Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி

Featured Replies

ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி

ஐ.எஸ் அமைப்புக்கு பிரான்ஸ் பதிலடி

சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14-ம் திகதி நள்ளிரவு பாரிஸில் உள்ள கலையரங்கம், உணவு விடுதி, கால்பந்து மைதானத்தை ஒட்டிய பகுதி என ஆறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் பாரிஸில் நடத்தபப்ட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் இருக்கும் முக்கிய ஐ.எஸ். நிலைகள் மீது பிரான்ஸ் போர் விமானங்கள் குண்டு வீசி அதிரடி தாக்குதல் நடத்திவருவதாக அந்நாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • தொடங்கியவர்

பாரிஸ் தாக்குதலுக்கு பிரான்ஸ் ஆவேச பதிலடி: ஐ.எஸ். இலக்குகள் மீது சராமரி குண்டு வீச்சு! ( வீடியோ)

 

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இலக்குகளை குறிவைத்து, பிரான்ஸ் நாட்டின் 12 போர் விமானங்கள் குண்டு வீச்சு தாக்குதலைத் தொடங்கியுள்ளன. நேற்று இரவில் மட்டும் ஐ.எஸ். இலக்குகள் மீது 20 குண்டுகள் வீசப்பட்டுள்ளன.

            

இதில் சிரியாவின் ராக்கா பகுதியில் உள்ள ஐ.எஸ். பயிற்சி முகாம், வெடி மருந்து கிட்டங்கிகள் அழிந்து போனதாக கூறப்படுகிறது. ஜோர்டான் மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் இருந்து புறப்பட்ட போர் விமானங்கள், அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளன.

பாரிஸ் நகரில் 7 இடங்களில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ள நிலையில் பிரான்ஸ், தீவிரவாதிகள் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/article.php?aid=55102

  • தொடங்கியவர்

சிரியாவில் ஐ.எஸ். தலைமையகம் மீது பிரான்ஸ் குண்டு மழை

 
அடையாளம் தெரியாத இடத்திலிருந்து தாக்குதலுக்கு புறப்படும் பிரான்ஸ் போர் விமானம். | படம்: ராய்ட்டர்ஸ்.
அடையாளம் தெரியாத இடத்திலிருந்து தாக்குதலுக்கு புறப்படும் பிரான்ஸ் போர் விமானம். | படம்: ராய்ட்டர்ஸ்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இஸ்லாமிக் ஸ்டேட் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கு 130-க்கும் மேற்பட்டோர் பலியானதையடுத்து, சிரியா தலைநகரில் ஐ.எஸ். தலைமைச் செயலகம் மீது பிரான்ஸ் மிகப்பெரிய அளவில் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

10 போர் விமானங்கள் உட்பட 12 விமானங்கள் சுமார் 20 குண்டுகளை ஐ.எஸ். தலைமைச்செயலகக் கட்டிடத்தின் மீது இறக்கியது.

துருக்கியில் ஜி20 உச்சி மாநாட்டிற்கிடையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லாரண்ட் ஃபேபியஸ் கூறும்போது, “சிரியாவில் போர் தொடுப்பது நியாயமே. நாங்கள் ஏற்கெனவே கடந்த காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டோம், இந்நிலையில் ஞாயிறன்று ரக்காவில் புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளோம்.

பாரீஸில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர். இவ்வளவு தீவிரமாக தாக்குதலை அவர்கள் நடத்தும் போது நாம் சும்மாயிருப்பது சரியாகாது” என்றார்.

பாரீஸில் தாக்குதல் நடத்திய பயங்கரவாத ‘ஸ்லீப்பர் செல்’ உறுப்பினர்கள் 7 பேரை கைது செய்ததாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தொடர்புடைய 26 வயது தீவிரவாதி சலா அப்தேஸ்லாம் மீது விடுக்கப்பட்டுள்ள கைது உத்தரவில் இவர் மிகவும் அபாயகரமானவர் என்று கூறப்பட்டுள்ளது.

சனியன்று பெல்ஜியம் எல்லை அருகே சந்தேகத்துக்குரிய காரை போலீஸார் நிறுத்திய போது அதில் அப்தேஸ்லாம் இருந்துள்ளார். ஆனால் அதன் பிறகே தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட வோல்க்ஸ்வேகன் போலோ கார் தீவிரவாத அப்தேஸ்லாம் அதனை வாடகைக்கு விட்டது தெரியவந்தது.

வியாழனன்றே எச்சரிக்கை:

பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு வியாழக்கிழமையே தாக்குதல் குறித்து அறிவுறுத்தப்பட்டதாக இராக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராக் மற்றும் சிரியாவில் தங்களுக்கு எதிராக சண்டையிடும் கூட்டணிப் படை நாடுகளின் உள்ளே குண்டு வீச்சு தாக்குதல் நடத்தவும், பிணைக்கைதிகளை பிடிக்கவும் ஐஎஸ் தலைவர் பக்தாதி உத்தரவிட்டதாக இராக் உளவுத்துறை எச்சரிக்கை அளித்திருந்ததாக தற்போது தெரிய வந்துள்ளது.

ஆனால் இத்தகைய எச்சரிக்கைகள் ‘எப்போதும்’ ‘ஒவ்வொரு நாளும்’ தங்களுக்கு வந்தபடியேதான் இருக்கின்றன என்று பிரான்ஸ் உளவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்டதாகக் கருதப்படும் 3 சகோதரர்களில் ஒருவராக அப்தேஸ்லாம் கருதப்படுகிறார். இவருடன் பெல்ஜியம் எல்லையைக் கடந்த ஒருவர் பிற்பாடு கைது செய்யப்பட்டார். மற்றொருவர் பேட்டக்கிளான் தியேட்டரில் தற்கொலை செய்து கொண்டார்.

தாக்குதல் நடத்தியதோடு அல்லாமல் பாரீஸ் நகரை “ஆபாசமும் விலைமாதர்களும் நிறைந்த நகரம்” என்று வர்ணித்துள்ளது ஐ.எஸ்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேரில் 3 பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதே தற்போது பிரான்ஸுக்கு கவலையளிக்கும் விஷயமாகும்.

பிரான்ஸ் இன்னும் இந்தத் துயரத்திலிருந்தும் அச்சத்திலிரும்தும் விடுபடவில்லை என்று மக்கள் அங்கு பதற்றத்துடன் காணப்படுவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/article7883689.ece

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தாக்குதலில் எத்தனை அப்பாவிச் சனங்கள் செத்தார்களோ தெரியாது.
இந்த தாக்குதலில் எத்தனை அப்பாவிச் சனங்கள் செத்தார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

இந்த தாக்குதலில் எத்தனை அப்பாவிச் சனங்கள் செத்தார்களோ தெரியாது.
இந்த தாக்குதலில் எத்தனை அப்பாவிச் சனங்கள் செத்தார்களோ தெரியாது.

நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவுமே தப்பில்லை  :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகள் நிலைகள் மீது ஈவு இரக்கம் பார்க்கக்கூடாது. அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆனால் பயங்கரவாதிகள் மக்களைக் மனித கேடயங்களாக பயன்படுத்த முனைவர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனிதர்களை கேடயங்களாக பாவித்தது புலிகள் மட்டுமே. அதுதான் ஆண்டவர் அவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே இஸ்லாமியப் பயங்கரவாதிகளை குறித்து மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின்ட கருத்தைப் பார்த்தால் மேற்குலம் பயங்கரவாதிகளை மட்டும் தான் அழிப்பர்.அப்பாவி மக்களை கொல்ல மாட்டார்கள் என்று சொல்வது போல இருக்குது. பயங்கரவாதிகளை உருவாக்கினதே இந்த மேற்குலம் என்பதை வசதியாய் மறந்து போனார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.