Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரணும் முடிவும் 50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு" !!!

Featured Replies

 

50 அல்லது 60 வயதை கடக்கும் ஆண்களில் அதிகமானவர்களிடம் ஏற்படும் "பாலியல் பிறழ்வு"

தனிப்பட்ட நடத்தை சார்ந்த பிரச்சினையா?

அல்லது உடற்கூறு சார்ந்த உளவியல் பிரச்சினையா? என்ற பகுப்பாய்வுக்கான காலத்தை நாம் மிக அண்மித்து நிற்கின்றோம்.

மனைவி அல்லாத மாற்றுப் பெண்ணொருவருடனான பாலியல் தொடர்புகள் இந்த வயது சார்ந்த ஆண்களிடம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை ஒரு சமுகச் சிக்கலாக பார்க்கப்பட வேண்டுமா?

பொருளாதார ரீதியில் தனது குடும்பத்தை தன்னிறைவாக்கிய ஒரு ஆண், இத்தகைய நடத்தை குறித்து எந்தவித பச்சாத்தாபமும் அற்றிருத்தல் எமது சமுகத்தில் மிகச் சாதாரணமாக பார்க்கப்படுகின்றதா?

90 வயது வரை பாலியல் வீரியத்தை இயற்கையான உடற்கூற்று ரீதியில் கொண்டுள்ள ஆண்களுக்கு,

55 வயதில் பாலியல் நாட்டம் நிறைவுறும் தனது மனைவிக்கு அப்பால் வேறொருவர் தேவையாவது தவிர்க்கப்பட முடியாததா?

அல்லது தவிர்ப்பதற்கான மார்க்கங்களை இதுவரை நாம் கண்டடையவில்லையா?

என்ற முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் விவாதிக்கப்பட்டது.
 

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் பார்க்கவில்லை.

ஆயினும் பார்த்தால், பிட்டு அவிச்சுக் கொட்டுற மாதிரி எதையாவது கொட்டிப் தள்கிறார்கள் என்று நிறுத்துவேன் என்றும் தெரியும்.

நமது சழூகத்தில், அழுத்தம் திருத்தமாக ஆங்கில தூசனம் சொல்வார்கள். தமிழில் சொல்ல வெட்கப்படுவார்கள்.

உங்க பொம்பிளையளே தவறாக நடக்கும் நிலையில் இவர்கள் ஆண்களை மட்டும் கருவாக வைப்பது சரியல்ல....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை  ஏதோ தமிழர் மட்டும் செய்யும் செயலாக விவாதிக்கின்றார்கள்.மனித இனம் உருவாகியது முதல் இது உலகளாவிய செயலாக இருந்து வந்துள்ளது. பணக்காரர் மட்டும் செயல் போல் பணத்தை காரணமாக கூறுகிறார்கள். ஆண்கள் மட்டும் இப்படியான செயல்களை செய்வதாகவும் விவாதிக்கின்றார்கள்.

ஊரிலை/இஞ்சை ரியலாய்  நடந்த நாலுகதை எடுத்து விட்டனெண்டால் தெரியும் கூத்து....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
54 minutes ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

holdinghands.jpg

அப்ப நாங்கள் வெளியிலை நடந்து போகேக்கை கையை பிடிச்சுக்கொண்டு உல்லாசமாய் நடந்து போறதை பொய்யெண்டு சொல்ல வருகின்றீர்கள்.

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

உண்மை புங்கை.
நீங்கள் தென்னிந்தியாவுடன், எம்மவர்களை ஒப்பிட்டதை சிந்தித்து பார்க்கும் போது.... அதன் தாக்கம், பெரிய அளவில் உள்ளது நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

எமது சமூகத்தில் இது ஒரு பெரிய பிரச்சனை!

பெரும்பாலான பெண்கள் திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்குச் சமூக அந்தஸ்தைக் கொடுத்துவிடும் என்று நம்புகின்றார்கள்!

அதன் பின்னர் அவர்கள்..கணவனுக்கென வாழ்வதில்லை!  தங்களுக்கெனவே வாழ்கின்றார்கள்!

கணவனால் அங்கலாய்ப்பதை விடவும் வேறு எதுவும் செய்து விட முடியாது!

கணவனும் கெளரவம், குடும்பம் என்ற வார்த்தைகளுக்குள் தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறான்!

தென்னிந்தியாவில் கொஞ்சம் வித்தியாசம் என்று நினைக்கிறேன்!

தலை நிறையப் பூ வைத்து...கணவனும் மனைவியும் படம் பார்க்கப் போகும் காட்சியே.. மனதை அப்படியே அள்ளும்!

ஒரு கார் பயணத்தில் கிடைக்காத சந்தோசம்...வெறும் ஸ்கூட்டர் பயணத்திலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

தடித்த தாலிக்கொடியில் கிடைக்காத சந்தோசம்....வெறும் மஞ்சள் கயிறிலேயே அவர்களுக்குக் கிடைத்து விடுகின்றது!

 

எமது சமூகத்தின் ஆண்கள் வெறும் கனவுகளிலேயே வாழ்ந்து திருப்தி காணப் பழக்கப் பட்டு விட்டார்கள்!

புங்கையர்,

உங்கள் அவதானிப்பில் உடன்பாடு இல்லை. காட்சிகள் எல்லாம் அப்படியே உண்மை இல்லை.

தமிழகத்தில் பெண்களை, ஆண்கள் ஏறக்குறைய கொத்து அடிமைகளாக அல்லவா நடாத்துகிறார்கள். 

கணவர் முதல் பிள்ளைகள் வரை 'நீ' சொல்லி உரிய மரியாதை தராது அழைப்பார்கள். வீட்டில் ஆண்பிள்ளைகளுக்கு தான் சாப்பாட்டில் முன்னுரிமை. கள்ளிப்பால் சமாச்சாரங்கள் நம்மூரில் நிச்சயமாக இல்லையே.

இந்த மல்லிப்பூ விவகாரம் நானும் நேரே பார்த்திருக்கிறேன். வியந்த மறுநாளே, இன்னிக்கு, 'அங்க சக்களத்தியா வீடு, உங்கப்பா வரமாட்டாரு' என்று சொல்வதையும் கேட்டிருக்கிறேன். கருணாநிதி முதல் காசு வைத்திருபவர்கள் எவ்லோருக்கும் 'அந்த' சின்னவீடு சமாச்சாரம்.

பெண்கள் மனவலி, காயம்.... கவலைப் படமாட்டார்கள். காரணம் இது இல்லாவிடில் இன்னொன்று...

அதற்காக நமது பகுதியில் இல்லை என்றவில்லை. கொஞ்சம் மனக்காயம் உண்டாக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.

இப்போது படிப்பறிவு அதிகரிக்கிறது. ஆனால் நமது பகுதி வெள்ளைக்காரர் காலத்தில் இருந்தே, குடும்பம், பிள்ளைகள் கல்வி முன்னேற்றம்.... அதற்காக அன்னிய தேச உழைப்பு.... உழைப்பு. அதுவே நமது சந்தோசம்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.