Jump to content

LED யால் ஒளிரும் 'புர்ஜ் கலீஃபா'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

mtxj47.jpg

ஏற்கனவே குடும்பத்துடன் பலமுறை பார்த்திருந்தாலும், 829 மீட்டர் உயரமுள்ள துபாய் 'புர்ஜ் கலீஃபா' கட்டிடம், தற்பொழுது இரவு நேரங்களில் LED விளக்குளால் வண்ணக்கோலத்தில் ஒளிர்கிறது..

20 நிமிடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப் பிரமாண்டமான நடன நீரூற்றுக்களுடன், புர்ஜ் கலீஃபா முழுக் கட்டிடமும் நடன விளக்குகளால் ஒளிரும் காட்சி மிக வசீகரமானது. இவற்றை நேற்று மறுபடியும் காண நேர்ந்தது. terrific.gif

இந்த ஒளிரும் LED விளக்குகள் இவ்வுயரமான கட்டிடம் முழுவதும் எப்படி பதிக்கப்பட்டு இணைத்து, மத்திய கட்டுப்பாட்டு அறையிலிருந்து கணணி மூலம் இணைத்து விளக்குகளால் நடனமேற்றப்படுகிறது என்பதை பற்றி விளக்கும் சிறு காணொளி..இது

சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்க, இப்படி ஏதாவது மாற்றங்களை செய்தால்தான் அவர்களின் வரவும் தொடரும்..!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்..... நல்ல கற்பனையுடன், நன்றாக செய்துள்ளார்கள்.  
அங்கு வேலை செய்ப்பவர்கள் சிலரில்... தமிழ் முகத்தை காணக் கூடியதாக உள்ளது.
மூன்றாவது காணொளியில்.... 2:40´வைத்து வினாடியில்,  அதற்குப் பக்கத்தில் உள்ள கட்டிடம் ஒன்று, 
சிவலிங்க வடிவில்... திருநீற்றுக் குறியுடன் காணப் படுகின்றது :grin:. பகிர்விற்கு நன்றி வன்னியன்.:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வாவ்..... நல்ல கற்பனையுடன், நன்றாக செய்துள்ளார்கள்.  
அங்கு வேலை செய்ப்பவர்கள் சிலரில்... தமிழ் முகத்தை காணக் கூடியதாக உள்ளது.

உண்மைதான்.. உயரமான கட்டிட வேலைகளில் பெரும்பாலும் தமிழர்கள், தெலுங்கர்கள் அதிகம் வேலை செய்கிறார்கள்.. இத்துறையில் மலையாளிகளை காண்பது அரிது..

1 hour ago, தமிழ் சிறி said:

மூன்றாவது காணொளியில்.... 2:40´வைத்து வினாடியில்,  அதற்குப் பக்கத்தில் உள்ள கட்டிடம் ஒன்று, 
சிவலிங்க வடிவில்... திருநீற்றுக் குறியுடன் காணப் படுகின்றது :grin:.

அந்த கட்டிடத்திற்குப் பெயர் "அட்ரஸ் ஓட்டல்..(Address Hotel)!" மிக சொகுசு ஓட்டல்..

இந்த வருடம் (2016) சனவரி புதுவருட கொண்டாட்டத்தின்போது வாணவேடிக்கை விபத்தில் தீப்பற்றி எரிந்து போனது.. !

இப்பொழுது ஓட்டலை முற்றாக மூடிவிட்டு, புணரமைக்கும் பணி நடக்கிறது..

பணம் கொட்டிக்கிடப்பதால், பழைய பொலிவுடன் மீண்டுவிடும்..! :)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது காணொளியில் 'ஜாகுவார்' கார் நிறுவனத்திற்காக விளம்பர கருத்துருவில், புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் மீது ஒளித்தூரிகை வர்ணஜாலம் மிக அருமையான கிரியேட்டிவிட்டிvil-idee.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ராசவன்னியன். நன்றாக இருக்கின்றது.
இணைக்கப்பட்ட நான்காவது காணொளி போல்  அமெரிக்காவிலும் பலகாலமாக உள்ளது என நினைக்கின்றேன். அது டாலஸ்  மாகாணத்திலா என்று தெரியவில்லை...:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

... இணைக்கப்பட்ட நான்காவது காணொளி போல்  அமெரிக்காவிலும் பலகாலமாக உள்ளது என நினைக்கின்றேன். அது டாலஸ்  மாகாணத்திலா என்று தெரியவில்லை...:unsure:

நீங்கள் குறிப்பிடுவது கீழே நான் இணைத்துள்ள அமெரிக்காவின் லாஸ்வேகஸிலுள்ள(Las Vegas) பெல்லாஜியோ நடன நீரூற்று என எண்ணுகிறேன்..அங்கே நடன நீரூற்றின் பின்புலத்தில் வெறுமையான பெல்லாஜியோ கேசினோ ஓட்டல் நிற்கிறது..

ஆனால் துபாயின் நடன நீரூற்றும், அதற்கேற்றவாறு பின்புறமுள்ள 829மீ உயர புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின் மீது வண்ணக் கோலங்களை ஒருங்கிணைந்து அள்ளித் தெளித்து உயிரூட்டுவது இன்னும் சிறப்பாக இருக்கிறதென எண்ணுகிறேன். :)tw_heart:

 

 

ஊக்கமளித்த அனைவருக்கும் மிக்க நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.