Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசங்கிய கடிதம்

Featured Replies

                                                  கசங்கிய கடிதம்

ஆடம்பரமான ஒரு சிறிய  அழகிய மண்டபம். அங்கே உள்ள மேசை ஒன்றில் சிறிய படம் ஒன்று  மாலை போட்டபடி இருக்க,  அதற்கு முன் ஒரு விளக்கு, தான் எரிந்து, படத்துக்கு வெளிச்சம் கொடுத்தபடி இருந்தது.

படம் இருந்த மேடைக்கு, ஒருவர் எதையோ பறிகொடுத்தவர்போலவும், தொலைந்த எதையோ நிலத்தில்  தேடுபவர் போலவும்  தலைகுனிந்தபடி  மேடைக்கு சென்றார். அங்கே வைக்கப் பட்டிருந்த ஒலிவாங்கியைக் கையால் திருப்பிச் சரிபார்த்து. பேசத் தொடங்கினார்.

        உறவுகளே! எமது தாயக விடுதலையில் தன்னை இணைத்து, போராடி, இரத்தம் சிந்தி, விழுப்புண் அடைந்து,  எமக்காகவே தமது  வாழ்வை அர்ப்பணித்து, அங்கவீனமடைந்து  உயிர் நீத்த உத்தமன் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில்  ஒன்றுகூடி இருக்கிறோம். குறுகிய நாளில் தமது எந்தக் கஸ்டத்தையும் பாராது. ஓடீ ஓடி வேலைசெய்து, இந் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த என் நண்பர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். அதுபோல் நாம்  எமது விடுதலைப் போராளிகளையும் மறக்கக்கூடாது. எமது விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்தாலும் அதில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளையும் அரவணைத்து. அவர்களுக்கு கைகொடுத்து அவர்கள் வாழ்வை உயர்த்தவேண்டியது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இதே வேளை மரணமான போராளிகளை மனத்தில் நிறுத்தி எந்நாளும் அஞ்சலி செலுத்த வேண்டும். அதேபோல் காயப்பட்ட போராளிகளையும்; அவர்களின் குடும்பங்களையும் பாதுகாத்து. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதுடன் நம் மாவீரர்களின் பெற்றோர்களையும் விழிகளைப் பாதுகாக்கும் இமைகளைப்போல் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இப்படியான விழாக்களை நாம்  தொடர்ந்து செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டும்.

        மேடைக்கருகில் நின்ற ஒருவர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.  ''இந்த ஆள் நேரகாலம் தெரியாமல் அறுக்குது…  நான் வேலைக்கு போக வேணும். முதலில் ஆளை மேடையைவிட்டு இறக்கு…  '' என்று பக்கத்தில் நின்றவரிடம் சத்தம் போட்டார்.

        அதை உணர்ந்தவர் போல் பேசியவர் தனது பேச்சை நிறுத்தி மேடையை விட்டு இறங்க வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.  இடை இடையே கொத்து ரொட்டித் தாளம்......     காற்றோடு அதன் வாசம்.....        பார்வையாளர்கள் காதும் மூக்கும் அதன்பால் இழுபட மேடையின் முன்பு இருந்த மக்கள் ஒவ்வொருவராக மெல்ல மெல்ல  எழுந்து செல்லத் தொடங்கி விட்டார்கள்.

        நடந்தவர்களின் காலில் அகப்பட்டு  நசிந்து, கசங்கிப் போன நிலையில் ஒரு கடிதம், மண்டப நடுவில் தேடுவாரற்றுக் கிடந்தது. குனிந்து எடுத்தேன்.   

நான் என்ன தவறு செய்தேன்.? என்னை ஏன் மற்வர்கள் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். என் கால்கள் ஏன்  ஊனமுற்றன. என் கைகள் ஏன் முடமாகின. நான் எம் தேசம் காக்க…. எம் மக்களின் விடுதலைக்காகப் போராடியது தவறா?

இளவதிலே என் பெற்றோரைப் பிரிந்தேன். என் உறவுகளைப் பிரிந்தேன்.  அம்மாவின் பாசமோ அப்பாவின் பாசமோ அறியாமல் காட்டிலே வளர்ந்தேன். என் பிரிவால் என் குடும்பம் கலங்கியது. அவர்களின் துக்கத்தையம் துயரத்தையும் அறிந்தும் நான் அவர்களைப் பார்க்கச் செல்லாமல்  என் தேசத்தை நேசித்து, அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டேன்.  துப்பாக்கியும் குண்டுகளும் ரவைகளும் என் உறவாகின. என்னைப்போல் இணைந்தவர்கள் நட்பானார்கள்.  நாம் வெற்றி பெற்றபோதெல்லாம் எல்லோரும் பாராட்டினாhர்கள். போராடினோம். ஆவேசத்துடன் போராடினோம்.

போராட்டத்தில் என் அண்ணனை இழந்தேன். அக்காவை இழந்தேன். தம்பியை இழந்தேன். தங்கையை இழந்தேன். இதனால் பாதிப்புற்ற என் பெற்றோரையும் இழந்தேன். நட்புகளும் நடந்து வந்த பாதையில் நடு ஆற்றில் வீழ்ந்தார்கள். போராட்டமும் முடிந்தது.

கைதியானேன். சிறைக்கூடங்கள் என்போன்றோரை வரவேற்றன. கொடுமைகளும் சித்திரவதைகளும் நாளாந்தம் எமக்காகப் பரிசாகக் கிடைத்தன. போராட்ட வடுவைப் பார்த்தவன் வகைவகையாச் சித்திரவதை செய்தான். அதனால் உடல் மேலும் ஊனமுற்றது. நோய்வாய்ப்பட்டேன்.  சிறைக்கு நான் பாரமானேன். பாராமானதை ஏன் வைத்திருப்பான் என எண்ணியவன் என்னைச் சிறையிலிருந்து தூக்கி வெளியிலே போட்டான்.

தத்தித் தத்தி நடந்து வந்தேன். என்னைப் பார்த்தவர் கண்களில் பரிகாசம்தான்; தெரிந்தது. போராட்டத்தைப்  பாராட்டியவர்களோ. எஞ்சிய உறவுகளோ என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அருவருப்பான ஒரு பிராணியைப் பார்ப்பதுபோல்  முகத்தைச் சுழித்தபடி  என்னைப் பார்த்தார்கள். என் ஊரை நாடி நடந்தேன்.  என் வீடு இருந்த இடம் தெரியவில்லை. விபரம் அறியக் கூட அங்கு ஆட்களும் இல்லை. உண்ண உணவும் இல்லை. ஒதுங்க  இடமும்; இல்லை. மாற்றிக் கட்டத் துணியும் இல்லை. மனத்தில் அமைதியும் இல்லை. யாரும் அற்ற நிலையில் அனாதையாக இப்படியான நிலையில்… வாழ்வதா…? சாவதா…? யோசித்தேன். வாழ்வதற்கு ஏதாவது  ஒரு ஆதரவு வேண்டும். முயற்சித்தேன்…. முயற்சித்தேன்…. முடியவில்லை. எவருமே ஆதரவு கொடுக்கவில்லை. முன்வரவும் இல்லை. இதற்கு முன்னர்   உங்களுக்கும் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலும் இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்?  எனக்கு ஒரு கயிறுதான் ஆதரவாகக் கிடைத்தது….

''என்ன நடுவில நின்று கடிதம் வாசிக்கிறீங்க… அங்கால கெதியாப் போங்கோ…''      என ஒருவர் என்னை அதட்ட....   வேறொருவர்  ''அண்ணை... உத்தமனின் படம் ஒன்று வேண்டுங்க.... '' என்றார். விழாத் தொடர்ந்தது.  நான் இடத்தைவிட்டு நகர்ந்தேன்

 

Edited by Sembagan

ம்ம்.... இது தான் இப்ப உலகம்.....  நன்றி சகோ.......

  • கருத்துக்கள உறவுகள்

கசங்கிய போராளியும் கூட...! இப்படி ஒருவரா , இருவரா ஏராளமானவர்கள்....!

  • தொடங்கியவர்

   மீனா,  சுவி,   தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இதுபோல் எத்தனையோ எங்கும். யாருக்கும் அதுபற்றி கவலையுமில்லை. வாழ்த்துக்கள் செம்பகன்.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தான்.... உலகம் இவ்வளவு தான்..!

சிந்தனையை...நிதர்சனத்தை... வெளிப்படுத்திய பதிவு!

நன்றி...செண்பகன்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.