Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது! - சம்பந்தன்

Featured Replies

அரசியல் தீர்வு காணும் விடயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது!

தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டென்பதோடு, ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டு, நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்த சம்பந்தன், இச்சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களை யாரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் காணப்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படாமையே காரணம் எனவும் தெரிவித்த அவர் அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கையை எவரும் குழப்பக்கூடாது எனவும் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=43335

  • கருத்துக்கள உறவுகள்

Goundamani-Senthil-Karagattakkaran-Vazha

இன்னும் எவளவு காலத்துக்கையா இதையே சொல்லுவீக!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சரியா நடந்தா ஏன் அவை பிழையாக போகினம்......அவை போகிற பாதைதான் சரி....நீங்க பொல்லைப் பிடித்துகிட்டு பின்னாலை போங்க....

கண்ணாடிக்கு முன்னால நின்றுகொண்டு சம்பந்தர் சொல்லியிருக்காரோ?

  • கருத்துக்கள உறவுகள்

யார் சரியாக் செல்கிறார்களோ அவர்களின் பின் மக்கள் செல்வர். நீங்கள் சரியாக சென்றால் போதுமானது. மிகுதியை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

 அடடா, ஐயா தூக்கம் கலைஞ்சிட்டாரு , அவரோட சத்தம் காணாமல் ஐயா  சமைஞ்சிட்டாரோ  எண்டு நினைச்சிட்டேன்.

யாரப்பு இனவாதியலுக்கு தீனி போடுறது? அகிம்சயில் போராடினாலும் இனவாதம் என்கிறீங்க, ஆயுதம் தூக்கினா  பயங்கரவாதம் என்கிறீங்க, சர்வதேசத்திட்ட முறையிட்டா நாட்டை  காட்டிக்கொடுக்கிறோம் என்கிறீங்க, ஒண்டுகை ஒண்டாய் பேசப்போறோம்  என்கிறீங்க. நல்லிணக்கம், ராஜதந்திரம் எண்டெல்லாம் ஏதேதோ சொல்லுறீங்கோ. அதெண்டா என்னெண்டு விளங்கப்படுத்திப்போட்டு கதையணையப்பு.  எனக்கென்னவோ, உங்களுக்குள் நடக்கும் கொடுக்கல், வாங்கல், அடிக்கும் கும்மாளம், ஒருவருக்கொருவர் காப்பாற்ற பரிமாறும் வாக்குறுதியளைத்தான், நல்லிணக்கம் எண்டு மொழி பெயர்க்கிறீர்கள் போல படுகுது. நாங்கள் தேடுற நல்லிணக்கம் உங்களாலேயோ, சகுனி சுமந்திரனாலேயோ வரும்போல் தெரியவில்லை. உந்த சகுனி பதவிக்காக உங்களை கையுக்கை வைச்சு ஆட்டுது. கவனம். ஆடுற ஆட்டத்தில தலை, கால்  தெரியாமல் தடக்கி  விழுந்து, வெறும் கதிரையையும் விட்டிட்டு, பொட்டெண்டு  போயிடப் போறியள். பாத்து ஆடுங்கோ. நீங்கள் எதையும் சேர்த்தீர்களே ஒழிய,  இழக்கவில்லை. எங்கள் வலி உங்களுக்கு புரியாது.    

  • தொடங்கியவர்

16 எம்பிக்கள் தீர்வு காண்பார்கள்! மற்றவர்கள் குழப்பவேண்டாம்!! சம்பந்தர்!

பேரணி நடத்தாமல் பேரம்பேசும் வழி சொல்லுங்க ஐயா!

தமிழர்களாகிய நாம் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது. என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து எதிர்நோக்கி வருகின்றனர். இதனை அனுமதிக்கமுடியாது, உரிமைகளைப் பெறும் பொருட்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு உரித்துண்டு. எனினும், நாட்டில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்வது அவசியம்.

நிரந்தர அரசியல் தீர்வைப் பெறுவதற்கான முயற்சியில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும், நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் நாம் குறியாக உள்ளோம். இந்நிலையில், தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடத்தக்கூடாது.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் அரசியல் தீர்வு காணப்படாமையே ஆகும். அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கையை எவரும் குழப்பக்கூடாது. தனிப்பட்ட நலனுக்காக எவரும் செயற்பட நாம் அனுமதிக்கமாட்டோம்.

சிங்களவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களில் இரு பகுதியினர் உள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் குழப்பவாதிகள், இனவாதிகள். அதாவது, அரசியல் தீர்வைப் பெறும் நடவடிக்கைக்கு எதிரானவர்கள். தமிழர்களின் சில இனவாத நடவடிக்கைகள் அவர்களுக்கு சாதகமாகிவிடும். அதைவைத்து அவர்கள் கூக்குரல் இடுவார்கள்.

இன்னொரு பகுதியினர் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள். அதாவது, நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் தமிழர்கள் செயற்பட்டால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள்.

ஆகவே, தமிழர்களாகிய நாங்கள் அரசியல் தீர்வை உரிமைகளைப் பெறும் நடவடிக்கைகளில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதிக்காத வகையில் செயற்படவேண்டும். சிங்கள இனவாதிகளுக்குத் தீனிபோடும் வகையில் நாம் செயற்பட முடியாது. தமிழர்களாகிய நாம் எல்லோரும் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழர்களின் உரிமைக்காக நாடாளுமன்றில் குரல்கொடுத்து வருவதுடன் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக சிலர் செயற்படுகின்றார்கள். இவர்கள் தூரநோக்கு இல்லாதவர்கள், எமது மக்களைப் பிழையாக வழிநடத்த இவர்கள் முயற்சிக்கின்றார்கள். எமது மக்கள் இதனைப் புரிந்து செயற்படவேண்டும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும்.

தற்போதைய காலத்தில் நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்படவேண்டும், வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு ஒருவரை ஒருவர் விமர்சிப்பதை நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=43382

 

 பேரணி நடத்தாமல் பேரம்பேசும் வழி சொல்லுங்க ஐயா!

 

பேரணி நடத்தக்கூடாது, கூட்டம்போட்டு கத்தக்கூடாது, புலத்தில் உள்ளோர் பொத்திற்று இருக்கவேண்டும் என்று ஆர்ப்பரிக்கும் புத்திஜீவிகளே…

கைதிகளின் விடுதலைக்கு, அரசால் மற்றும் பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை விடுவிப்பதற்கு, காணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பான தீர்க்கமான பதிலைப்பெறுவதற்கு, மீள்குடியேற்ற நிவாரணங்களைப்பெறுவதற்கு……

மைத்திரியின் மனம்நோகாமல், ரணில் கனல் ஆகாமல், வீரசம்ச ஆவேசம் கொள்ளாமல், மகிந்த மந்திப்பாய்சல் பாயாமல், தேரர்களுக்கு தேள்கொட்டாமல், இன்னும் ஐயாமாரை ஐயங்கொள்ள வைக்காமல், ஐநா அங்கிள் மாரும் அங்கீகரிக்கும் வகையில் எவ்வாறு போராட்டம் இல்ல இந்த போராட்டம் எனும் வார்த்தை பொருந்தாது….எவ்வாறு பெறலாம் என்றும் சொல்லுங்கள்….

நேரவிரயம், நிதிவிரயம், பகைகள், வீண்அலச்சல், சக்திவிரயம் இவை எல்லாவற்றையும் தவிர்த்து ..நமக்குத் தேவையானதைப் பெற இந்த காட்டுப்பயலுகளுக்கு நல்ல ஆலோசனை சொல்லுங்க ஐயா சொல்லுங்க..

“உங்கள் ஆலோசனை இந்த நாட்டு மக்கள் எல்லாம் ஒண்டுக்கு இருக்க வழிவகுக்கும்”

http://thuliyam.com/?p=43384

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.