Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை

Featured Replies

புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை
 
 
புலனாய்வாளர்கள் பின் தொடர்வதாக கோத்தா கவலை
நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுமாயின்  எதிர்காலம் அச்சுறுத்தல் மிக்கதாக மாறும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
தான் எங்கு செல்வதென்பதை கண்டறிய பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துப் பார்க்க ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு வரவேண்டியதில்லை. என்னுடைய நிகழ்ச்சி நிரலை கேட்டால் நான் வழங்குவேன். இதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் நேரம் செலவிட வேண்டியதில்ல.
 
கடந்த காலத்தில் புலனாய்வுத் துறை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவுள்ளவர்களைப் பற்றியே தகவல் திரட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 10 வருட காலம் பாதுகாப்புத் துறையில் இருந்த என்னை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதுவதாயின் அது கவலைக்குரிய ஒன்றாகும் எனவும்  வெலிகாமத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்

http://onlineuthayan.com/news/18614

  • கருத்துக்கள உறவுகள்

தலைலவியும், காய்சலும் தனக்கு வந்தால் தான் புரியும்....

பாதுகாப்பு செயலர் கொடுக்கும் தடுப்புக்காவல் உத்தரவில் ஒருவரை 18 மாதங்கள் உள்ளே வைத்திருக்கமுடியும், இலங்கை பயங்கரவாததடை சட்டப்படி.

மிகவும் கவனத்துடனும் பொறுப்புடனும் கொடுக்கப்பட வேண்டிய இந்த உத்தரவுகளை, இவரது கையெழுத்துடன் பிரதி எடுக்கப் பட்ட வெறும் பத்திரங்களாக பொலீஸ் நிலையங்களுக்கு சாதாரண படிவங்களாக கொடுத்து வைத்திருந்த 'மகான்'...

நரகம் என்பது இவர்கள் போன்ற ஈனப்பிறவிகளுக்குத் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களை சிவமாக வணங்கி இந்துக்கள் காரியங்கள் செய்வார்கள்.

கோத்தபாயா போன்றவர்களை சவமாகவே வைத்துக் காரியங்கள் செய்யவேண்டும்.

புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக கோதபாய குற்றச்சாட்டு



புலனாய்வுப் பிரிவினர் தம்மை பின் தொடர்வதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்


புலனாய்வுப் பிரிவினர் தமது நடமாட்டங்களை கண்காணித்து வருவதாகவும் தம்முடன் பயணிப்போர் பற்றிய விபரங்கள் ஹோட்டல்களின் ஊடாகவும் திரட்டப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தமது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான நியாயமான காரணங்கள் எதனையும் புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தாம் எந்தவொரு வகையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தம்மை பின்தொடர்வதனை விடவும் மிக முக்கியமான வேறு பணிகள் புலனாய்வுப் பிரிவிற்கு உண்டு என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தமது நடமாட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து மறைப்பதற்கு எதுவுமில்லை எனவும் தேவை ஏற்பட்டால் தாமே அது பற்றி விளக்கம் அளிக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136758/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலத்திற்கும், நிகழ் காலத்திற்கும் வித்தியாசம் தெரியாத மனிதர்.

1 hour ago, Athavan CH said:

மிக முக்கியமான வேறு பணிகள் புலனாய்வுப் பிரிவிற்கு உண்டு என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான் கடத்தல்  பற்றி கதைக்கிறாரோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.