Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா?

Featured Replies

ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா?

எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது.

ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அர சியல் முதிர்ச்சியற்ற சாத்தியமற்ற ஒன்றுக் கொன்று முற்றிலும் முரண்பட்ட அணுகு முறையைத்தான் சிங்கள ஆட்சிப் பீடம், இவ் விடயத்தில் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரு கின்றது என்பதை ஏற்கனவே இப்பத்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கிறோம்.

ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கி விடும் இராணுவக் கெடுபிடிப் போக்கு. மறுபுறம் சமா தான வழித் தீர்வு குறித்து பிரபலாபம். இதுவே சிங்களத்தின் இரட்டை வேட அணுமுறை.

கடந்த காலக் கொழும்பு அரசுகளால் தீவிர முயற்சியுடன் முன்னெடுக்கப்பட்டுத் தோல்வி கண்ட தந்திரோபாயம் இது என்ற உண்மையைக் கவனத்தில் கொள்ளாது, அதே பாணியைப் பின்பற்ற மஹிந்தரின் அரசும் முயல்கின்றது.

விடுதலைக்கான உரிமைக்கான கௌரவ வாழ்வுக்கான நீதி, நியாயம் பெறு வதற்கான தமிழரின் போராட்டம், ஆயுத வழிக் குத் திரும் பியுள்ள இன்றைய சூழலில் அந்த வழியிலேயே தீர்வையும் தனக்கு விருப்பமான முடிவையும் தமிழர் தரப்பு மீது திணிக்க முயல்கிறது தற்போதைய அரசு. தமிழரின் அரசியல் தலைவிதியை, படை பலத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ண யிப்பதற்கு, இந்த அரசு முயன்று வருகின்றது என்பதைக் கடந்த வாரம் இப்பகுதியில் சுட்டிக்காட்டியிருந்தோம். தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, அதன் மூலம் இராணுவ மேலா திக்க நிலையில் நின்று, தான் விரும்பும் அரைகுறைத் தீர்வைத் தமிழர் தலையில் கட்டிவிடு வதே அரசின் திட்டம் என்ற கருத்தையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

அக்கருத்துக்களை ஊர்ஜிதம் செய்வது போன்று, இலங்கை பாதுகாப்புத்துறைப் பேச் சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வின் அறிவிப்பு அமைந்திருக்கின்றது. கிழக்கில் கணிசமான பகுதியைப் புலிக ளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்டுக் கைப் பற்றிய பின்னர் வாகரை வெற்றியை அடுத்து இறுமாப்புடன் இந்த அறிவிப்பை அவர் விடுத்திருக்கின்றார்.

மோதல்களை நிறுத்தி, பேச்சு மேசைக்குத் திரும்புவதற்குப் புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மென்மேலும் சண் டைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டியி ருக்கும். என்று எச்சரித்திருக்கின்றார் அவர்.

யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்து ணர்வு ஒப்பந்தம், நடைமுறையில் இருப்ப தாகத் தெரிவித்துக் கொண்டே அந்த ஒப்பந்தப்படி ஒரு தரப்பின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களுக்குள் மற்றத் தரப்பு, படை நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற தெளிவான ஏற்பாடு இருக்கத் தக்கதாகவே கிழக்கில் பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளைப் படை நடவடிக்கை மூலம் விரட்டி, அப்புறப்படுத்தி விட்டு இந்த அறிவிப்பை அரசு விடுக்கின்றது.

முன்னைய சிங்கள அரசுகள், இதே போன்ற தந்திரத்தைக் கையாண்டு பெற்ற அனுபவம் என்னவென்பது மறக்கப்பட்ட சரித்திரம் அல்ல.இலங்கை யுத்தக் களத்தில் படைவலுச் சம நிலை, காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டிருப்பதும், ஒரே சமச்சீர் நிலை நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிப்பதில்லை என்பதும் அனுபவப் பாடங்கள்.

பதினெட்டு மாதங்களாக ஜெயசிக்குறு இரா ணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, அரசுத் தரப்புக்குச் சாதகமாக மேம்பட்டிருந்த படைச் சமவலு நிலை, திடீரெனப் பதினெட்டு மணித்தியாலங்களில் தலைகீழாக மாறியமை மறுக்கப்படக் கூடியதல்ல. அது போல, கட்டு நாயக்கா விமானப்படைத் தளம் மற்றும் விமான நிலையம் மீதான அதிரடித் தாக்குதலினால், ஒரு சில மணி நேரத்தில் படை வலுச் சமநிலை தலைகீழானதும் நினைவுகொள்ளத்தக்கது.

இத்தகைய சூழ்நிலையில் பாரிய படைக் கலச் சக்தியையும், சுடுகல வலுவையும் பயன் படுத்தி, புதிய புதிய படையெடுப்புகளை நடத்தி, தமிழர் மண்ணை ரணகளமாக்கி விட்டு, உடன் பேச்சுக்கு வராவிட்டால் இது போன்ற மென்மேலும் பல விபரீதங்களை எதிர்கொள்ள நேரும் என்று தமிழர் தரப்பை எச்சரிப்பதால் உருப்படியாக நடைபெறப்போவது எதுவுமில்லை.

இராணுவச் சமநிலை நிலையில் வீழ்ச்சி அல்லது பின்னடைவு கண்ட நிலையில், பேச் சுக்கு அமைதி வழித் தீர்வுக்கு புலிகள் இறங்கி வந்தனர் என்று கூறுவதற்கும் கடந்த காலங் களில் எந்தப் பதிவோ அன்றி உதாரணமோ இல்லை.

எனவே, இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக் கையும், அதை அச்சுறுத்தலாகக் காட்டி பேச் சுக்கு மசிய வைக்கும் மடக்கிப் போடும் மிரட் டல் தந்திரமும் புலிகள் விடயத்தில் பயன் தருமா என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

இத்தகைய நெருக்குதல் போக்கு அல்லது அழுத்த நடவடிக்கை, அமைதி எத்தனங்களில் இருந்து இரு தரப்புகளையும் மேலும் மேலும் விலத்திப்போக வைத்துப் பகையுறவையும், விரோத மனப்பான்மையையுமே வளர்க்கும். அதன் விளைவு மோசமானதாகவும், விபரீத மானதாகவும் அமையும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல. இதனைப் பட்டறியவும் காலம் அதிகம் செல்லாது என்பதும் கடந்தகால அனுபவம்.

-Uthayan-

மிதிபட மிதிபட புல்லே புலியாகுமெனில் புலி என்னவாகும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை. (குறள் 765)

அந்தப் படை தான் புலிப்படை.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை படையை கண்ட புலிகளுக்கு மகிந்தவின் படை ஒரு தூசி.விரைவில் தெரியும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடும் போது.அது வரை தமிழ் மக்கள் stay tuned.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.