Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்ச்சைகளுக்கு மத்தியில் சுதந்திரதின  நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைகளுக்கு மத்தியில் சுதந்திரதின  நிகழ்வில் த.தே.கூட்டமைப்பு பங்கேற்கிறது

Published by MD.Lucias on 2016-02-03 07:54:25

sri-lanka-independence-day-sambanthan-an

இலங்கையின் 68ஆவது சுதந்திர தின விழா நாளை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் எதிர்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்பார்களென கூட்டமைப்பின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

எனினும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ மற்றும் தமிழரசுக்கட்சியின் முக்கிய பாராளுமன்ற பிரதிநிதிகளும் கலந்து சுதந்திர தினத்தில் கலந்து கொள்வது குறித்து இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை.

முன்னதாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாததன் காரணத்தால் இச்சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதை தவிர்க்குமாறு கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற பிரதிநிதிகளிடையே கருத்துக்கள் மேலெழுந்திருந்தன. அத்தகைய சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் தலைவர், ஊடகப்பேச்சாளர் ஆகிய இருவரும் சுதந்திரதினத்தில் பங்கேற்பது ஏறக்குறைய உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. முன்னதாக கடந்த வருடம் ஜனவரி எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நடைபெற்றிருந்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

அதேநேரம் நீண்டகலாமாக இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அம்முறைமை தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் ஸ்கொட்லாந்துக்க விஜயம் செய்துள்ளனர்.

அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி செயலாளரும் கல்முனை மேஜருமான நிஸாம் காரியப்பர் ஆகியோருடன் இணைந்து பல்வேறு உயர்மட்ட முக்கியஸ்தர்களுடன் விரிவான கலந்தாய்வுகளில் ஈடுபட்டுள்ளனர். இக்குழுவினர் இன்றையதினம் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளனர். 

இதேவேளை இலங்கையின் 68ஆவது சுதந்திரதினத்தை புறக்கணித்து, வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்குமாறு வடக்கு கிழக்கை சேர்ந்த எட்டுமாவட்டகளை பிரதிநிதித்துவம் ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும்’ சங்கங்கள் தீர்மானித்துள்ளன. 

அதேநேரம் இராணுவப்பிரசன்னம், மீள்குடியேற்ற, காணிவிடுவிப்புக்களில் தாமாதம், காணமல்போனோர், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான பராமுகம் உட்பட தமிழ் மக்களின் தயாகப் பிரதேசங்களில் தொடர்ச்சியான அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்படுவதால் இந்நாளன்று கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு கண்டங்களை தெரிவிக்கவேண்டுமென வவுனியா பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/2716

  • கருத்துக்கள உறவுகள்

இதில சர்ச்சை என்ன சர்ச்சை ... நாட்டில் நடக்கும் சு 'தந்திர' விழாவில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசியல் வாதிகள் பங்கு கொள்கிறார்கள். 
சும்மா சும்மா சம்மிலையும்  சும்மிலையும்  குறை பிடிக்கிறதே வேலையாப்போச்சு. :unsure:
  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Sasi_varnam said:

இதில சர்ச்சை என்ன சர்ச்சை ... நாட்டில் நடக்கும் சு 'தந்திர' விழாவில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அரசியல் வாதிகள் பங்கு கொள்கிறார்கள். 
சும்மா சும்மா சம்மிலையும்  சும்மிலையும்  குறை பிடிக்கிறதே வேலையாப்போச்சு. :unsure:
  

சம்திங் கிடைக்கலாம் என்ற நப்பாசைதான். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

உவை 50 வருசமா செய்த அரசியல் என்ன.. கொட்டாவி விடுவது. எனவே விடுற கொட்டாவியை.. கூட்டமாப்போய் சிங்களவன் முன்னால விட்டால் என்ன.. வீட்டுக்கோடியில விட்டால் என்ன. அதுஅது தனக்குத் தெரிஞ்சதை தானே செய்யும்.

தமிழ் சனம் தனக்கான உரிமையும் நீதியும் கிடைக்கும் வரை கரிநாளா அனுஷ்டிக்கும். மக்கள் தான் இப்ப அரசியல்வாதிகளை வழிநடத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

பழைய செய்தி....

நான் பின்னாலை வாரன் நீங்கள் முன்னாலை போய்  மடியுங்கள் என்று எங்கள் இயக்க தலைவர்கள் போல இவர்கள் இல்லை .அடுத்தவன் நாட்டு கொடியை ஏற்றிக்கொண்டு பிள்ளையளையும் பிடிக்க கொடுத்து யாருக்கு என்ன சொல்லுகிறார்கள்///////////// முதலில் பிறந்த நாடடுக்கு விசுவாசமாக இருங்கள். கல்வி     இலங்கை    படிப்பு / பாஸ்போர்ட் இலங்கை பணம் /இலங்கை கொடி மட்டும் ஏன் வெறுக்கிறாய்////////////காரணம்/

Edited by bismar

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனுக்கு சொறீலங்கா வரலாறே தெரியல்லைப் போல. படிப்பு.. பிரிட்டிஷ்காரனது.. நாடு பிரிட்டிஷ்காரன் போகேக்க பிடிச்சதை சும்மா கொடுத்தது.. கொடி மட்டும் சிங்கம் கர்ச்சிக்குது.. அதுதான் பிரச்சனையே. பாஸ்போட் வலிந்து திணித்தது. எங்களைப் பிரிந்து போக விட்டிருந்தால்.. நாங்கள் தமிழீழப் பாஸ்போட்டில் சிங்கப்பூர் ரேஜ்ஜில இருந்திருப்பம். ஒரு நாட்டுக்கும் ஓட வேண்டிய தேவையே வந்திராது. எனியும் கொட்டாவி விட்டு எம்மை அடிமைப்படுத்துவதை விடுத்து.. பேசாமல் அரசியலை விட்டு ஒதுங்குங்கள் அல்லது செத்துத் தொலையுங்கள். தமிழர் எமக்குத் தேவை எம் தேசம். சிங்களவனோடு ஐக்கிய வாழ்வு அல்ல. அது சாத்தியப்படாத பரிசோதனை என்பதை கடந்த 68 வருடங்கள் இனங்காட்டி விட்ட பின்னும்.. கூட இருந்து கொட்டாவி விடுவம் என்று அடம்பிடிப்பது அறிவிலித்தனமானது. tw_blush:

நெடுக்ஸ்

 

நல்லா அரசியலும் தமிழர் சரிதிரமும் கரைத்து வைத்து சேத்துக்கை ஊத்தூரியல் வாழ்கா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.