Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!

Featured Replies

அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!
 
 
அனைத்துலகச் சைவ மாநாடு யாழ். பல்கலையில் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறை சமூகத்தினர் சிவாகமங்களும், திருமுறைகளும் புலப்படுத்தும் சைவப் பண்பாட்டுக் கூறுகளும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளும் என்ற கருப்பொருளை முன்னிலைப்படுத்தியும், இந்து நாகரிகத்துறை சமூகத்தை நோக்கி பயணிக்கின்றது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் ஏற்பாடு செய்துள்ள முதலாவது அனைத்துலகச் சைவ மாநாட்டின் ஆரம்பநாள் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நேற்று இடம்பெற்றன.
 
இந்து நாகரிகத்துறை பேராசிரியர் மா.வேதநாதன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்பநாள் நிகழ்வுகளின் போது பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் வசந்தி அரசரட்ணமும், சிறப்பு விருந்தினர்களாகக் கலைப்பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நா.ஞானக்குமரன், இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன், அகில இலங்கை சைவப் புலவர் சங்கத் தலைவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
ஆதார சுருதி உரையினை தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் க.பாஸ்கரன் நிகழ்த்தினார்.
 
இந்த நிகழ்வுகளில் பல்கலைக்கழக பேரா சிரியர்கள்இதுறை சார் விரிவுரையாளர்கள்,மாணவர்கள், சைவ ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டின் சமகால ஆய்வு அமர்வுகள் இன்று சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரையும் நாளை 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இடம்பெறவுள்ளன.நிறைவு நாள் நிகழ்வுகள் 14 ஆம் திகதி மாலை 2 மணி தொடக்கம் இடம்பெறவுள்ளன.
 
அதேபோன்று ஆன்மீகச் சுற்றுலா நிகழ்வுகள் 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளனம குறிப்பிடத்தக்கது. 
 
                                                    saiva%20manadu1.jpg
 
                                                    saiva%20manadu3.jpg
 
                                                    saiva%20manadu2.jpg
 
                                                    saiva%20manadu4.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
                                                  1455358602_open1.jpg
 
                                                  1455358641_open3.jpgபுரட்சி அரசியலுக்கு சிறுவர்.......சைவமாட்டுக்கு முதியோர் (ப‌ட்டு வேஷ்டி கோஸ்டி)

கூட்டம் நடத்துவதை விட்டு போட்டு சைவ மக்களுக்கு ஏதாவது நன்மை செயுங்கோ இல்லாவிடில் சிவபுராணமும் திருவாசகமும் ஓதிய வாயால் அல்லா உ அக்பரும் , துவவும் ஓத வேண்டிய நிலை வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.