Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனாதை குழந்தையம்மா நான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனாதைக் குழந்தையம்மா ..
:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..:..
அன்புள்ள அம்மாவுக்கு…!

அழுது…அழுது…
அடம்பிடித்து
வேப்ப மரத்தில்
ஏறியொழித்து…
இன்னும்….இன்னும்….
எத்தனை….எத்தனை…

விட்டாயா…?

ஏஐன்சிக்குக் காசுகட்டி
எல்லாம் முடிந்தபின் – எனை
கொற கொறவென
இழுத்தபோது
படலையைப் பற்றியபடியே
நானிட்ட கூச்சல்
ஊரையே கூட்டியதே…!

மறந்துவிட்டாயா…?

ஏனம்மா என்னை
ஐரோப்பியத்தெருக்களில்
அனாதையாய்
அலையவிட்டாய்…?

“உயிரெண்டாலும்
மிஞ்சுமெண்டுதான் மோனை

ஐயோ…
வேண்டாம் நிறுத்து…!

உணர்விழந்த உடலுக்கு
உயிரெதற்கம்மா…?

நான்
சின்னப்பொடியனெண்டாப்போலை
காம்பில வாறவன் போறவன்
வெள்ளை.. கறுவல்..
காப்பிலி.. சப்பட்டை..
எல்லாரும் என்னப்போட்டு…
என்னண்டு சொல்லுறது

அழாதையம்மா…

அம்மா…அப்பா…
அக்கா…தம்பி…
எல்லாரும் இருந்தும்
அரவணைக்க ஆருமில்லாம
நாடு நாடாய்…
அகதியாய்…அனாதையாய்…
இந்தச் சின்ன வயசில

ஏனம்மா…?

அழாதையம்மா…

இஞ்ச
எங்கட பொடியளே
வாய்க்கை சாராயத்தை ஊத்தி
சிகரெட்டையும்
அமத்துறாங்கள்

எப்பிடியம்மா நான்…?

இதுக்காகவா
என்னைப் பெற்றாய்…?

இங்கு என்னைப்போல்
இன்னும் எத்தனை
சிறுவர்கள்
துளிர் விடும் பருவத்தில்
உறவறுந்து… உயிரறுந்து …

ஏனம்மா…?....

எனது வலிகளை
என்னும் எழுதினால்
இதயம் வெடித்துவிடும் 
எனக்கும் -  உனக்கும் ..

அழாதையம்மா…

எப்போதாவது - மீண்டும்
உன்னை சந்திப்பேனா
எனும் ஏக்கத்துடன்

உன்  மகன்
ரமேஷ் வவுனியன்.

  • கருத்துக்கள உறவுகள்

வலி... வலிமையாய் பேசுகின்றது....!

கொடிது வறுமை கொடிது

அதனிலும் கொடிது 

இளமையில் வறுமை....!!

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் கவிதை நன்றாக இருக்கே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இவரின் கவிதை நன்றாக இருக்கே

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனின் மொத்த வாழ்வுமே ஒரு பார்சல் பார்சிங் போல அமைந்து விடுகின்றது!

ஒரு பிரச்சனை என்று வரும்போது..அதைச் சுமக்காமல் இன்னொருவரின் தோள் மீது சுமத்தி விடுவதே வழக்கமாகி விட்டது!

அந்த இன்னுமொருவன்/ இன்னுமொருத்தி ஒரு ஏமாளியாய் இருந்தால்  அவருக்கு/ அவளுக்கு சமுதாயக் கெளரவம் என்ற போர்வையைப் போர்த்தி விட்டு மற்றவர்கள் எதுவுமே நடவாதது போல நகர்ந்து கொண்டேயிருப்பார்கள்!

தங்கைகளுக்காகத் தங்கள் வாழ்வைத் தொலைத்த தமையன்களும், தம்பிகளுக்காகத் தங்கள் வாழ்வைத் துறந்த அக்காக்களும் கூட எமது சமூகத்தில் நிறைய உண்டு!

அதே வரிசையில் இந்த அகதிப் பையனின் அம்மாவும் உள்ளடக்கம்!

அந்தக் குழந்தையின் ஏக்கத்தை, ஆற்றாமையைக் கவிதையாக வடிக்க வன்னியன் போன்றவர்களால் தான் முடியும்!

சாந்தி அக்காவுக்குத் தான் நேரமில்லை...ஒரு சமூகத்திற்காகத் தனது நேரத்தை ஒதுக்கியுள்ளார்!

நீங்களாவது நேரம் கிடைக்கும் போது உங்கள் நேரத்தின் ஒரு பகுதியை யாழுக்கு ஒதுக்கினால் என்ன வன்னியன்?

ஏதோ கேட்க வேண்டும் போல இருந்தது... கேட்டேன்!

அரசியலை விட்டு விலகி....மனித உணர்வுகளை..வாழ்க்கையை...வனையும் பாதையில் பயணிப்போம்!

உங்கள் கவிதை...அந்தக் குழந்தையின் ஏக்கத்தை அப்படியே பிரதி பலித்திருக்கின்றது!

இணைப்புக்கு நன்றி...நந்தன்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நந்தன் said:

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

எனக்குத் தெரியும். யாழ்களத்தில்... நன்கு பரிச்சயமானவரின் கணவர்.
எதற்கும்.... மற்றவர்களுக்கு தெரிந்திருக்கின்றதா என்பதை அறிய... இப்போது பதிலை கூறாமல் இருக்கின்றேன்.

1 hour ago, தமிழ் சிறி said:

எனக்குத் தெரியும். யாழ்களத்தில்... நன்கு பரிச்சயமானவரின் கணவர்.
எதற்கும்.... மற்றவர்களுக்கு தெரிந்திருக்கின்றதா என்பதை அறிய... இப்போது பதிலை கூறாமல் இருக்கின்றேன்.

அமைதிக்கு பெயர் போனவர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வந்தியதேவன் said:

அமைதிக்கு பெயர் போனவர்

சரியான பதில். வந்தியத்தேவன்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
On 03/04/2016 at 10:54 PM, நந்தன் said:

அவர் யாரெண்டு தெரியுமா உங்களுக்கு

எனக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?

அவரின் வேறு கவிதைகளையும் வாசித்துள்ளேன்.மிக நன்றாக எழுதக் கூடியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.