Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு

Featured Replies

மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
 

 கேரளா என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது புட்டு தான். ஆனால் மீன் குழம்பு கூட, கேரளாவில் சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இந்த மீன் மொய்லி ரெசிபியானது தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் ஒரு மீன் குழம்பு.

Meen Moilee: Kerala Fish Curry

இந்த குழம்பிற்கு வாவல் மீன் அல்லது கிங்பிஷ் மீனைக் கொண்டு செய்யலாம். இங்கு அந்த கேரளா ஸ்டைல் மீன் குழம்பான மீன் மொய்லி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

 

தேவையான பொருட்கள்:

வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் பால் - 1 கப்

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும்.

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடே வேண்டும்.

பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!! இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிளகு தூளுக்குப் பதிலாய் மிளகாய்த் தூள் சேர்த்தால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.... சகோ சுவி வந்து சொல்லுங்கோ :)

இணைப்புக்கு நன்றி சகோதரம் :)

 

நான் டுபாயில் இருக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்ட சாப்பாடு இது. உறைப்பு இருக்காது, ஆனால் ருசியாக இருக்கும்.

இவர்களின் ஹோட்டல்களில், சூடை மீன் குழம்பும் வெள்ளைப் புட்டும் காலை நேர உணவாக தருவார்கள். அற்புதமாக இருக்கும்.

கேரளாவின் உணவுகள் மட்டுமா ருசி....?!tw_blush:

  • தொடங்கியவர்
10 hours ago, மீனா said:

மிளகு தூளுக்குப் பதிலாய் மிளகாய்த் தூள் சேர்த்தால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறேன்.... சகோ சுவி வந்து சொல்லுங்கோ :)

இணைப்புக்கு நன்றி சகோதரம் :)

 

எம்மவர்கள் எப்போதும் மிளகாய்த்தூள் பாவித்தே பழகி விட்டார்கள்<_<

ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து பாருங்கோ நல்லா இருக்கும்:)

நிழலி வேற சொல்லி இருக்கிறார் அற்புதம் என்று.

நன்றி உங்கள் கருத்துக்கும் வரவுக்கும்

  • தொடங்கியவர்
15 hours ago, நிழலி said:

நான் டுபாயில் இருக்கும் காலத்தில் அடிக்கடி சாப்பிட்ட சாப்பாடு இது. உறைப்பு இருக்காது, ஆனால் ருசியாக இருக்கும்.

இவர்களின் ஹோட்டல்களில், சூடை மீன் குழம்பும் வெள்ளைப் புட்டும் காலை நேர உணவாக தருவார்கள். அற்புதமாக இருக்கும்.

கேரளாவின் உணவுகள் மட்டுமா ருசி....?!tw_blush:

நன்றி நிழலி  உங்கள் வரவுக்கும் கருத்துக்கும்

அதுதானே அதுவும் டுபாயில் <_<

அதுசரி நிழலி டுபாய் என்னதான் நினைவு வருகிறது, நீங்கள் யாழுக்கு வந்த புதுதில் டுபாய் அனுபவம் தொடர்பாக எழுதி அரைகுறையாக அந்த தொடரை கைவிட்ட ஞாபகம். அதை நேரம் உள்ள போது தொடரலாமே 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அரைத்த மீன் குழம்பு என்று ஊரில் வைப்பார்கள் , அதன் எளிமையான வடிவம்தான் இது....!

வாழை மீன் ,ஒட்டி, ஓரா போன்றவை நல்லது...,

அங்கு காலையில் 6 மனிக்கு நாட்டு வைத்தியரின் (கதிரேசுப் பரியாரி வீமன்காமம் , ஜோர்ஜ் சுன்னாகம் சந்தைக்கு அருகில்) பேதி குடித்தால் மதியம் 2 மணி வரைக்கும் தண்ணியே குடிக்கேலாது , வெறுந் தேத்தண்ணிதான். சீதம் என்று வெள்ளையாகப் போகும் வரைக்கும் காத்திருந்து பின் அரைத்த குழம்புடன் சோறு தருவார்கள்.

அந்தக் குழம்பு வைக்கும் அழகே தனிதான், அம்மியில் எல்லா அன்னங்களையும் போட்டு மைய அரைத்து உறுட்டி எடுத்து பின் அம்மியையும் கழுவி வழித்து அதனுள் சேர்த்து தூள் இல்லாமல் அக்குழம்பு செய்வார்கள். பிள்ளை பெற்ற பெண்களுக்கும் பத்தியமாகச் செய்து குடுக்கிறது வழக்கம். மிளகின் காரம்தான் அதற்கு சுவை கூட்டும். (மண் கடிபடுறமாதிரி இருக்கெண்டு பிள்ளைகள் மீன் துண்டுகளை சொதியில் அலம்பிச் சாப்பிடுவினம் , அகப்பைக் காம்பால் அடி வாங்கிக் கொண்டு ஓடுவதும் வழக்கம்).  :)

  • தொடங்கியவர்
35 minutes ago, suvy said:

அரைத்த மீன் குழம்பு என்று ஊரில் வைப்பார்கள் , அதன் எளிமையான வடிவம்தான் இது....!

வாழை மீன் ,ஒட்டி, ஓரா போன்றவை நல்லது...,

அங்கு காலையில் 6 மனிக்கு நாட்டு வைத்தியரின் (கதிரேசுப் பரியாரி வீமன்காமம் , ஜோர்ஜ் சுன்னாகம் சந்தைக்கு அருகில்) பேதி குடித்தால் மதியம் 2 மணி வரைக்கும் தண்ணியே குடிக்கேலாது , வெறுந் தேத்தண்ணிதான். சீதம் என்று வெள்ளையாகப் போகும் வரைக்கும் காத்திருந்து பின் அரைத்த குழம்புடன் சோறு தருவார்கள்.

அந்தக் குழம்பு வைக்கும் அழகே தனிதான், அம்மியில் எல்லா அன்னங்களையும் போட்டு மைய அரைத்து உறுட்டி எடுத்து பின் அம்மியையும் கழுவி வழித்து அதனுள் சேர்த்து தூள் இல்லாமல் அக்குழம்பு செய்வார்கள். பிள்ளை பெற்ற பெண்களுக்கும் பத்தியமாகச் செய்து குடுக்கிறது வழக்கம். மிளகின் காரம்தான் அதற்கு சுவை கூட்டும். (மண் கடிபடுறமாதிரி இருக்கெண்டு பிள்ளைகள் மீன் துண்டுகளை சொதியில் அலம்பிச் சாப்பிடுவினம் , அகப்பைக் காம்பால் அடி வாங்கிக் கொண்டு ஓடுவதும் வழக்கம்).  :)

அவசரசத்தில் வாசித்தபோது  அம்மியையும் குழம்புக்குள் போடுவார்கள் என்று வாசித்து விட்டேன்:grin:

நல்ல காலம் மம்மி என்று  வாசிக்கவில்லை<_<

அழகான விளக்கம் சுவி அண்ணா. நன்றி உங்கள் கருத்துகளுக்கு.

13 hours ago, நிழலி said:

கேரளாவின் உணவுகள் மட்டுமா ருசி....?!tw_blush:

சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்

1 hour ago, suvy said:

மண் கடிபடுறமாதிரி இருக்கெண்டு பிள்ளைகள் மீன் துண்டுகளை சொதியில் அலம்பிச் சாப்பிடுவினம் , அகப்பைக் காம்பால் அடி வாங்கிக் கொண்டு ஓடுவதும் வழக்கம்

அதுசரி ஏன் எல்லா மம்மியும் அகப்பைக் காம்பால அடிக்கிறாங்கள்.

oqm9zn.jpg

 

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

 

அதுசரி ஏன் எல்லா மம்மியும் அகப்பைக் காம்பால அடிக்கிறாங்கள்.

oqm9zn.jpg

 

1 hour ago, ஜீவன் சிவா said:

 

ஊரில அந்த காலத்தில் அதுதான் அவசரத்துக்கு மம்மிமாரின் கையில அகப்படுகிறது, அல்லது விளக்குமாறு, தும்புகட்டைtw_astonished:

10 hours ago, நவீனன் said:

எம்மவர்கள் எப்போதும் மிளகாய்த்தூள் பாவித்தே பழகி விட்டார்கள்<_<

ஒரு மாறுதலுக்கு இப்படி செய்து பாருங்கோ நல்லா இருக்கும்:)

நிழலி வேற சொல்லி இருக்கிறார் அற்புதம் என்று.

நன்றி உங்கள் கருத்துக்கும் வரவுக்கும்

ஓக்கே ஓக்கே சகோதரம்

மம்மிமார் சமைக்கிறது பத்தாது எண்டு அவையையும் தூக்கி கறி வைக்கிற பிளான்.....  சாப்பிட்டு ஒழுங்காய் படிச்சிருந்தால் மம்மியவை ஏன்  அகப்பையை தூக்கினம் சகோதரங்கள்????? :cool:

Edited by மீனா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.