Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையணியை அடித்து நொருக்கிய நியுசிலாந்து அணி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்தார்கள்.

இலங்கையின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்டக் காரர்களான சங்கக்கார , மஹேல, டில்ஷான் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்த வேளையில் கூட நியுசிலாந்தில் மரண அடி வாங்கிய இலங்கையணி, கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக நியுசிலாந்தில் வாங்கிய அடியின் வலி மாறுமுன்னர் தேடிப்போய் மீண்டும் அடிவாங்கியிருக்கிறது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி, நியுசிலாந்தணியினைக் காட்டிலும் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் என்ன விளையாடுகிறோம் என்று தெரியாமல் வெறும் 133 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, நியுசிலாந்தணிக்கு மிக இலகுவான வெற்றியை பெற்றுக்கொடுக்க இலங்கையணி முயன்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்டக் காரரான கேன் வில்லியம்சன் மற்றும், உலகின் முண்ணனி வேகப் பந்துவீச்சாளர்களான போல்ட், செளத்தீ ஆகியோரையும், அதிரடி துடுப்பாட்டக் காரர் பிரெண்டன் மக்கலத்தையும் கொண்டிருந்த நியுசிலாந்தணிக்கு இலங்கையணியைக் கண்டது மட்டற்ற மகிழ்ச்சி. "இவங்கள் ரொம்ப நல்லவங்கள், எவ்வளவுதான் அடித்தாலும் கூட, எந்த சலிப்புமில்லாமல் வருடாவருடம் தாங்களாகவே கேட்டு வந்து அடிவாங்குகிறார்கள். இந்த முறையும் கவனித்து அனுப்பலாம்" என்று காத்திருந்தவர்களின் எதிர்பார்ப்பை மத்தியூஸ் தலமையிலான இலங்கையணி நிறைவேற்றி வைத்திருக்கிறது.

சரி, இன்றைக்கு நடந்த முதலாவது ஒருநாள்ப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாட  ஆசைப்பட்ட இலங்கையணி முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள் முதல் 6 விக்கெட்டுக்ளையும் இழந்து வெறும் 60 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஊசலாடிக் கொண்டிருந்தது. புதுமுகம் மிலிந்த சிரிவர்த்தனவும், பந்துவீச்சாளர் குலசேகரவும், வந்தா மலை, போனால் மயிர் என்று விளையாடி ஓட்ட எண்ணிக்கையை 188 இற்குக் கொண்டுவந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து போனார்கள்.

ஏதோ 388 ஓட்டங்களைக் குவித்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டு இலங்கையணி பந்துவீசத் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இலங்கையணியின் நப்பாசைகள் எல்லாவற்றையும் அப்படியே மூட்டையாகக் கட்டி பிரெண்டன் மக்கலம் சிக்ஸர்களாக மைதானத்துக்கு வெளியே விளாசித் தள்ள, ஓட்ட வேகம் ஓவர் ஒன்றிற்கு பட்து அல்லது பதினொன்றை எட்ட, இலங்கையணி பந்துவீச்சாளர்கள், தமக்கும் நடந்துகொண்டிருக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லாததுபோல் பந்துவீச, வெறும் 21 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது நியுசிலாந்தணி.

 

இதில், அணித்தலைவர் மக்கலம் வெறும் 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 55 ஓட்டங்களையும் , குப்டில் 56 பந்துகளில் 79 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

பிற்குறிப்பு :இன்னும் சில போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், மேலும் மேலும் படு தோல்விகளைச் சந்திக்காமல், இலங்கையணி முழுவதுமாக சுகவீனத்தைக் காரணம் காட்டி இலங்கைக்குத் திருப்பிச் செல்வதும் யோசனையில் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது !

46 minutes ago, ragunathan said:

இலங்கையணி கடந்த சில நாட்களாக நியுசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவருவது அறிந்ததே.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிக்கள் ஆகியவற்றில் விளையாடும் இலங்கையணி எதிர்பார்க்கப்பட்டதுபோலவே டெஸ்ட் போட்டிகளில் அவமானகரமான தோல்விகளைச் சந்தித்து இருந்தது குறிப்பிடத் தக்கது.

அணியின் தலைவர் ஆஞ்சலோ மத்தியூஸ், சண்டிமால், ஆரம்பத் துடுப்பாட்டக் காரர் கருணாரட்ண ஆகியோரைத் தவிர சிறிது கூட அனுபவம் இல்லாத துடுப்பட்டக்ல் காரர்களையும், வழமைபோல சொதப்பும் பந்துவீச்சாளர்களையும் அள்ளிக் கட்டிக் கொண்டு இலங்கையணி நியுசிலாந்துக்குப் புறப்படும்போதே சர்வதேச கிரிக்கெட் வர்ணணையாளர்கள், இவர்களுக்கு ஏன் இந்த வேலை, பேசாமல் வீட்டில் இருக்கலமே என்று கேட்காத குறையாக விமர்சித்திருந்தார்கள்.

இலங்கையின் முன்னாள் நட்சத்திரத் துடுப்பாட்டக் காரர்களான சங்கக்கார , மஹேல, டில்ஷான் ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்த வேளையில் கூட நியுசிலாந்தில் மரண அடி வாங்கிய இலங்கையணி, கடந்த உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக நியுசிலாந்தில் வாங்கிய அடியின் வலி மாறுமுன்னர் தேடிப்போய் மீண்டும் அடிவாங்கியிருக்கிறது.

குறிப்பாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி, நியுசிலாந்தணியினைக் காட்டிலும் அதிக ஓட்டங்களைப் பெற்றிருந்தபோதும் கூட, இரண்டாவது இன்னிங்ஸில் என்ன விளையாடுகிறோம் என்று தெரியாமல் வெறும் 133 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, நியுசிலாந்தணிக்கு மிக இலகுவான வெற்றியை பெற்றுக்கொடுக்க இலங்கையணி முயன்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

உலகின் மிகச் சிறந்த துடுப்பாட்டக் காரரான கேன் வில்லியம்சன் மற்றும், உலகின் முண்ணனி வேகப் பந்துவீச்சாளர்களான போல்ட், செளத்தீ ஆகியோரையும், அதிரடி துடுப்பாட்டக் காரர் பிரெண்டன் மக்கலத்தையும் கொண்டிருந்த நியுசிலாந்தணிக்கு இலங்கையணியைக் கண்டது மட்டற்ற மகிழ்ச்சி. "இவங்கள் ரொம்ப நல்லவங்கள், எவ்வளவுதான் அடித்தாலும் கூட, எந்த சலிப்புமில்லாமல் வருடாவருடம் தாங்களாகவே கேட்டு வந்து அடிவாங்குகிறார்கள். இந்த முறையும் கவனித்து அனுப்பலாம்" என்று காத்திருந்தவர்களின் எதிர்பார்ப்பை மத்தியூஸ் தலமையிலான இலங்கையணி நிறைவேற்றி வைத்திருக்கிறது.

சரி, இன்றைக்கு நடந்த முதலாவது ஒருநாள்ப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாட  ஆசைப்பட்ட இலங்கையணி முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள் முதல் 6 விக்கெட்டுக்ளையும் இழந்து வெறும் 60 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஊசலாடிக் கொண்டிருந்தது. புதுமுகம் மிலிந்த சிரிவர்த்தனவும், பந்துவீச்சாளர் குலசேகரவும், வந்தா மலை, போனால் மயிர் என்று விளையாடி ஓட்ட எண்ணிக்கையை 188 இற்குக் கொண்டுவந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து போனார்கள்.

ஏதோ 388 ஓட்டங்களைக் குவித்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டு இலங்கையணி பந்துவீசத் தொடங்கியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இலங்கையணியின் நப்பாசைகள் எல்லாவற்றையும் அப்படியே மூட்டையாகக் கட்டி பிரெண்டன் மக்கலம் சிக்ஸர்களாக மைதானத்துக்கு வெளியே விளாசித் தள்ள, ஓட்ட வேகம் ஓவர் ஒன்றிற்கு பட்து அல்லது பதினொன்றை எட்ட, இலங்கையணி பந்துவீச்சாளர்கள், தமக்கும் நடந்துகொண்டிருக்கும் போட்டிக்கும் சம்பந்தமில்லாததுபோல் பந்துவீச, வெறும் 21 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 191 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது நியுசிலாந்தணி.

 

இதில், அணித்தலைவர் மக்கலம் வெறும் 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 55 ஓட்டங்களையும் , குப்டில் 56 பந்துகளில் 79 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத் தக்கது.

பிற்குறிப்பு :இன்னும் சில போட்டிகள் மீதமிருக்கும் நிலையில், மேலும் மேலும் படு தோல்விகளைச் சந்திக்காமல், இலங்கையணி முழுவதுமாக சுகவீனத்தைக் காரணம் காட்டி இலங்கைக்குத் திருப்பிச் செல்வதும் யோசனையில் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது !

நன்றி ரகு , உங்கள் வர்ணனைக்கு

இலங்கையணி முதல் 10 ஓவர்கள் முடிவதற்குள்  5 விக்கெட்களை இழந்து 27 ஓட்டங்களைதான் எடுத்து இருந்தார்கள்.

இது சும்மா கிண்டல்தானே:grin:

இருப்பவர்களைதானே கூட்டி வரமுடியும். அதை விட மலிங்க, தர்மிக்க பிரசாத் காயம் காரணமாக விளையாடமுடியவில்லை.

 

இந்த முறை ஏனோ உங்கள் விமர்சனத்தோடு ஒத்துபோக முடியவில்லை ரகு,

பல புதிய வீரர்கள் அனுபவம் குறைவு. தொடர்ந்து சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும்.

இன்னும் ஒன்று  தோல்வி அடையும்போது மட்டும் விமர்சிக்காமல் வெற்றி பெறும்போதும் உங்கள் விமர்சனத்தை எதிர் பார்க்கிறேன்:)

இதே நியூசீலாந்து  அணி தங்கள் இடத்தில்தான் இப்படி விளையாடுவார்கள் என்பதையும் மறந்து விட்டீர்கள்.

அடுத்து வரும் போட்டிகள் பற்றிய வர்ணனையை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வயித்தெரிச்சல், வேறொன்றுமில்லை !<_<

1 minute ago, ragunathan said:

வயித்தெரிச்சல், வேறொன்றுமில்லை !<_<

அது எனக்கு  நல்லா தெரியும்:grin:

நல்லதொரு வர்ணனைக்கு நன்றி ரகு .

நேற்று மாட்ச் இவ்வளவு விரைவில் முடிந்தது ஒரு வித சந்தோசம் எனக்கு .வீட்டில் பார்ட்டி விருந்தினர்களை கவனிக்காமல் மாட்ச்சை பார்த்துகொண்டு இருந்தால் அதுவேறு பிரச்சனையாகிவிடும் .

இந்தியா போல் அல்லாது இலங்கை வெளிநாடுகளிலும் நன்றாக ஆடும் அணி ஆனால் இந்த நியுசீலாந்து சுற்று உண்மையில் சரியான ஏமாற்றம் .இரண்டு விக்கெட் விழுந்த பின் அடுத்துவந்தவர்களும் உடன் பவிலியன் திரும்பியது பலத்த ஏமாற்றம் .திரணம ,சாண்டிமால்  சங்கர்காரா ,மேகால இடத்திற்கு வருவது கஷ்டம் என்றுதான் நினைக்கின்றேன் .

மென்டிஸ் அவுட் ஆகியவிதத்தை பார்த்து வாய்விட்டு சிரித்தேன் .

  • கருத்துக்கள உறவுகள்

துடுப்பாட்டக்காரருக்கு சாதகமான ஆடுகளம் அதே நேரம் புதிய பந்து நன்றாக சுவிங் ஆகும் போது முதல் 15 ஓவர்களையும் தடுப்பாட்டம் நடத்த தீர்மானித்தால் எதிரணி தலைமை கிடுக்கிப்பிடி பாதுகாப்பு வியூகம் அமைத்து  தாக்குதல் பாணியில் நெருக்கடி கொடுப்பார், நியூசிலாந்து அந்த முதல் 15 ஓவர்களுக்குள்ளேயே  இலங்கையணியின் வால்  பகுதிவரை ஊடறுத்துவிட்டது அதன் பின் இலங்கை அணியால் தாக்குதல் ஆட்டம் ஆடமுடியாது.
மிகச்சிறிய இலக்கை நோக்கி பந்து வீசும் போது இறுக்கமான கிடுக்குப்பிடியான களத்தடுப்பே உகந்ததது ஆனால் இலங்கையணி தலைமை  தற்காப்பு வியூகம் அமைத்து கொடுத்ததின் மூலம் வேக பந்து வீச்சாளர்கள் பந்தினை சுவிங் செய்ய முடியாதவாறு நியூசிலாந்து ஆட்டக்காரர்கள் அடித்து நொருக்கியுள்ளார்கள் .
கிடுக்கி பிடியான களத்தடுப்பை இலங்கையணி கடை பிடித்திருந்ததாலும் நியூசிலாந்து பந்தை சுவிங் செய்யாமலிருக்க அடித்தே விளையாடிருப்பர் ஆனால் இறுக்கமான கிடுகிப்பிடியான களத்தடுப்பின் மூலம் விக்கட்டை கைப்பற்றி ரன் விகிதாசாரத்தை குறைத்திருக்கலாம் என்று கருதுகிறேன்.
எனது கருத்து சரியா பிழைய என்று தெரியாது எனென்றால் இந்த ஆட்டத்தினை பார்க்கவில்லை மத்தியூசின் தலைமை பாணி பொதுவாக இப்படித்தான் இருக்கும் என்ற ஊகத்தினடிப்படையிலும் சமூக வலைதளங்களின் கருத்துகளினடிப்படையில் கருத்து பதிவிட்டுள்ளேன் தவறிப்பின்  மன்னிக்கவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.