"அகண்ட இஸ்ரேல் உருவாக்க அண்டை நாடுகளை ஆக்கிரமிக்க வேண்டும்" என்று அதி வலதுசாரி இஸ்ரேல் கட்சிகள் கூட அறிக்கை விடவில்லை. எங்கே இதை அறிந்தீர்கள் எனச் சொன்னால் நாமும் அறிந்து கொள்ளலாம்.
இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்கி, ஆக்கிரமித்து வரும் ஒரு பிரதேசம் பலஸ்தீனம். இஸ்ரேலின் தற்போதைய ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை, பலஸ்தீனம் ஒரு அண்டை நாடு அல்ல. எனவே, குடியேற்றங்கள் மூலம் ஆக்கிரமிக்கிறார்கள். இதை சர்வதேச நாடுகள் பல ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் இது தவறான விடயம்.
அண்டை நாடுகளைப் பொறுத்த வரையில் இஸ்ரேலின் கொள்கை அது உருவானது முதல் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் விடுத்தால், தற்போது ஈரானுக்கு நடப்பது போல சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் தாக்குவார்கள். தமக்கு அச்சுறுத்தல் தராத அரபு நாடுகளை எதுவும் செய்ய மாட்டார்கள். 1967 இல் 6-நாள் யுத்தம் சிறந்த உதாரணம். எகிப்து, சிரியா, சவூதி (மறைமுகமாக) இணைந்து இஸ்ரேலைத் தாக்க, மீளத் தாக்கிய இஸ்ரேல் 6 நாட்களில் இஸ்ரேல் நாட்டின் பரப்பளவை விட 2 , 3 மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கைப்பற்றியது. கடைசியில் எகிப்து சமாதான உடன் படிக்கை செய்தது, அதன் சினாய் நிலப்பரப்பு எகிப்திற்குத் திரும்பக் கொடுக்கப் பட்டது. சிரியா சமாதானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை, சிரியாவிடம் இருந்து கைப்பற்றிய கோலான் குன்றுகள் இன்னும் இஸ்ரேல் வசம் தான் இருக்கின்றன.
இவ்வளவு ஏன்? இஸ்ரேல், பலஸ்தீன நாடுகள் உருவாக்கவென பிரிட்டனால் ஒதுக்கப் பட்ட நிலத்தில் இருந்து , யூத வெறுப்பாளரான சேர்ச்சில் ஒரு துண்டைப் பிரித்து ஜோர்தானை உருவாக்க உதவினார். இஸ்ரேல் உருவான போது பலஸ்தீனர்களுக்கு உதவிய ஜோர்தான், பின்னர் அவர்களுடைய குரங்குச் சேட்டைகள் பொறுக்காமல் இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டது. இன்று வரை மேற்குக் கரைக்கு அக்கரையில் இருக்கும் ஜோர்தானுக்கு இஸ்ரேலினால் ஒரு தொல்லையும் இல்லை!
By
Justin ·