Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை – இராணுவம்!

Featured Replies

தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவை - இராணுவம்!

தேசிய பாதுகாப்புக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணி தேவைப்படுவதாகவும் அதனை கையகப்படுத்துவதற்கு காணி அமைச்சரிடம் அனுமதியைக் கோரியுள்ளது இராணுவம்.

தற்போது இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கும் இந்தக் காணிகளிலேயே அந்த 1000 ஏக்கரும் அடங்கியுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலிகாமம் வடக்கில் பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவத்தினரிடமிருந்த 500 ஏக்கர் காணிகளை தாம் விடுவிக்குமாறு கோரியதற்கிணங்கவே இராணுவத்தினர் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மோதல்களுக்கு முன்னர் மக்கள் அதிகளவில் வசித்த கீரிமலை, காங்கேசன்துறை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளிலுள்ள காணிகளையே இராணுவம் விடுவிக்கவுள்ளது.

முன்னதாக, இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://thuliyam.com/?p=40873

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தின் பாதுகாப்பு வலிவடக்கிலா உள்ளது?

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு 1 அங்குல நிலம் கொடுப்பது கூட தமிழ் மக்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

தமிழர்களின் தேசிய பாதுகாப்புக்காக சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் முற்றுமுழுதாக தமிழர் தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

தேசியத்தின் பாதுகாப்பு வலிவடக்கிலா உள்ளது?

இந்தியாவிடமிருந்து பாதுகாப்பு தேட வலிவடக்கு முக்கியம் போல‌

2 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு 1 அங்குல நிலம் கொடுப்பது கூட தமிழ் மக்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

தமிழர்களின் தேசிய பாதுகாப்புக்காக சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் முற்றுமுழுதாக தமிழர் தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

இதை தாயகத்தில் இருக்கும் 10 லட்சம் மக்களும் ஒன்றிணைந்து நடத்தினால்மட்டுமே சாத்தியம், இதற்குரிய பொருளாதார சட்ட உதவிகளை 15 லட்சம் புலம் பெயர்ந்த மக்கள் வழங்க வேண்டும், ஆனால் இது சாத்தியமா????

1. புலம் பெயர்ந்தவர்களை தாயக அக்கறை 10% கூட இல்லை.

2.தாயக மக்களுக்கு தாயக அக்கறை 10% கூட இல்லை.

அப்படி ஒருவேளை  இது கைகூடும் நிலை வந்தால்,

சிங்கள இந்திய அரசியல் கை கூலிகள் இப்படி கூறுவார்கள் 

 

1. இது இன்னுமொரு முள்ளி வாய்க்காலில் போய் முடிய போகுது..

2. சம் சும் வந்து வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி வழங்கிவிட்டு, சிங்களவனோடும் முஸ்லீமோடும் கூத்தாட போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளுக்கு 1 அங்குல நிலம் கொடுப்பது கூட தமிழ் மக்களின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது.

தமிழர்களின் தேசிய பாதுகாப்புக்காக சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகள் முற்றுமுழுதாக தமிழர் தாயகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

சிங்களம் என்ற தேசியம் சிறிலங்கா என்ற தேசியத்தால் பாதுகாக்கபட வேண்டும் என்பது பலரின்  விருப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன மாதிரியெல்லாம் கதை விடுறாங்கள்????  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.