Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியம் , விடுதலை , சுயநிர்ணயம் அனைத்துக்கும் அவர்கள் Good Bye...

Featured Replies

43 minutes ago, வாத்தியார் said:

 இப்படியான பதிலைத் தான் நான் எதிர்பார்த்தேன்

தமது வாதம் தோற்றவுடன் இப்படி எஸ்கேப் ஆவது தான் இவர்களது வழக்கம்

  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

அவர்கள்  உந்தக்கேள்விகளை எல்லாம் அன்றிருந்த அரசாங்கத்திடம் கேட்டு பதில் கிடைக்காததால்தான் வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு வந்தார்கள், வந்திட்டார் இப்ப ஒருவர் தந்தை செல்வாவிற்கே வகுப்பெடுக்க. உந்த அதிமேதாவித்தனம் தான் தமிழன் அழிய காரணம்.   

தந்தை செல்வா  ஸ்காட்லான்ட்  பற்றியும் க்யூபெக் பற்றியும் கிழக்கு தீமோர் பற்றியும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்டு அறியும் அளவுக்கு உலக அறிவு குறைத்தவர் என்றா சொல்கிறீர்கள்?  இலங்கை அரசு அவருக்கு பதில் அழிக்காததால் அவர் ஸ்காட்லான்ட்  பற்றியும் க்யூபெக் பற்றியும் கிழக்கு தீமோர் பற்றியும் அறியாமல் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றினார் என்று சொல்கிறீர்கள்?

அந்த அளவுக்கு அவருக்கு அறிவு குறைவாக இருந்திருந்தால் நான் என்ன, இன்றைய பாடசாலை மாணவர்களே வகுப்பு எடுக்க முடிந்திருக்கும். நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நம்புகிறேன். அவரின் கோட்பாடு தான் தமிழ் மக்கள் இந்தனை ஆயிரம் அழிந்து இன்று ஒன்றும் இல்லாமல் போக காரணமானது. அவரது சம காலத்தில் இதேவிதமான பிரச்சினைக்கு மலேசிய பூமி புத்திரருடன் சாதுரியமாக அரசியல் செய்து சிங்கபூரை மீட்டெடுத்து அங்கிருந்த சீன கூலி தொழிலாளருக்கு ஒரு முதலாம் உலக நாட்டை ஆக்கி தந்த லீ குவான் யு உடன் அவரை ஒப்பிடுகையில் நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நினைக்கிறேன். 

7 hours ago, Dash said:

தமது வாதம் தோற்றவுடன் இப்படி எஸ்கேப் ஆவது தான் இவர்களது வழக்கம்

வாதம் இருந்தால் விவாதிக்கலாம். தோற்றவர்கள் வெற்றி விழா கொண்டாடுவதும் உண்டு. வென்றவர்கள் அமைதியாக வெற்றியை அனுபவிப்பதும் உண்டு. நீங்கள் வெற்றி விழா கொண்டாடுங்கள். 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அவரது சம காலத்தில் இதேவிதமான பிரச்சினைக்கு மலேசிய பூமி புத்திரருடன் சாதுரியமாக அரசியல் செய்து சிங்கபூரை மீட்டெடுத்து அங்கிருந்த சீன கூலி தொழிலாளருக்கு ஒரு முதலாம் உலக நாட்டை ஆக்கி தந்த லீ குவான் யு உடன் அவரை ஒப்பிடுகையில் நீங்கள் சொல்வது உண்மை என்றே நானும் நினைக்கிறேன். 

மலேசியர்களை ...இனவெறிச் சிங்களவனுகளுடன் ஒப்பிடுகிறீர்களா ....?
லீ குவானிட்கு இருந்த தலையிடி குட்டை மண்டிப்போய் நுளம்பு விதைக்கப்பட்ட நாட்டை முன்னேற்றுவது ...சிங்கப்பூரை மீட்டெடுக்க அவரொன்றும் பெரிய பிரளையம் செய்யவில்லை..அவரும் மலேசியாவுடன் சேர்ந்திருக்க தான் விரும்பியவர்  ...ஆனாலும் மலேசியா கழட்டி விட்ட நாடுதான் சிங்கப்பூர்...அவர் தந்தை செல்வா போன்று இனவெறியர்களுடன் மோதவில்லை ..சும்மா வரலாற்றை உங்களுக்கு விரும்பியது போல (மகாவம்சம் போல ) திரிக்காதீர்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2016 at 2:08 AM, அக்னியஷ்த்ரா said:

மலேசியர்களை ...இனவெறிச் சிங்களவனுகளுடன் ஒப்பிடுகிறீர்களா ....?
லீ குவானிட்கு இருந்த தலையிடி குட்டை மண்டிப்போய் நுளம்பு விதைக்கப்பட்ட நாட்டை முன்னேற்றுவது ...சிங்கப்பூரை மீட்டெடுக்க அவரொன்றும் பெரிய பிரளையம் செய்யவில்லை..அவரும் மலேசியாவுடன் சேர்ந்திருக்க தான் விரும்பியவர்  ...ஆனாலும் மலேசியா கழட்டி விட்ட நாடுதான் சிங்கப்பூர்...அவர் தந்தை செல்வா போன்று இனவெறியர்களுடன் மோதவில்லை ..சும்மா வரலாற்றை உங்களுக்கு விரும்பியது போல (மகாவம்சம் போல ) திரிக்காதீர்கள்  

மலேசியர்கள் சிங்கலவர்களிலும் பார்க்க இன வெறி கொண்டவர்கள். மலேசியாவில் இன ரீதியாக மக்கள் பிரிக்கப்பட்டு மலாய் இனத்தவர்களுக்கு எதிலும் முதலிடம் கொடுக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. மேற்படிப்புக்கான புலமைப்பரிசில்கள் மலே இனத்தவருக்கு  மட்டுமே வழங்கப்படும். எந்த வணிக முயற்சிக்கும் ஒரு மலாய் இனத்தவர் பங்குதாரராக இருந்தாலே உரிமை வழங்கப்படும். இலங்கையில் சிங்களவர்கள் இனரீதியாக சிங்களவர் என்ற அடிப்படையில் முதலிடம் பெற்றவர்கள் என்று சட்டத்தில் எழுதப்படவில்லை. மலேசியாவில் மலாய் இனத்தவர்கள் முதல் குடிமக்களாகவும் ஏனையவர்கள் இரெண்டாம் குடிமக்களாகவும் சட்டரீதியாக கணிக்கப்படுகிறார்கள். 

சிங்கபூர் விடுதலை அடைந்த விதம் பற்றியும் லீ குவான் யு எப்படி சிங்கபூர் விடுதலைக்கு துங்கு ரஹ்மானுடன் ஒப்பந்தம் செய்து அவரை மலேசிய பிரதமர் ஆக்குவதற்கு சீனர்களின் வாக்கு பலத்தை பயன்படுத்தினார் என்பதையும் அதன் பின்னர் எப்படி சிங்கபூரை முதலாம் உலக நாடாக்கினார் என்பதையும் உலக வரலாறு நன்கு பதிந்திருக்கிறது. நீங்கள் தான் சிங்கபூர் வரலாற்றை திரித்து இலங்கையில் தோற்றுப்போன தலைமைகளுக்கு சாட்டு போக்கு காட்ட முயலுகிறீர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.