Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர்

Featured Replies

400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர்

 
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர்:-

 
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் காலிமுகத்திடலில் ஜனவரி 26 ம் திகதி நேரில் பார்வையிடவுள்ளனர்.

2012 இல் கைப்பற்றப்பட்ட 1.5 தொன் யானைதந்தங்களை உலக சுங்க தினமான ஜனவரி 26 ம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களம் காலிமுகத்திடலில் தீமூட்டி அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கென்யாவிலிருந்து கொழும்பு ஊடாக துபாய்க்கு கடத்தப்பட்டவேளை இலங்கை சுங்கத்துறையினர் இந்த தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127194/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருட்களை எரித்தழித்தால் அது நியாயமானது...! தந்தங்களை எரித்தழிப்பது நல்லதல்ல., மாறாக ஏலத்தில் விட்டு அப் பணத்தில் ஏழை மக்களின் வறுமையை அகற்ற ஏதாவது செய்யலாம்....!

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎24‎/‎2015 at 11:13 AM, நவீனன் said:

400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர்

 
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை பார்வையிட உள்ளனர்:-

 
400 மில்லியன் பெறுமதியான 350 யானை தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் காலிமுகத்திடலில் ஜனவரி 26 ம் திகதி நேரில் பார்வையிடவுள்ளனர்.

2012 இல் கைப்பற்றப்பட்ட 1.5 தொன் யானைதந்தங்களை உலக சுங்க தினமான ஜனவரி 26 ம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களம் காலிமுகத்திடலில் தீமூட்டி அழிப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கென்யாவிலிருந்து கொழும்பு ஊடாக துபாய்க்கு கடத்தப்பட்டவேளை இலங்கை சுங்கத்துறையினர் இந்த தந்தங்களை கைப்பற்றியிருந்தனர். இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127194/language/ta-IN/article.aspx

நல்ல தொலை நோக்குள்ள தேசிய அரசாங்கம் போலத்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On December 24, 2015 at 5:14 AM, suvy said:

போதைப் பொருட்களை எரித்தழித்தால் அது நியாயமானது...! தந்தங்களை எரித்தழிப்பது நல்லதல்ல., மாறாக ஏலத்தில் விட்டு அப் பணத்தில் ஏழை மக்களின் வறுமையை அகற்ற ஏதாவது செய்யலாம்....!

 

 

Quote

இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளிற்கு அமைய இந்த தந்தங்கள் தீமூட்டி அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எமது நாட்டின் பன்னாட்டு கடப்பாடுகளிற்கு அமைவாகத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

368 மில்லியன் ரூபா பெறுமதியான 359 யானை தந்தங்களை அழிக்கிறது ஸ்ரீலங்கா

[ Tuesday,26 January 2016, 04:04:09 ]   
yanai.jpg

சர்வதேச சுங்க தினத்தை முன்னிட்டு சுமார் 368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு காலிமுகத் திடலில் தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.

சர்வதேச சுங்க தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்ட 1528.9 கிலோ நிறையுடைய 359 யானைத் தந்தங்கள் இவ்வாறு அழிக்கப்படவிருப்பதாக சுங்கத்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கடல் ஊடாக கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது கப்பல் ஒன்றினை சோதனை செய்து அதிலிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து இந்த யானைத் தந்தங்கள் கைப்பற்றப்பட்டன.  

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இவை ஆபிரிக்காவிலிருந்து கடத்தப்பட்டவை என்பது உறுதியானது.

இந்த நிலையில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இவற்றை அழிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதோடு, இதன்போது பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக அழிவடையும் நிலையில் உள்ள விலங்குகளை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பான சயிட்டிஸின் பொது செயலாளர் ஜோன் ஸ்கென்லன் ஸ்ரீலங்காவை சென்றடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://ibctamil.com/news/index/17590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.