Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ முகாம் அமைக்க காணி வழங்கி வைப்பு!

Featured Replies

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ளார்.

குறித்த காணி இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிலையில் நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் நேற்று இடம் பெற்றுள்ளது.

நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் குறித்த காணி நில அளவை செய்யப்பட்டமை குறித்து அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் இன்று (24) காலை குறித்த பகுதிக்குச் சென்று இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியை பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது குறித்த காணி சுமார் 2 ஏக்கர் விஸ்தீரினம் கொண்டது எனவும்,குறித்த காணி நேற்று மதியம் நில அளவைத்திணைக்கள அதிகாரிகளினால் நில அளவை செய்யப்பட்டு காணிக்கான எல்லைக்கல் போடப்பட்ட நிலையில் இராணுவத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் வடமாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இராணுவத்திற்கு நில அளவை செய்யப்பட்ட குறித்த காணியில் அப் பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்றின் காணியும் உள் அடங்குவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரின் தன்னிச்சையான நடவடிக்கையின் மூலமே குறித்த காணி நில அளவை செய்யப்பட்டதாகவும், குறித்த மூன்றாம் பிட்டி கிராமத்திற்கு பொறுப்பான கிராம அலுவலகர் கடமையில் இல்லாத நிலையில்வேறு கிராமத்திற்கு பொறுப்பான விஜி என அழைக்கப்படும் கிராம அலுவலகர் ஒருவரை பிரதேசச் செயலாளர் நியமித்த நிலையில் அவர் அங்கு வந்து நில அளவையில் ஈடுபட்டதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நில அளவையில் ஈடுபட்ட குறித்த கிராம அலுவலகர் தமது கிராமத்தில் அவருக்கு நெருங்கியவர்களின் பெயர்களின் காணி அபகரிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர்.

மூன்றாம் பிட்டி மற்றும் அதனை அண்டிய கிராம மக்களுக்கு பல்வேறு தேவைகளுக்காக காணி தேவைப்படுகின்றமை குறித்து தற்போதுள்ள மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரிடம் பல தடவைகள் காணிக்கான கோரிக்கை விடுத்தள்ள போதும் பிரதேசச் செயலாளர் அசமந்தப்போக்குடன் செயற்படுவதாக மூன்றாம் பிட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்றாம் பிட்டி கிராமத்தில் ஏற்கனவே மூன்று படை முகாம்கள் உள்ள நிலையில் ஏன் நான்காவது படைமுகாம் அமைக்கப்படுகின்றது எனவும் மூன்றாம் பிட்டி கிராமத்தில் உள்ள மக்களாகிய நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? என அந்த மக்கள் மாகாண சபை உறுப்பினரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் மற்றும் எமது கிராமத்திற்கு சம்மந்தமே இல்லாத விஜி கிராம அலுவலகர் ஆகியோரின் சுய நலத்துடன் குறித்த காணி இராணுவத்திற்கு கையளிக்க நில அளவை செய்யப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினரிடம் தெரிவித்த அப்பகுதி மக்கள் எதிர்வரும் காலங்களில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் கிராம மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த காணி இராணுவத்திற்காக நில அளவீடு செய்யப்படவுள்ளது என்பது குறித்து பகிரங்க அறிவித்தல் வழங்கப்படாத நிலையில் பிரதேசச் செயலாளர் சுய நலத்துடன் செயற்பட்டமை குறித்து மூன்றாம் பிட்டி கிராம மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் மூன்றாம் பிட்டி கிராமத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பொது அமைப்புக்கள் செயற்பட்ட நிலையில் குறித்த பொது அமைப்புக்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தி இழக்கச் செய்து தற்போது எமது கிராமத்தில் காணி அபகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் , இதனை வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அப்பகுதி மக்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/statements/01/115247

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாட்சி நடக்கும் நாட்டில் மூலைக்கு மூலை இராணுவமுகம்கள் எதற்கு????
பயங்கரவாத செயல்கள் இல்லாத நாட்டில் பயங்கரவாத சட்டம் எதற்கு?

சில வேளை ஆமியள் தேர் இழுக்கவும்....மேளச்சமா நடத்தவாய் இருக்குமோ????

13726706_121890438248628_654154906064062 

 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ முகாங்களும் இராணுவம் இருந்தால் தானே காணி விடுவிக்கிறம்.. காணாமல் செய்யப்படுவதை இல்லாமல் செய்யுறம்.. வெள்ளை வானை தடுக்கிறம்.. இராணுவத்தை அரக்கி உட்காரச் சொல்லுறம் என்று சம் சும் மாவை கும்பல் இன்னும் ஒரு 25 வருசத்துக்கு அரசியல் செய்யலாம். இடையில.. இந்த ஆண்டில்.. தீர்வு.. இந்தா வருகுது.. தீர்வுத்திட்டம் என்று ஊரை ஏய்க்கலாம். சிங்கள எஜமானர்களிடம் குனிந்து கிடந்து சலுகை வாங்கி சந்தோசமா சீவிச்சிட்டு கைலாயம் ஏகலாம். கறுமம் கறுமம்.. இதுகளை எல்லாம் மக்கள் வாக்குப் போட்டு தெரிவு செய்திருக்கினம். அனுபவிக்கத்தான் வேண்டும். :rolleyes:tw_angry:

625.0.560.320.160.600.053.800.668.160.90

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேச செயலர் வழங்கியுள்ளார்.

குறித்த காணி இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட நிலையில் இன்று நில அளவையாளர்கள் அப்பகுதிக்கு வந்து நில அளவீடு செய்து எல்லைக்கல் பதித்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பிரதேச செயலரின் இச்செயலால் ஆத்திரமடைந்த மக்கள், பிரதேச செயலரின் இந்தத் தான்தோன்றித்தனமான செயலுக்கு தமது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், ஏற்கனவே மூன்றாம் பிட்டியில் 3 இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இது நான்காவது முகாம் அமைப்பதற்கான இடம் எனவும் தெரிவித்துள்ளனர். அத்துடன் நாம் என்ன பயங்கரவாதிகளா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சென்று பார்வையிட்டுள்ள வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனிடம் தாம் பல தேவைகளுக்கு காணிகளைக் கோரியபோதும் பிரதேச செயலர் எந்தப் பதிலும் வழங்கவில்லையெனவும், இப்போது இராணுவமுகாமுக்கு காணி வழங்கியுள்ளதாகவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், எமது பிரதேசத்தில் தொடர்ந்து இராணுவ முகாமுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதை வடக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவருமாறு குணசீலனிடம் தெரிவித்த மக்கள் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதால் தாம் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

http://thuliyam.com/?p=38938

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.