Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள் வெட்டுக்குழு என நினைத்தே சுட்டோம் என்கிறது பொலிஸ் தரப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ஜீவன் சிவா said:

நீங்கள் சொல்வது சரி ஆனாலும் உந்த பயங்கரவாத சட்டம் இல்லாது ஒழிக்கும்வரை யாரிடமும் நீதியை கேட்கமுடியாது.

பயங்கரவாத சட்டம் இல்லாது ஒழிக்கப்பட்டாலும், புத்தபிக்குகளின் அதிகாரத்தின் கீழ் சிங்களனின் அரசாட்சிகள் தொடரும்வரை, அங்கு தமிழர்களாகப் பிறக்கும் எவருமே, யாரிடமும் நீதியைக் கேட்கமுடியாது. :(
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இங்கே ஒருத்தரும் பொலீசுக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. அவர்கள் செய்தது சரி சொல்லவும் இல்லை.
இசை; வாள் வெட்டுக் குழுவினரை அடக்க மாணவர்களை இரவில் குறிப்பிட்ட நேரத்திற்கு அப்பால் திரிய வேண்டாம் என்று அங்குள்ள ஒரு தமிழ் நீதிபதி சொல்லுகிறார்[அறிவுரை].வாள் வெட்டு குழுவில் பிரபல்யமான பாடசாலையில் பயில்கின்ற படிப்பில் சிறந்த மாணவர்களும் இருக்கிறார்கள்...இறந்த மாணவர்கள் ஊரில் தான் இருந்தார்கள். அவர்களுக்கு ஊரில் என்ன நடக்குது என்று வடிவாகத் தெரியும்.சில நாட்களுக்கு முன்னர் தான் விசேட பொலீஸ் களத்தில் மோட்டார் சைக்கிளில் வீதியில வலம் வருகிறார்கள் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.தவிர இவர்கள் ஏதோ நோக்கத்திற்காகத் தான் வந்திருக்கிறார்கள் என்று அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்...தாங்கள் யூனியில் படிக்கிறோம் தங்களை யார் என்ன செய்யப் போகிறார்கள் என்ட விளையாட்டுப் புத்தி தான் அவர்களை அழித்தது...சுட்ட பொலிசுக்கு கூட அவர்கள் யூனியில் படிக்கிறது என்று தெரிந்திருக்காது...யூனி மாணவர்களை சுட்டால் விசயம் பெரிய பூதாகாரம் ஆகும் என்று அரசிற்கு நன்கு தெரியும்.

பிரபல்யமான பள்ளியில்,யூனியில் படிக்கும் நல்ல குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் தான் இந்த வாள் வெட்டுக் குழுவில் சேர்ந்து திரியினம். அவர்களை அடக்க வேண்டும் என்டால் எதாவது செய்து தானே ஆக வேண்டும்.உந்த அரசு தமிழன் தானே தங்களுக்குள்ள வெட்டுப்படுறான்,வெட்டுப் பட்டுச் சாகட்டும் என்று நினைத்திருந்தால் இங்கே புலம் பெயர் நாட்டில் உள்ள கண பேருக்கு சந்தோசம்.அப்பத் தான் அங்க அவன் வெட்டிட்டான்,இங்கே இவன் வெட்டிட்டான் என்று அவலை மெல்லலாம்.

யாழில் ஆமி இருக்கு,பொலிஸ் இருக்கு பத்தாதற்கு அதிரடிப்படையினரையும் வர வைச்சு இருக்கினம்.இப்ப சந்தோசமா?...இதற்குத் தானே ஆசைப்பட்டீர்கள்

நம்ம  அண்ணன் தம்பிகளை போட்டிருந்தாலும்

இவ்வாறு இரண்டு  பேரைப்போட்டால்தான் மற்றவர்கள் திருந்துவார்கள் என்று சொல்வோமா சகோதரி.

 

 

1 hour ago, ரதி said:

சுட்டது நிட்சயம் அங்குள்ள மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த தான்...இனி மேல் வாள் வெட்டுக் குழுவில் உள்ள ரவுடிகளைத் தவிர யாராவது உந்த நேரத்திற்கு வெளியில் வருவார்களா?...யாழ்ப்பாணாம் கொஞ்சம் அமைதிப் பூங்காவாக மாறட்டும்

ஒருவரை சுட்டுக்கொன்று விட்டு

மற்றவரை அடித்துக்கொன்றிருக்கிறார்கள்

இப்படியானவர்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறீர்கள்?????

 

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா என்னோட கூடப் பிறந்த சகோதரங்கள் வேற, இவர்கள் வேற இல்லை.அதுவும் அந்த கிளிநொச்சியை சேர்ந்த பெடியன் வன்னி யுத்தத்தில் எல்லாம் தப்பி வந்து இப்படி மாண்டது மிகவும் வேதனை.கஸ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பெடியன் வேற.எப்படியிருந்தாலும்,என்ட சொந்தத் தம்பியாக இருந்தாலும் இது தான் என் கருத்து...நிலமையை வைச்சு வெளியால போக வேணாம்னு சொல்லுவேன்.போய் செத்தால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு
......................................................................................
இவர்கள் ஆள் வெட்டுக் குழுவை அடக்குவார்கள் என்று நான் நம்புகிறேன்...புலிகள் இல்லாத இன்றைய நிலையில் பொலீசால் மட்டும் தான் இவர்களை கட்டுப்படுத்த முடியும்.செய்வார்கள் என நான் நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

நிராயுதபாணிகளாக சமாதான காலத்தில் பயணம் செய்த இருவரை சுட்டு கொல்வது  படுகொலை. எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அது தெரிந்து தான் போலிஸ் விபத்து என்று பொய் சொல்லி அதை தலைமைபீடத்துக்கும் சாதித்து இருக்கிறது. ஆனால் சூட்டு சத்தம் கேட்ட பொதுமக்கள் சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டுவர நல்லாட்சியை ஆதரிக்கும் காரணத்தால் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி சம்பந்தன் ஜனாதிபதிக்கு இதை தெளிவாக எடுத்துரைக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தயவில் வாழ வேண்டிய அளவுக்கு கடனில் மூக்கு திணறும் அரசு வேறு வழியின்றி போலிஸ் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

போலிஸ் மறித்தும் ஏன் இளைஞர்கள் நிறுத்தவில்லை?

  1. கப்பம் கேட்பார்கள் என்ற பயமாக இருக்கலாம்.
  2. அடிப்பார்கள் என்ற பயமாக இருக்கலாம்.
  3.  அல்லது அவர்கள் போலிஸ் மறித்ததை காணாமல் இருக்கலாம்.
  4. வெறியில் வாகனம் ஓடி இருக்கலாம். 

எதுவாக இருந்தாலும் சுட்டு கொல்வதை  இவை எதுவும் சட்ட ரீதியாக நியாயப்படுத்த மாட்டா. கொலைக்கு இறந்தவர்கள் பொறுப்பு என்று சொல்பவர்கள்  தமது அடிப்படை உரிமைகளை அறியாதவர்கள் மட்டுமே.

 

 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Jude said:

நிராயுதபாணிகளாக சமாதான காலத்தில் பயணம் செய்த இருவரை சுட்டு கொல்வது  படுகொலை. எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாதது. அது தெரிந்து தான் போலிஸ் விபத்து என்று பொய் சொல்லி அதை தலைமைபீடத்துக்கும் சாதித்து இருக்கிறது. ஆனால் சூட்டு சத்தம் கேட்ட பொதுமக்கள் சம்பந்தனின் கவனத்துக்கு கொண்டுவர நல்லாட்சியை ஆதரிக்கும் காரணத்தால் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி சம்பந்தன் ஜனாதிபதிக்கு இதை தெளிவாக எடுத்துரைக்க, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தயவில் வாழ வேண்டிய அளவுக்கு கடனில் மூக்கு திணறும் அரசு வேறு வழியின்றி போலிஸ் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

போலிஸ் மறித்தும் ஏன் இளைஞர்கள் நிறுத்தவில்லை?

  1. கப்பம் கேட்பார்கள் என்ற பயமாக இருக்கலாம்.
  2. அடிப்பார்கள் என்ற பயமாக இருக்கலாம்.
  3.  அல்லது அவர்கள் போலிஸ் மறித்ததை காணாமல் இருக்கலாம்.
  4. வெறியில் வாகனம் ஓடி இருக்கலாம். 

எதுவாக இருந்தாலும் சுட்டு கொல்வதை  இவை எதுவும் சட்ட ரீதியாக நியாயப்படுத்த மாட்டா. கொலைக்கு இறந்தவர்கள் பொறுப்பு என்று சொல்பவர்கள்  தமது அடிப்படை உரிமைகளை அறியாதவர்கள் மட்டுமே.

 

 

 

மறுநாள் யாழ் வைத்திய சாலையில் நடந்த ........
செய்திகளை உங்களுக்கு யாரோ இருட்டு அடிப்பு செய்துவிட்ட்டார்கள்.


அதுதான் இடையில் இருந்த 2 நாளை உங்கள் பதிவில் காணவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Maruthankerny said:

மறுநாள் யாழ் வைத்திய சாலையில் நடந்த ........
செய்திகளை உங்களுக்கு யாரோ இருட்டு அடிப்பு செய்துவிட்ட்டார்கள்.


அதுதான் இடையில் இருந்த 2 நாளை உங்கள் பதிவில் காணவில்லை!

அவை நீங்கள் சொன்னது போல  மறுநாள் நடந்தவை. இடையில் இருந்தவை  இரண்டு நாட்கள் அல்ல.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.