Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கும் மகிந்த அணி

Featured Replies

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கும் மகிந்த அணி
 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி அமைக்கும் மகிந்த அணி
மகிந்த ராஜபக்ச சார்பு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “அபே ஸ்ரீலங்கா பெரமுண“ அல்லது “அவ ஸ்ரீலங்கா ப்ரொன்ட்“ (எமது இலங்கை முன்னணி) என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
தேசிய சுதந்திர முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, பிவிதுறு ஹெல உறுமய மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் இணைந்து புதிய முன்னணியை உருவாக்குதற்கு தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மஹிந்த சார்பு அணியினர் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதோடு, இதற்கு பலர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போராட்டம் காரணமாகவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக மற்றுமொரு தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி பிளவின் விளிம்பில் இருப்பதாகவும், அதில் அங்கம் வகிக்கும் 15 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுடன் வரவிருக்கும் தீர்வுத்திட்டத்தினால் பாதிப்படையப் போகும் அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து இந்த்தத் தேர்தலில் செயற்படவேண்டும்.

45 minutes ago, வாலி said:

இவர்களுடன் வரவிருக்கும் தீர்வுத்திட்டத்தினால் பாதிப்படையப் போகும் அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து இந்த்தத் தேர்தலில் செயற்படவேண்டும்.

அவர்களுக்கு உதவியாக உருவாக்கப்பட்டதா பேரவை?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Sooravali said:

அவர்களுக்கு உதவியாக உருவாக்கப்பட்டதா பேரவை?

நிச்சயமாக. இந்தப் பேரவையில் இருப்பவர்கள் மகிந்த மற்றும் புலம்பெயர் கோஸ்டி ஆதரவாளர்கள். இனப் பிரச்சினைக்குத் தீர்வு வந்தால் பாதிப்படையப்போகும் முக்கியமான இரு தரப்புகள் இவை. எனவே இவர்கள் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்.

விசித்திரமான உண்மை, தமிழர் அரசியலில் மீண்டும் பல குழப்பங்கள் ஏமாற்றங்கள் காத்து கிடப்பது மாத்திரம் கண்ணனுக்கு தெரிகிறது.

30 வருட சாத்த்வீக போராட்டம், பின்னர் 35 வருட ஆயுத போராட்டம், பின்னர் 6 வருட அடிமை போராட்டம் அதில் 2 வருட மாகாணசபை போராட்டம் எல்லாம் நடந்தும் இன்னும் தொடரும் உரிமை போராட்டம்.

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இவர்களுடன் வரவிருக்கும் தீர்வுத்திட்டத்தினால் பாதிப்படையப் போகும் அனைத்துத் தரப்பினரும் கைகோர்த்து இந்த்தத் தேர்தலில் செயற்படவேண்டும்.

கவனம் ...சிலவேளை பேரவைக்கு முதலில் கூத்தமைப்பு இவர்களுடன் கைகோர்க்கும் வாய்ப்பு அதிகம் ....கிந்திய பொம்மலாட்ட காரர்களின் சாணக்கிய அணுகுமுறையாக இருந்து தொலைக்கப்போகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.