல்லோ?

புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருந்தால் போதும் ;) :P :P :P

புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருந்தால் போதும் ;) :P :P :P

அங்கதானே பிரச்சினையே, எப்படிப் புரிந்து கொள்ளுறது?

மங்கையர் மனதைப் புரிந்தவர் இங்கு யாரும் உண்டா?

நான் எதிர்பார்த்த குணாதிசயங்கள்

1. எனக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவர் என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும்.

2. என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். (அதாவது பொய் சொல்லாது அனைத்து

விஷயத்திலும்)

3. என் துன்பங்களை பகிர்ந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

4. என்னுடைய நியாயமான கோரிக்கைகளை, நியாயமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

5. நான் தவறு செய்தாலும் கடிந்து பேசாது அன்புடன் எடுத்துச் சொல்லும் குணம் வேண்டும்.

6. மொத்தத்தில் எனக்கு கணவராக மட்டுமல்லாமல் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்க

வேண்டும்.

என்னுடைய இந்தக் கருத்தில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் சொல்லுங்களேன் காவியா. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காவியாவுக்கு ஆட்சேபணை இருக்கா இல்லையா என்று எனக்குத் தெரியாது. நிச்சயமா எனக்கு ஆட்சேபணை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

காவியாவுக்கு ஆட்சேபணை இருக்கா இல்லையா என்று எனக்குத் தெரியாது. நிச்சயமா எனக்கு ஆட்சேபணை இல்லை.

:lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பியக்கா என்ன சொல்ல வருகிறீர்கள்??????

அங்கதானே பிரச்சினையே, எப்படிப் புரிந்து கொள்ளுறது?

மங்கையர் மனதைப் புரிந்தவர் இங்கு யாரும் உண்டா?

ஆகா அங்கிள் நீங்கள் என்ன புதுப் பிரைச்சனையை உருவாக்கிறீங்கள் என்னவாக இருந்தாலும் நாரதர் கலகம் நன்மையில் முடியும் :lol: :P :D

நான் எதிர்பார்த்த குணாதிசயங்கள்

1. எனக்கு வாழ்க்கைத் துணையாய் வருபவர் என்னிடம் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும்.

2. என்னிடம் உண்மையாக இருக்க வேண்டும். (அதாவது பொய் சொல்லாது அனைத்து

விஷயத்திலும்)

3. என் துன்பங்களை பகிர்ந்து கொள்பவராக இருக்க வேண்டும்.

4. என்னுடைய நியாயமான கோரிக்கைகளை, நியாயமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டும்.

5. நான் தவறு செய்தாலும் கடிந்து பேசாது அன்புடன் எடுத்துச் சொல்லும் குணம் வேண்டும்.

6. மொத்தத்தில் எனக்கு கணவராக மட்டுமல்லாமல் என்னுடைய நெருங்கிய நண்பராக இருக்க

வேண்டும்.

என்னுடைய இந்தக் கருத்தில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் சொல்லுங்களேன் காவியா. :lol:

விஜி சூப்பர் ம்ம் கிடைப்பர் கிடைப்பர் உங்கள் மனதைப் புரிந்து கொண்டவர் :P :D:D

காவியாவுக்கு ஆட்சேபணை இருக்கா இல்லையா என்று எனக்குத் தெரியாது. நிச்சயமா எனக்கு ஆட்சேபணை இல்லை.

அண்ணா உண்மையாகவா? அப்பச் சரி :D:D:lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.