Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்:

Featured Replies

"கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்" சுரேஷ் பிரேமசந்திரன்:

 

"கட்சியின் தலைமையிடம் கேட்கவேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள்"  சுரேஷ் பிரேமசந்திரன்:

கட்சியின் தலைமையிடம் கேட்க வேண்டிய கேள்விகளை இங்குள்ளவர்களிடம் கேட்காதீர்கள் என ஊடகவியலளார்கள் மீது ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன். கடும் சீற்றத்துடன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாம் கட்ட கூட்டம் ஞாயிறு காலை யாழ்.பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்குமாறு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா ? என ஊடகவியலாளர் ஒருவர் இணைத்தலைவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பி.லக்ஸ்மன் தமிழரசு கட்சி சார்பாக அக் கட்சியின் உப தலைவர் சி.க.சிற்றம்பலம் இணைந்துள்ளார் .அவர் அது தொடர்பில் கருத்து கூறுவார் என தெரிவித்தார்.

அதனை அடுத்து கருத்து தெரிவித்த தமிழரசு கட்சியின் உப தலைவர் சி.க.சிற்றம்பலம் ,தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் , கட்சியின் நீண்ட கால உறுப்பினர், எனவே நான் தமிழரசு கட்சி சார்பில் வந்துள்ளேன்.என தெரிவித்தார்.

அவ்வாறியின் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கிக்க தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கபட்டதா ? அக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் அனுமதியுடன் தான் இந்த பேரவையில் அங்கம் வகிக்கின்றீர்களா ? என சி.க.சிற்றம்பலத்திடம் ஊடகவியலாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பிய போது ,

குறுக்கிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் இவ்வாறான கேள்விகளை நீங்கள் கட்சியின் தலைமை என கூறுபவர்களையும், அக் கட்சியை சார்ந்தவர்களையும் கேட்க வேண்டும். இவ்வாறன கேள்விகளை இங்கே கேட்காதீர்கள். அதனை போய் கட்சி அலுவலகத்தில் கேளுங்கள் என கடும் சீற்றத்துடன் ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127289/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தளவுக்கு மண்டையன் குழுத்தலைவர் தேசியப்பட்டியல் எம்பி பதவிக்கு கூட்டமைப்பின் தலைமையிடம் கெஞ்சியிருக்கின்றார் எனப் புரிகின்றது. திரு. சி. க. சிற்றம்பலமும் தேசியப்பட்டியல் எம்பிக்கு அல்லும் பகலும் அலைந்து திரிந்தவர். அதனால்தான் சி.க.சி. இடம் கேட்ட கேள்விக்கு மண்டையன் குழுத் தலைவர் கடுப்பாகிவிட்டார்.

Birds of a feather flock together!

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் தொடர்பில் தெளிவைப் பெற விருப்பமில்லாதவர்கள் அதற்கு அரசியல் சாயம் பூச முனைவதனூடாக சம் சும் கும்பலின் சோர அரசியலுக்கான நியாயம் கற்பிப்பை முன்னெடுக்க விளைகிறார்கள். சம் சும் கும்பல்.. அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்படும் அதே வேளை.. அது உருவாக்கவல்ல.. ஆபத்துக்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதனை தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள். இக்காணொளி.. தமிழ் மக்கள் பேரவை பற்றி.. அதன் ஆக்க கர்த்தாக்களால்.. சொல்லப்படும் செய்தியில் தற்போதைக்கு மக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். அவர்களை செயற்பட விட்டு அவர்களின் போக்கு திசை அறிந்த பின் தான் மக்கள் அடுத்த நிலை குறித்து முடிவெடுக்க வேண்டும். அதேவேளை சம் சும் கும்பலின் சோர அரசியலால் உண்டாக வல்ல ஆபத்துக்களை.. மக்கள் கவனிக்காமல் விட முடியாது. அது தனித்துக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். tw_blush:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கம் குறைஞ்சதுகள் எல்லாத்தையும் போட்டு குழப்புதுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.