Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் 5 ஆண்டுகளில் புதிதாக 18 விகாரைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் 5 ஆண்டுகளில் புதிதாக 18 விகாரைகள்
வடக்கில் 5 ஆண்டுகளில் புதிதாக 18 விகாரைகள்
போருக்குப் பின்னரான கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணத்தில் புதிதாக 18 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

2009 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 29 விகாரைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டு அந்த எண் ணிக்கை 47 ஆக அதிகரித்துக் காணப்படுகின்றன.

வடக்கில் இவ்வாறு வடக்கு மாகாண புள்ளிவிபரக் கையேட்டின் விபரங்கள் தெரிவிக்கின்றன.அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
2009 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 2 ஆயிரத்து 373 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 2 ஆயிரத்து 541 ஆக அதிகரித்துள்ளன. 221 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 260 ஆக அதிகரித்துள்ளன. மசூதிகள் 11 ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் தற்போது 18 ஆக அதிகரித்துள்ளன. விகாரைகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரையில் 4 ஆகவே யாழ்.மாவட்டத்தில் காணப்படுகின்றது.

வவுனியா மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 300 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 411 ஆக அதிகரித்துள்ளன. தேவாலயங்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை  41 ஆகவே காணப்படுகின்றது. 2009 ஆம் ஆண்டு 18 மசூதிகள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அது 20 ஆக அதிகரித்துள்ளன. விகாரைகள் 2009 ஆம் ஆண்டு 22 ஆகக் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 23 ஆக அதிகரித்துள்ளன. 

கிளிநொச்சி மாவட்டத்தில் 309 இந்து ஆலயங்கள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு 488 ஆக அதிகரித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு 81 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 129 ஆக அதிகரித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு மசூதிகள் எவையும் காணப்படாத நிலையில் கடந்த ஆண்டு 9 மசூதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று விகாரைகள் எவையும் 2009 ஆம் ஆண்டு காணப்படாத நிலையில் கடந்த ஆண்டு ஓர் விகாரை அமைக்கப்பட்டுள்ளது. 

மன்னார் மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 133 இந்து ஆலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 229 ஆக அதிகரித்துள்ளன. 142 தேவாலயங்கள் காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு அது 224 ஆக அதிகரித்துள்ளன. 56 மசூதிகள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் அது தற்போது 80 ஆக அதிகரித்துள்ளன. 3 விகாரைகள் 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் அது தற்போது 8 ஆக அதிகரித்துள்ளன. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டு 163 இந்து ஆலயங்கள் இருந்துள்ள நிலையில் தற்போது 399 ஆக அது அதிகரித்துள்ளன. தேவாலயங்கள் 37 ஆக 2009 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலையில் 66 ஆக அதிகரித்துள்ளன. மசூதிகள் 4 காணப்பட்ட நிலையில் அது கடந்த ஆண்டு 5 ஆக அதிகரித்துள்ளன. 2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் விகாரைகள் எதுவும் காணப்படாத நிலையில் 2014 ஆம் ஆண்டு அது 11 ஆக அதிகரித்துள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
14-Dec-2015 09:47 am

http://onlineuthayan.com/news/4870

  • கருத்துக்கள உறவுகள்

2 லட்சம் ஆமிக்கு விகாரைகள் போதாது தானே. பேந்து கொழும்பில் 5 லட்சம் தமிழ் மக்களுக்கு கோயில் காணாது என்று ஒரு  விசர் கேள்வியை கேட்க்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா ...யாராவது தெற்கில் எவ்வளவு கோயில்கள் அதிகரித்துள்ளன என்ற புள்ளி விபரங்களையும் தாங்கோவன்.....ஓ அதைக்கேட்டால் சாணக்கிய வாதிகளுக்கு கோவம் வந்துவிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கம் நன்றாகத்தான் நடக்கிறது tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.