Jump to content

உன் அழைப்பிற்கு நன்றி.


Recommended Posts

இத்தனை அழகாய்
இருப்பிடம் வேறெங்கும்
இருக்குமா தெரியவில்லை.
வேளைக்கு உணவு;
நோய் காணும் முன்னே மருந்து;
யாருக்கு கிடைக்கும் சொல்லுங்கள்.

விரட்டி உயிர் பறிக்கும்
வேட்டையன் இல்லை.
மட்டற்ற கலவிக்கு 
சாஸ்த்திரமும் வேண்டியதில்லை.
ஜாலத்தில் கிளர்கிறது
வர்ணங்களால்
வடிவம் கொண்ட உலகு.

உயிர் வாழ்வதுக்குண்டான
அனைத்து உத்தரவாதமும்
உனக்குண்டு.
இத்தனைக்கும் எதிர்மாறாய்
சேறும் சகதியுமாக
நிலையாமையில்
கட்டமைக்கப்பட்டதென் 
அழுக்காறு உலகு.

இரையில் பொறி வைத்து
உயிர் பறிக்கும் குரூரம்.
நெளியும் புழுவில்
ஒழியும் முள்
குரல் வளை கிழிக்கும்.
உணவுக்குள் மரணம்
ஒளிந்திருக்கும் சாபம்.

உயிர் காவும் வேட்டையன்
வலை விரிப்பான். வீசுவான்.
ஓடி ஒழிந்து 
வாழ்வின் பாதிக்காலம்
மறை முகமாய்
பதுங்கிப் போகும்.

இன்றோ நாளையோ
அடிக்கின்ற
உக்கிர வெயிலில்
வறண்டு போகும்
என் வாழ்விடம்.
பாளம் பாளமாய்
நிலம் பிளக்கும்.
நீறாகும்.

நான் துடிப்பேன்.
துளி நீருக்காய்
திறந்து திறந்து
வான் பார்த்து
என் வாய் மூடும்.
சாவேன். 
கருவாடவேன்.
என் மரணம்
சூரியனைச் சபிக்கும்.
காலக் காக்கைகள்
என் சாவைக் கொண்டாடும்.

ஆனாலும்….

உன் 
கண்ணாடித் தொட்டிக்குள்
நான் 
வருவதாக இல்லை.

12316115_475410825998040_574389003542872

 

- சக்கரவர்த்தி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முந்தி ஒரு காலம் பெட்டைகள் போகும் போது பெடியள் பாடும் பாடல். ஒரு நமட்டுச் சிரிப்புடன் ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு போவார்கள். அந்த ஒரு தருணம் எத்தனையோ கதை சொல்லும்.
    • மேற்குலகின் உக்ரேனுக்கான எடுபிடிகளை பார்க்கும் போது உலகில் வேறெங்கும் எந்தவொரு  பிரச்சனைகளும்  இல்லை போல் தெரிகின்றது.😂 ரம்ப் மாத்தயா வாறதுக்கு முதல் எதாவது செய்து முடிச்சிடணும் எண்ட அவசரம் ஜேர்மனியின்ர முகத்திலை தெரியுது. 🤣
    • மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன். 1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து. 2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்"  போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை. ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல்  கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன். தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது. slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.
    • இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.