Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காந்தி கிராமத்தில் தொடரும் சட்டவிரோத மண் அகழ்வு! பொலிஸாருக்கு அறிவித்தும் நடவடிக்கை இல்லை

Featured Replies

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கோணாவில் காந்தி கிராமத்தில் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல் காணிகளில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலரால் சட்டவிரோத மண் அகழ்வு வியாபாரம் தொர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இச்சட்டவிரோத மண் அகழ்வு குறித்து காந்தி கிராமம் மக்களும் காந்தி கிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரும் கிளிநொச்சிப் பொலிஸ் நிலையம் மற்றும் அக்கராயன் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டபோதும் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வைத் தடுத்து நிறுத்துவதற்கான எந்தவித

நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் சட்டவிரோத மண் அகழ்பவர்கள் இவ்விடயம் பற்றி எடுத்துக் கூறி இது பிழை, சட்டவிரோதமானது என கதைப்பவர்களை தமக்கு உயர் மட்டச் செல்வாக்கு இருப்பதாகக் கூறி அச்சுறுத்தி வருவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

கோணாவில் காந்திகிராமத்தில் RC- N.P.-4119 மற்றும் 25சிறி-4263 ஆகிய இலக்கங்களையுடைய உழவு இயந்திரங்களில் அரச உத்தியோகத்தரான பாலசிங்கம்-பவான், பிரகாஸ் என அழைக்கப்படும் இ.பிரபாகரன் ஆகியோரது குழுவினர் தொடர்ச்சியான சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகக் அப்பகுதி மக்களாலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தாலும் கூறப்படுகின்றது.

இவ்விடயம் குறித்து காந்திகிராமம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் அப்பகுதி கிராம சேவையாளர், கரைச்சிப் பிரதேச செயலாளர் ஆகியோருக்கும் கடித மூலம் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி சட்டவிரோத மண் அகழ்வாளர்களிடம் அப்பகுதியில் மண் அகழவேண்டாம் என்று மக்களாலும் பொது அமைப்புக்களாலும் கூறப்பட்டபோது நாம் இப்பகுதியில் மண் அகழ்ந்து வியாபாரம் செய்வோம் அதனை ஜனாதிபதியால் கூட தடுக்கமுடியாது.

எந்தக் கொம்பனிடம் கூறினாலும் நாம் பயப்படமாட்டோம்! எம்மை எதுவும் செய்யமுடியாது! எனவும் மிரட்டி அச்சுறுதி வருவதாகக் கவலை தெரிவிக்கப்படுகின்றதுடன் இவ்விடயத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காது பாராமுகமாக இருக்கின்றமை பொலிஸார் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பன்னங்கண்டி, கோரமோட்டை, கோரக்கன்கட்டு, உமையாள்புரம், அக்கராயன், உருத்திரபுரம் என பல பகுதிகளிலும் சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமையும் இவ்விடயத்தில் பொலிஸாரும் பொறுப்பு வாய்ந்தவர்களும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றமையானது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilwin.com/crime/01/110373

Konavil_Illegal_Sand_Mining_01.jpg

Konavil_Illegal_Sand_Mining_02.jpg

Konavil_Illegal_Sand_Mining_03.jpg

Konavil_Illegal_Sand_Mining_04.jpg

Konavil_Illegal_Sand_Mining_05.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.