Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தம்பதியரை இலக்கு வைத்து யாழ். இந்துக் கல்லூரி அருகே வாள்வெட்டு! கணவன் காயம்!!

Featured Replies

யாழ். இந்து கல்லூரியை அண்மித்த கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ். நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் தாக்கி வாளால் வெட்டினர். இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்தார். அவரின் மனைவியான நிலாந்தினி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் நிலாந்தினிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் நிலாந்தினியிடம் இருந்த கைப்பையை பறித்துச் சென்றனர். எனினும் அதில் 3 ஆயிரம் ரூபாய் பணமே இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நேற்றிரவு நடந்த சம்பவத்தை போன்று சிவலிங்கம் மற்றும் அவருடைய மனைவி நிலாந்தினிக்கும் ஒரு மாதத்திற்கு முன்னரும் இரு தடவை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

http://malarum.com/article/tam/2016/04/19/14322/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் கிழமை:  காணி பார்க்கப் போனவரின், கால் வாளால்... துண்டிப்பு.
செவாய்க்கிழமை:  வியாபார நிறுவனத்தை மூடிவிட்டு, சென்ற தம்பதியினர் மீது வாள்வெட்டு.

ஒரு தலை முறையே....  30 வருடமாக வாள்வெட்டு கலாச்சாரத்தை பற்றி அறியாமல் இருந்தது.
புலிகள் இருந்த காலத்தில்.... இந்த வாள்வெட்டு கோஷ்டி எங்கிருந்தது.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

திங்கள் கிழமை:  காணி பார்க்கப் போனவரின், கால் வாளால்... துண்டிப்பு.
செவாய்க்கிழமை:  வியாபார நிறுவனத்தை மூடிவிட்டு, சென்ற தம்பதியினர் மீது வாள்வெட்டு.

ஒரு தலை முறையே....  30 வருடமாக வாள்வெட்டு கலாச்சாரத்தை பற்றி அறியாமல் இருந்தது.
புலிகள் இருந்த காலத்தில்.... இந்த வாள்வெட்டு கோஷ்டி எங்கிருந்தது.:unsure:

கொழும்பில இருந்திருப்பினமோ?அல்லது புலம்பெயர்ந்து கடன்மட்டை மோசடி செய்து பி.எம்.டபிள்யூ ஓடினமோ

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

திங்கள் கிழமை:  காணி பார்க்கப் போனவரின், கால் வாளால்... துண்டிப்பு.
செவாய்க்கிழமை:  வியாபார நிறுவனத்தை மூடிவிட்டு, சென்ற தம்பதியினர் மீது வாள்வெட்டு.

ஒரு தலை முறையே....  30 வருடமாக வாள்வெட்டு கலாச்சாரத்தை பற்றி அறியாமல் இருந்தது.
புலிகள் இருந்த காலத்தில்.... இந்த வாள்வெட்டு கோஷ்டி எங்கிருந்தது.:unsure:

ஒட்டுக்குழு என்ற போர்வையில்.. இராணுவ முகாம்களுக்குள் கிடந்தவை. இப்ப துவக்க வைச்சிட்டு வாளோட அனுப்பப்பட்டிருக்கினம். அவ்வளவும் தான். இதே கூத்து இந்திய "அமைதி"ப்படை காலத்திலும் கொஞ்சம் தலைகாட்டியது. புலிகள் வந்து ஒன்ரிரண்டை போட்டதும் மீண்டும் இந்திய "அமைதி"ப்படை முகாம்களுக்குள் அடங்கினவை. 

இதை எல்லாம் சர்வதேசம் சனநாயகமாத் தான் பார்க்குது. இப்படி இருந்தால் தான் அது அமெரிக்கா விரும்பும் சனநாயகமாகும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதி யாழ்நகரை அண்மித்து நாவலர்வீதி கஸ்தூரியார்வீதி சிறிது யாழ்நகரை விட்டகலுமாப்போல் சென்றால் யாழ் இந்துக்கல்லூரி இவைகளை மையமாக அமைந்துள்ளது குறிப்பாக "அஞ்சணந்தாள்வு" என இப்பகுதியை அழைப்பர். புலிகளுக்கு முன்பும் புலிகளுக்குப் பின்பும் இப்பகுதியில் வாழ்பவர்கள் பிரச்சனையானவர்களே. தவிர இப்பகுதியில் ஒரு கள்ளுத்தவறனையும் சாரய விற்பனை நிலையமும் இருக்கு. அப்போ சொல்லவா வேண்டும்.

புலிகள் இருந்த காலத்தில் அவர்களே இதை செய்ததால் கேட்பார் யாரும் இல்லை ,

தேவையென்றால் படங்கள் இணைக்கலாம் .

பாடசாலை கிரிகெட் பிச்சில் வைத்து கையை கட்டி விக்கெட்டால் குத்தி கொன்றார்கள் .

இப்போ தான் எழுபதுகளுக்கு பிறகு  நாடு ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியிருக்கு இப்படியான நிகழ்வுகள் அவ்பவப்போது நிகழ்ந்துகொண்டுதான் அன்றும் இருந்தது .

அடுத்த அந்த முப்பது வருடங்கள் தான் .வேலியே பயிரை மேய்ந்த இருண்ட காலங்கள் .

எங்கும் கொலை எதற்க்கும் கொலை என்றவர்கள் ஒழிந்து இப்ப எழு எட்டுவருடங்கள் தான் மக்கள் நிம்பதியாக இருக்கின்றார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

புலிகள் இருந்த காலத்தில் அவர்களே இதை செய்ததால் கேட்பார் யாரும் இல்லை ,

தேவையென்றால் படங்கள் இணைக்கலாம் .

பாடசாலை கிரிகெட் பிச்சில் வைத்து கையை கட்டி விக்கெட்டால் குத்தி கொன்றார்கள் .

இப்போ தான் எழுபதுகளுக்கு பிறகு  நாடு ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பியிருக்கு இப்படியான நிகழ்வுகள் அவ்பவப்போது நிகழ்ந்துகொண்டுதான் அன்றும் இருந்தது .

அடுத்த அந்த முப்பது வருடங்கள் தான் .வேலியே பயிரை மேய்ந்த இருண்ட காலங்கள் .

எங்கும் கொலை எதற்க்கும் கொலை என்றவர்கள் ஒழிந்து இப்ப எழு எட்டுவருடங்கள் தான் மக்கள் நிம்பதியாக இருக்கின்றார்கள். 

 

வந்திட்டார் அண்ணை

கொள்ளை கொலையாளிகளுக்கு மறைமுக ஆதரவு கொடுக்க.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரியின் தலையங்கமே வாள்வெட்டு....இதிலை  ஒருத்தர் வந்து சனம் இப்பத்தான் நிம்மதியாய் இருக்கினமாம்....எது எதுக்கு செம்பு தூக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல் போச்சுது :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

திரியின் தலையங்கமே வாள்வெட்டு....இதிலை  ஒருத்தர் வந்து சனம் இப்பத்தான் நிம்மதியாய் இருக்கினமாம்....எது எதுக்கு செம்பு தூக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல் போச்சுது :shocked:

இந்த செம்பு என்ற சொல் புதிதாக இப்ப உலாவுது...

அதுவும் அரசியல்வாதிகளுக்கு

நடிகர் நடிகைகளுக்கு என்று தான் இருந்தது

இதில அண்ணை எவருக்காக???

கொஞ்சம் விளக்கமாக எழுதமுடியுமா அண்ணா?

1 hour ago, குமாரசாமி said:

திரியின் தலையங்கமே வாள்வெட்டு....இதிலை  ஒருத்தர் வந்து சனம் இப்பத்தான் நிம்மதியாய் இருக்கினமாம்....எது எதுக்கு செம்பு தூக்கிறதெண்டு விவஸ்தையே இல்லாமல் போச்சுது :shocked:

இப்படியான குற்ற செயல்கள் இல்லதாத நாடு ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம் .

ஒப்பீட்டு ரீதியில் இலங்கையில் குற்றசம்பவங்கள் இப்போ மிக குறைந்தித்ருகின்றது.

எழுபதுகளில் மித்திரன் இப்படியான செய்திகளால் தான் நிறைந்திருக்கும் .

சனம் நிம்மதியாக இருந்தாலும் அப்படி இல்லை என்று காட்டாமல் சிலருக்கு நித்திரை வராது . 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

இப்படியான குற்ற செயல்கள் இல்லதாத நாடு ஒன்று சொல்லுங்கள் பார்ப்போம் .

ஒப்பீட்டு ரீதியில் இலங்கையில் குற்றசம்பவங்கள் இப்போ மிக குறைந்தித்ருகின்றது.

எழுபதுகளில் மித்திரன் இப்படியான செய்திகளால் தான் நிறைந்திருக்கும் .

சனம் நிம்மதியாக இருந்தாலும் அப்படி இல்லை என்று காட்டாமல் சிலருக்கு நித்திரை வராது . 

உங்களுக்கு

அல்லது உங்கள் வீட்டில எவருக்காவது இப்படி வாழ்வெட்டு விழுந்திருந்தால்

உலகத்தில் இல்லாததா?

ஒப்பீட்டுரீதியில் இது பரவாயில்லை என்றா எழுதுவீர்கள்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.