Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெல்லி மீன்களால் ராமேசுவரம் கடல் பகுதியில் மக்களுக்கு ஆபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில மாதங்களாக ராமேசுவரம் கடல் பகுதிகளில் ஜெல்லி மீன்களின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
 

1470990376-8473.jpg
 


 


 



ராமேசுவரம் கடற்கரையை கண்டு ரசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். ராமேசுவரம், பாம்பன் மற்றும் தனுஷ்கோடி கடல் அலைகளின் சுழல்கள் மிகவும் ஆபத்தானவை.

மணல் படுகைகள், சகதி, பாறைகள் மற்றும் ஆழமான பள்ளங்கள் அமைந்துள்ளதால் இங்கு கடலில் குளிப்பவர்கள் நீரில் மூழ்கும் அபாயங்கள் அதிகமாக உள்ளன. ராமேசுவரம் கடல் பகுதியில் ஜெல்லி மீன்கள் அதிகமாக காணப்படுவதால் அங்கு கடலில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ராமேசுவரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளுக்கு ஜெல்லி மீன்கள் இனப் பெருக்கத்துக்காக வரத் தொடங்கியுள்ளன. இதனால் இந்த கடற் பகுதியின் கரையோரங்களில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஜெல்லி மீன்கள் மனிதனை தாக்கினால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஒவ்வாமையின் காரணமாக மரணம் கூட நிகழலாம். இறந்து போன ஜெல்லி மீன்களை மனிதர்கள் தொட்டால் கூட அரிப்பு ஏற்படும்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஜெல்லி மீன்கள் அதிகம் உள்ள கடற்கரை பகுதிகளில் குளிக்க தடை விதிப்பதுடன் அறிவிப்புப் பலகைகளை அதிகப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rameswaram-sea-area-seems-to-be-dangerous-due-to-jelly-fishes-116081200042_1.html

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெலி மீன்களில்... பல வகையுண்டு.
இவை அனேகமாக... கடல் கொந்தளிப்பு, கடும் மழை பெய்வதற்கு முதல் நாள் கரையை நோக்கி வருமாம்.

நான் டுனீசியாவிற்கு சுற்றுலா சென்ற மூன்றாம் நாள், கடலில் குளித்துக் கொண்டு இருந்த போது....
திடீரென்று எல்லாருக்கும்.... உடம்பெல்லாம் மசுக்குட்டி பட்டு  சுணைக்கிற மாதிரி வீங்கி, சிவந்து விட்டது.
எமக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது..... அங்கிருந்தவர்கள் இது ஆபத்தில்லாத ஜெலி மீன் என்றும், 
கண்ணுக்கு தெரியாமல், நீருடன் நீராக கண்ணாடி போல் நீந்திக் கொண்டிருந்த, ஜெலி மீன்களை காட்டினார்கள்.
அதற்கு.... உடனடியாக, கரையில் உள்ள ஈர மணலால்  அல்லது பாதி தக்காளிப் பழத்தால்  தேய்த்தால்  கொஞ்ச நேரத்தில் அது மாறி விடும் என்று சொன்னார்கள். அப்படி செய்ய சரி வந்து விட்டது. அவர்கள் சொன்னது போல்.... அடுத்த நாள் பெரிய கடல் கொந்தளிப்பும் ஏற்பட்டது.

முதலில்.... ராமேசுவரம் கடற்கரைக்கு வந்துள்ளவை, எப்படிப் பட்ட  ஜெலி மீன்கள் என்பவற்றை அறியாமல், 
மக்களை பயப்படுத்துவது சரியல்ல.  
ஏனென்றால்...  எமது ஊடகங்கள்... கபாலி படத்துக்கும். சினிமா நடிகைக்கும், கிரிக்கெட்டும் கொடுக்கும் முக்கியத்துவம் போல்.. பிற  முக்கியமான உலக அறிவு சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவதேயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 12 August 2016 at 5:54 PM, தமிழ் சிறி said:

முதலில்.... ராமேசுவரம் கடற்கரைக்கு வந்துள்ளவை, எப்படிப் பட்ட  ஜெலி மீன்கள் என்பவற்றை அறியாமல், 

மக்களை பயப்படுத்துவது சரியல்ல.  
ஏனென்றால்...  எமது ஊடகங்கள்... கபாலி படத்துக்கும். சினிமா நடிகைக்கும், கிரிக்கெட்டும் கொடுக்கும் முக்கியத்துவம் போல்.. பிற  முக்கியமான உலக அறிவு சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்துவதேயில்லை. 

அது இந்து சமுத்திரம், இது மத்தியதரைக்கடல்...

கடல் உயிர்களில் வேறுபாடு இருக்குமே.

மேலும் சொறிஞ்சாலும் பரவாயில்லை என்று, அங்கு கிடைக்கும் தக்காளி வாயினுள் தான் போகும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

அது இந்து சமுத்திரம், இது மத்தியதரைக்கடல்...

கடல் உயிர்களில் வேறுபாடு இருக்குமே.

மேலும் சொறிஞ்சாலும் பரவாயில்லை என்று, அங்கு கிடைக்கும் தக்காளி வாயினுள் தான் போகும். :grin:

ஓமோம்.... நமக்குத் தானே.... சொறிஞ்சு கொண்டிருப்பதில், அலாதி இன்பம். :grin:

On 12/08/2016 at 10:24 PM, தமிழ் சிறி said:

நான் டுனீசியாவிற்கு சுற்றுலா சென்ற மூன்றாம் நாள், கடலில் குளித்துக் கொண்டு இருந்த போது....
திடீரென்று எல்லாருக்கும்.... உடம்பெல்லாம் மசுக்குட்டி பட்டு  சுணைக்கிற மாதிரி வீங்கி, சிவந்து விட்டது.

உந்த கோதாரி டென்மார்க்கின் helsingkor பகுதி கடலிலும் ஏராளமா இருக்குது. இப்ப நினைச்சாலும் கடிக்குது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த மீனை மட்டக்களப்பு ரவுண் பாலத்திலை நிண்டு பார்த்திருக்கிறன்.....எக்கச்சக்கமாய் போகும்.வடிவாயுமிருக்கும். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.