யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது.
யாழ்ப்பாணத்தை சீரழிக்க இரகசிய திட்டம் என அனேகமாக எல்லா இணையத்தளங்களும் அது பற்றி செய்தி வெளியிட்டு விட்டன. ஆனால், அந்த பச்சை பீப்பாய்கள் எப்படி சீரழிக்கப் போகிறது என்பது பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை. பச்சைச் சட்டை போட்டால் அடிப்போம் பாணியில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த பச்சைப் பீப்பாய்கள் எதற்காக கொண்டு வரப்பட்டுள்ளன என்பதை அறிய தமிழ்பக்க செய்தியாளர்கள் இன்று அந்த பகுதிக்கு சென்றனர்.
அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் வாமதேவனும் அங்கு சென்றிருந்தார். திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர்.
அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.
3 பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.
8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும்.
ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது.
அங்கு பார்வையிட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்தபோது, “இந்த திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை. ஆனால், இந்த திட்டம் குறித்து மக்களிடம் அச்சம் உள்ளது. அதை இதுவரை நிறுவனமோ, அரசாங்கமோ நிவர்த்தி செய்யப்படவில்லை. மக்களின் அச்சம் நீக்கப்பட வேண்டும்.
அனைத்து அனுமதிகளும் கொழும்பில் பெறப்பட்டுள்ளது. இப்படியான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, வருமானத்தின் 15 வீதம் அந்த பகுதி உள்ளூராட்சிமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் பளை காற்றாலை நிறுவனத்தினால் 2 வீதமான வருமானமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம், இந்த பகுதி மக்களிற்கு என்ன செய்யப் போகிறது என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. குறைந்த விலையான காணிகள் அதிக விலைக்கு நிறுவனம் கொள்வனவு செய்துள்ளது. பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது. காற்றாலையால் ஏதாவது பக்க விளைவுகள் உள்ளதா போன்ற சந்தேகங்கள் மக்களிடம் உள்ளது. இவைதான் மக்களை அச்சப்படுத்தியுள்ளது. இவை தொடர்பில் நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் செயற்பட வேண்டும்“ என்றார்.
https://www.pagetamil.com/93218/
நீண்ட போராடியும் வெற்றி பெற முடியாத தமிழன் காட்டிக்கொடுப்பில் உடனடி வெற்றியை சாதித்துள்ளான். தமிழர்கள் இத்தொழிலில் துறை சார் நிபுணர்களாக இருப்பதும் ஒரு பெருமை தான்.
என்னதான் சிங்களம் வாய்கிழியக் கத்தினாலும் தமிழன் இன்றி அதனால் நாட்டை அரசாட்சி செய்முடியாது. இலட்சக்கணக்கில் சிங்களப் படைகள் இருந்தாலும் கருணா அம்மான் என்ற ஒரு தமிழன் இல்லாமல், தனிப்பெரும் தலைவன் பிரபாகரன் அவர்களின் படையை அழித்திருக்க முடியாது என்பது மறைக்க முடியாத உண்மை.
காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது என ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெற்றதன் பின்னர் காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா இலங்கையிலிருந்து வெளியேறி சுவிட்சர்லாந்து சென்றிருந்தார்.
குறித்த அதிகாரி நாட்டைவிட்டு தப்பியோடிய நிலையில் அவர் தொடர்பில் பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் பேசிய ஸ்ரீ லங்கா பூகோள ஒன்றியத்தின் உறுப்பினர் ஓய்வுநிலை ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
காவல்துறை பரிசோதகர் நிஷாந்த டி சில்வா நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சுவிட்சர்லாந்து தூதரக காரியாலயம் இடமளித்தமை சந்தேகத்துக்கிடமானது
கந்தப்பா என்ற தமிழரான அவர், நிஷாந்த சில்வா என்ற சிங்கள பெயரில் தன்னை அடையாளப்படுத்தி, ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியயேறியுள்ளார்.
அவர் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவராவார். இந்த நிலையில், அவருக்கு சுவிட்சர்லாந்து தூதரகம் எவ்வாறு விசாவை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது.ர்.
இதுவொருபுறமிருக்க, இராணுவ முகாம்களில், தமிழ் பெண்களும், சிறுமிகளும் தற்போதும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றனர் என ஒரு அமைப்பு தெரிவித்துள்ளது.
தானும் அவ்வாறானதொரு சம்பவத்தை எதிர்கொண்டதாக நிமல்கா பெர்னாண்டோவும் கூறுகிறார்.
நிமல்கா பெர்னாண்டோவின் மகனான கனிஷ்க ரத்னப்பிரிய என்பவரே சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அரசியல்துறை பொறுப்பாளராக செயற்படுகிறார்.
அவர்கள் அனைவரும், இலங்கையில் சமஷ்டியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர்.
இந்த நிலையில், எதிர்காலத்தில் யார் யாருக்கு எதிராக செயற்படுவார்கள் என்பது தெரியாது என்று பேசிய அவர், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ராஜித சேனாரட்னவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் வின்