Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை! திருமலை - முல்லைத்தீவு ஊடாக அமைக்க திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
rood.jpg

கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு, பொலன்னறுவ, திருகோணமலை ஊடான வடக்கிற்கான நெடுஞ்சாலைத் திட்டம் உள்ளிட்ட மூன்று பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த திட்டங்களுக்கு 13.4 பில்லியன் டொலர் (1900 பில்லியன் ரூபா) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சீனா, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உள்ளூர் மூலங்கள் மூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய மாகாணத்துக்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் ஆரம்பிக்கப்படும். அதையடுத்து, கஹதுடுவவுக்கும், பெல்மதுல்லவுக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும், வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டமும் ஆரம்பிக்கப்படும்.

வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் தம்புள்ளவில் ஆரம்பிக்கப்பட்டு, பொலன்னறுவ, கந்தளாய், திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் வரை அமைக்கப்படும். இதற்கு 5.5 பில்லியன் டொலர் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை வவுனியா, கிளிநொச்சி வழியாக அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் திருகோணமலைத் துறைமுகம் மற்றும், சுற்றுலாத் துறை வளர்ச்சி என்பனவற்றைக் கருத்தில் கொண்டு இந்த திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரசபையின் தலைவர், நிகால் சோலங்காராச்சி தெரிவித்துள்ளார்.

rood.jpg

roodd.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை - முல்லை - யாழ் ஊடான நெடுஞ்சாலை சிறந்ததொரு திட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தையும் கடற்படையையும் மிக வேகமாக இணைக்கலாம். அப்படியே சிங்களக் குடியேற்றங்களை சிறப்பிக்கலாம். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாலி said:

திருமலை - முல்லை - யாழ் ஊடான நெடுஞ்சாலை சிறந்ததொரு திட்டம். 

இந்த அதிவேக நெடுஞ்சாலை பொலன்னறுவையையும் இணைக்கின்றதென்பது இன்னுமொரு வரப்பிரசாதம். இலங்கை மக்களுக்கான போக்குவரத்து மேம்பட்ட நிலைக்குச் செவ்வது என்பது சிறப்பானதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேகச் சாலையில் பயணிக்க காசும் கொடுக்கனுமாம்.. வரியும் கட்டனுமாம்.. வாகனமும் வைச்சிருக்கனுமாம். இவை எல்லாம் மக்கள் மீது விலை அதிகரிப்பாக திணிக்கப்படும். விபத்துக்களும் ஏராளமாம். வடக்கிற்கு ஒழுங்கான தொடரூந்துச் சேவை ஒன்றை நடத்தினாலே.. போதும்.. உந்த வீதி அமைப்பின் உள்நோக்கம்.. வடக்கை.. இராணுவ.. சிங்கள மயப்படுத்தலை முக்கியமாகக் கொண்டது என்பது வெளிப்படை. அது மக்கள் முன் மறைக்கப்படாது கொண்டு செல்லப்பட வேண்டும். மக்களே விழிப்பாக இருங்கள்.

ஒருவேளை இப்படி ஒரு அதிவேகப் பாதை அமைப்படனும் என்றால்.. வடக்குக் கிழக்கு மாகாண அரசுகளின் ஆலோசனை பெறப்பட்டு அதன் கீழ் அமையனும். அப்ப தான் உள்ளூர் மக்களுக்கு பயன்கிட்டும். சிங்கள அரசின் இராணுவ.. குடியேற்ற நோக்கங்களை நிறைவேற்ற இத்திட்டங்கள் பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம்.. கல்லோயா அபிவிருத்தித்திட்டம் என்ற போர்வையில் அம்பாறையும் கிழக்கும் சிங்கள மயமானதை இங்கு கவனத்தில் எடுப்பது மிக முக்கியமாகும். ஐ தே கட்சி நாசூக்காக சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தி வரும் கட்சிகளில் ஒன்று. மகிந்த நேரடி ஆபத்து என்றால்.. மைத்திரியும் ரணிலும் மறைமுக ஆபத்து.. மகிந்தவுக்கு நிகரானவர்களே. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் தன்னலம் கருதி எது செய்தாலும் ---------------------------- :cool:

இன அழிப்பிற்கும் இன குடியேற்றங்களுக்கும் வீதிகள் மிக முக்கியமானது. இதைத்தான்  ஹிட்லரும் செய்தார்.

Edited by நிழலி
பண்பட்ட வரி நீக்கம்

  • 3 weeks later...
[ சனிக்கிழமை, 02 சனவரி 2016, 12:08.08 PM GMT ]
highway_002.jpg
திருகோணமலை ஊடாக வடக்கு அதிவேக நெடுஞ்சாலை திட்டம் இந்த ஆண்டில் செயற்படுத்த ஆரம்பிக்கப்படும் என்று, பெருந்தெருக்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கும் புதிய திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. 

இந்த திட்டமே 2016ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். 

முன்னதாக  வவுனியா, கிளிநொச்சி வழியாக வடக்கு நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. 

எனினும், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி என்பவற்றை கருத்திற்கொண்டும்,  நிலங்களை சுவீகரிக்கும் வசதியை கருத்திற் கொண்டும், திருகோணமலை, முல்லைத்தீவை இணைத்து, வடக்கு அதிவேக நெடுஞ்சாலையை அமைக்கத் தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. 

 

http://www.tamilwin.com/show-RUmuyBTWSWjq7H.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.