Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்':விக்னேஸ்வரன்

Featured Replies

'இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்':விக்னேஸ்வரன்

 

இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

 

150901114329_c_v_vigneswaran_512x288_bbc

 வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன்

உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார்.

இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது.

மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவர முயன்றுகொண்டிருக்கும் வேளையில், நல்லிணக்கம் ஏற்பட சிங்கள சமூகம் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

தமது தரப்பால் அரசியல் சாசனம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனும் கருத்துக்கள் சில சிங்களத் தரப்பிடமிருந்து வருவது குறித்த கவலையையும் அவர் வெளியிட்டார்.

நாட்டைப் பிரிக்காமல், தனித்து வாழும் அதே நேரம் அனைத்து மக்களுடன் இணைந்துவாழவே தாங்கள் ஆசைப்படுவதாகவும், அதை மையப்படுத்தியே தமது தரப்பால் அரசியல் சாசனத்துக்கான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் மாகாண சபையில் நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறினார்.

இலங்கையில் மாகாண சபைகள் என்ற ஆட்சி முறை இருந்தாலும், அவற்றுக்கு உண்மையான அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் இருக்கும் நிலை, புதிய அரசியல் சாசனத்தின் மாற்றப்பட வேண்டும் எனவும் வடமாகாண சபை கோரியுள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/04/160422_cvv_constitution

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்'

நட‌க்கிற காரியமா?புலிகளை தவிர மற்றவ‌ர்கள் எல்லோரும்  அறிவு பூர்வமாகத்தான் 60 வருடமாக அணுகினம் ஆனால் தீர்வுதான் கிடைக்கவில்லைtw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திப்பதில் பிரச்சனை இல்லை.

ஆனால் சிங்களவர்கள் பேரினவாதிகளாக அன்றி.. முஸ்லீம்கள் மதவெறியர்களாக இன்றி சிந்திக்கனுமே..

இவை தான் இன்று இலங்கைத் தீவில் இருக்கிற பிரச்சனையின் மூலமே. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

நட‌க்கிற காரியமா?புலிகளை தவிர மற்றவ‌ர்கள் எல்லோரும்  அறிவு பூர்வமாகத்தான் 60 வருடமாக அணுகினம் ஆனால் தீர்வுதான் கிடைக்கவில்லைtw_tounge_wink:

அருமையான கருத்து புத்தன். Smiley

6 hours ago, நவீனன் said:

இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது

இதைதானே எனது அப்பரின் காலத்தில இருந்து  சொல்லுறம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

இதைதானே எனது அப்பரின் காலத்தில இருந்து  சொல்லுறம்

சீச்சீ.....இடையிலை அவங்கள் வந்து குளப்பாட்டி அமிர்தலிங்கம் காலத்திலையே எல்லாப்பிரச்சனையும் தூசு ஊதி தள்ளுற மாதிரி எல்லாத்தையும் வாயாலையே ஊதித்தள்ளியிருக்கலாம்.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.