Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி

ஆண் சிலந்தியை கொன்று தின்பதுபோல்

ஈன்ற குட்டிகளை தின்னும்

கரடிகள் கடற்சுறா போல்

 தோழில் சுமந்தவர்களை

தோழில் இருந்தவாறே தலையை கடித்து குதறிய பொழுதுகள்

ஏழாண்டுகள் கடந்தும் விடியாது விறைத்து நிற்கின்றது.

 

யானையை கொன்று தந்தம் எடுப்பதுபோல்

பிடரியில் அடித்தும் முதுகில் குத்தியும்

தன் விரலைக் கொண்டே கண்ணில் குத்தி குருடாக்கிக் கொன்று

கொன்ற பின் கட்டை விரலை வெட்டி எடுத்து

கைநட்டு வைத்து பெற்ற பெருவாழ்விலிருந்து

நேற்று நீலிக்கண்ணீர் வடித்தோம்

இன்று அதற்கும் நேரமில்லை

நேற்று எரியிற வீட்டில் புடுங்குவது லாபம் என்ற சூழல்

இன்று எரிப்பதற்கு கூரைகள் இல்லை

 

அறம் துறந்த வாழ்வில் அறிவுக்கு ஏது வேலை?

அறிவு சூனியமானபின்பு அரசியல் ஏது?

பிச்சை மட்டுமே எடுக்கமுடியும்

உரிமை கேட்டு தட்டை நீட்டும் போதெல்லாம்

சிங்களம் சிறுநீரையே கழிக்கின்றது…

 

ஊழ்வினை எம்மை முற்றக சூழுந்துகொண்டது

தர்மத்தின் கதவுகளை அடைத்து

பின்புறமாக ஏதையோ தேடி எங்கெங்கோ ஓடுகின்றோம்

ஏழாண்டு ஒடினும் எழுபதாண்டு ஓடினாலும்.

வினை விதைத்தவர்கள் எங்கு போயும் தினை அறுக்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

யார் இங்கு வினை விதைத்தவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

யார் இங்கு வினை விதைத்தவர்கள்?

புலிகள் 

  • தொடங்கியவர்
11 hours ago, Maruthankerny said:

புலிகள்

 

 

இது புலிகளை குற்றம் சாட்டி எழுதியதில்லை.மாறாக புலிகள் அடங்கலாக அனைவரையும் காவுகொடுத்த எமது அகநிலை வினை குறித்தது.

போரின் பின் போரில் அகப்பட்டு நலிந்த மக்களை அலட்சியப்படுத்தியது குறித்தது. அவர்களை அலட்சியப்படுத்தி அவர்கள் பசிக்காக நாம் உணவுண்ண முற்படும் அரசியல் முன்னெடுப்பு குறித்தது.

புலம்பெயர்ந்த இவ் வாழ்வுக்கு போரில் அகப்பட்டவர்களை பகடைகளாக பயன்படுத்தியது குறித்தது.

போரை சாட்டி சேர்த்த பொருளாதாரவளங்களை தனிநபர்கள் சூறையாடியது குறித்து. 

ஒட்டுமொத்தமாக அறம் துறந்த எமது பொதுத்தன்மை குறித்தது. நான் உட்பட யாவரும் உள்ளடங்கலாக எமது கேடுகெட்ட குணம் குறித்தது. 

எனது கேடுகெட்ட தனத்தை புலிகள் மீது சுமத்தி நான் என்றைக்கும் யோக்கியானாக முனைந்ததில்லை. 

 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் !!
ரதியக்காவை குளிர்விக்கவே அப்படி எழுதினேன். தவிர 
உங்கள் கவிதை புரியும்படியாகவே இருக்கிறது.
வாசித்து புரிந்துகொண்டேன். 

புலிகளின் தவறுகள் கூட எமது இனத்தின் பரம்பரை தவுறுகளே.
ஒரு 10 வருட காலத்தில் ஒரு இனத்தின் முழு முட்டாள் சிந்தனையையும் 
மாற்றிவிட முடியாது. 

தமிழ்நாடு படும்பாடே தெரிகிறதுதானே ....

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுகளைக் கீறிவிடும் உணர்ச்சிகரமான கவிதை  சன்டமாருதன்....!

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோடா மருதர் என்னை குளிர்விக்கிறாராம்.அப்படியே சிலிர்த்துப் போனேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2016 at 1:35 PM, ரதி said:

ஜயோடா மருதர் என்னை குளிர்விக்கிறாராம்.அப்படியே சிலிர்த்துப் போனேன்

ஒரே களத்தில் கருத்தை பகிர்கிறோம் .....
இதில் அப்படி என்ன குறை இருக்க போகிறது ?

உங்களுக்கு பிடித்ததை செய்தால் 
நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் இல்லையா ? 

தவிர பிடிக்காததை செய்வது திணிப்பு இல்லையா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.