Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபத்தான கட்டத்தில் கருணா! விரைவில் கைதாக வாய்ப்பு!

Featured Replies

கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலான பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்காக அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ள நபர் கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்த நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றவர் என தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அவர் தற்போது அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேரில் மூவர் கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எனவும், இருவர் கருணா தரப்பு உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடராஜ் ரவிராஜை கொலை செயற்வதற்கு பயன்படுத்தி துப்பாக்கி இராணுவத்திற்கு சொந்தமானதெனவும், அந்த துப்பாக்கி கிரிதலை இராணுவ முகாமில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த முகாமில் கருணா தரப்பினர் 150 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக இதன் போது மேலும் தெரியவந்துள்ளது.

http://www.tamilwin.com/politics/01/125549?ref=right_featured

  • தொடங்கியவர்

நாளை எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் போவோமா..? மோட்டார் சைக்கிளை தந்த கருணா தரப்பு..!

கங்காராம பகுதியில் அமைந்துள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவு கட்டடத்தில் “நாளை எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் போவோமா...?” என பழனிசாமி சுரேஷ் என்பவர் என்னிடம் கேட்ட போது நான் அதற்கு இணங்கினேன்.

மறுநாள் காலை 6 மணியளவில் பொரளை கனத்தைக்கருகில் வருமாறு கூறியதுடன் அவர் வந்த சிவப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிளொன்றை தனக்குத் தந்ததாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ப்ரீதிவிராஜ் மனம்பேரி இன்று சாட்சியமளித்தார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலை தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஹிலால் வைத்தியதிலக முன்னிலையிலும் விசேட ஜூரிகள் சபை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் மனம்பேரி சாட்சியமளிக்கயிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கருணா தரப்பின் உறுப்பினராக இருந்த பழனிசாமி சுரேஷ் இவ்வாறு தெரிவித்ததன் பின்னர் இந்த வழக்கின் நான்காவது பிரதிவாதியான வஜிர என்பவர் நாளை காலை 6 மணிக்கு என்னை வருமாறு தெரிவித்தார் என்றும் மனம்பேரி சாட்சியமளித்தார்.

தொடர்ந்து சாட்சியமளிக்கையில், தான் கருணா குழுவுடன் இணைந்து வடமாகாணத்தில் எல்.ரீ.ரீ.ஈ.க்கு எதிரான இராணுவ செயற்பாடுகளில் உதவியதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணியாற்றும் போதும் எல்.ரீ.ரீ.ஈ. க்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்ததாகவும் அரச தரப்பு சாட்சியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனக்கு தெரிந்தவகையில் கருணா தரப்பினர் எமது பாதுகாப்பு பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விசேட பிரிவொன்று அந்தக் காலத்தில் இயங்கியது.

அந்தப் பிரிவில் இணைந்து கருணா தரப்பினர் செயற்பட்டனர். கருணா தரப்பு உறுப்பினர்களுடன் அரச தரப்பு இணைந்து எல்.ரீ.ரீ.ஈ. யின் முகாம்களை தேடி தாக்குதல் நடத்தினர். நானும் இந்த நடவடிக்கையில் இணைந்திருந்தேன்.

பிரதிபொலிஸ் மா அதிபர் ரொஹான் அபேகுணவர்தனவின் கீழ் சேவை செய்யும் போதும் இந்த நடவடிக்கைகளில் கலந்து கொண்டிருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி நன்றாக பேச வராது என்றாலும் கருணா தரப்பில் சிங்களம் கதைக்கக் கூடியவர்கள் இருந்தார்கள்.

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொட்ரிகோ என்பவரின் கீழ் சாரதியாக நான் சேவை செய்துள்ளேன். 2008ம் ஆண்டு வரை நான் சேவை செய்தேன். அதன் பின்னர் அங்கிருந்து வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டேன்.

வடக்கு, கிழக்கில் கடமையாற்றிய பின் கொழும்புக்கு வந்து கடமையாற்றினாலும் கருணா தரப்பினர்களுடன் நான் தொடர்பை வைத்திருந்தேன். அவர்களுடன் நான் கதைத்திருக்கிறேன். அவர்களின் சிலர் கொழும்பில் தங்கியுமிருந்தார்கள்.

வடக்கு கிழக்கில் இருக்கும் போது நான் கப் ரக வாகனங்கள் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியிருக்கிறேன். அதிகளவு கருணா தரப்பினரின் மோட்டார் சைக்கிள்களை பாவித்திருக்கிறேன். கருணா தரப்பினரால் இந்த மோட்டார் சைக்கிள் எனக்கு வழங்கப்பட்டிருந்தது.

பங்கரவாதிகளுக்கு எதிராக நடாத்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு நான் இந்த மோட்டார் சைக்கிள்களை செலுத்தியிருக்கிறேன்.

மோட்டார் சைக்கிள் செலுத்துவதில் நான் விசேட பயிற்சி பெற்றிருக்கிறேன். வடக்கு கிழக்கிற்கு செல்வதற்கு முன்னராக களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் மோட்டார் சைக்கிள் செலுத்துவது சம்பந்தமாக பயிற்சிகளை பெற்றேன்.

கொழும்புக்கு வந்த பின்னரும் கருணா தரப்பினருடன் நான் தொடர்பு வைத்திருந்தமை உயர் அதிகாரிகளுக்கு தெரியாது. இந்த சந்தர்ப்பத்திலேயே கருணா தரப்பிலுள்ள பழனிசாமி சுரேஷ் என்பவரை அறிந்து கொண்டேன்.

பழனிசாமி என்பவர் கொட்டாஞ்சேனையில் வதிவதாக கூறியிருக்கிறார். பழனிசாமி பாதுகாப்பு தரப்புடன் மிக நெருங்கி பழகியிருக்கிறார். நான் பாதுகாப்பு தரப்பு என்று குறிப்பிட்டது அரச புலனாய்வு பிரிவையே.

மட்டக்களப்பில் இருக்கும் போது பழனிசாமி என்பவர் எங்களது புலனாய்வு பிரிவுடன் இணைந்து செயற்பட்டார் என்பது எனக்கு நன்றாக தெரியும். பழனிசாமி கொழும்பில் இருக்கும் போதும் அரச புலனாய்வுப் பிரிவுடன் நெருங்கி செயற்பட்டார்.

இதனை நான் அவரூடாகவே அறிந்து கொண்டேன். ஒருநாள் கங்காரம விகாரைக்கு அருகாமையில் வருமாறு எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்படி நான் அங்கு சென்றேன்.

கங்காரம லொண்டறி தோட்டம் அருகில் சென்றதும் சாமியை நான் சந்தித்தேன். 2006 ம் ஆண்டு நவம்பர் 6ம் திகதி என நினைவிருக்கிறது. அலரிமாளிகைக்கு பக்கத்தில் தான் இந்த லொண்டரி தோட்டம் இருக்கிறது.

இந்தப் பகுதிக்கு நான் இதற்கு முன்னரும் சென்றிருக்கிறேன். அலரிமாளிகைக்கு செல்லும் போது இந்தப் பாதையூடாகத்தான் சென்றிருக்கிறேன்.

லொண்டரி தோட்டப் பகுதியில் உள்ள அரச புலனாய்வு பிரிவு அருகில் வைத்தே பழனிசாமி மோட்டார் சைக்கிளை தந்து எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் ஒருவரை போடப் போகிறோம் வருகிறாராயா..? என கேட்டார். என்றும் அவர் சாட்சியமளித்தார்.

இதேவேளை, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி அல்லது 10ம் திகதி காலப்பகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் லக்ஷ்மன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஒத்துழைப்பு வழங்கியவர்கள், திட்டமிட்டவர்கள் உட்பட 5 குற்றச்சாட்டுக்கள் 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/special/01/125697?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

தன் வினை தன்னை சுடும் 

'புலித்தலைவரை போட்டுத்தள்ளுவோமா எனக் கேட்டனர்'
 

article_1479918419-ravir.jpgபேரின்பராஜா திபான்

“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார். அதற்கு நான், சரி எனக் கூறினேன்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் முதலாவது சாட்சியாளரான பிருதிவிராஜ் மனம்பேரி, நேற்றுப் புதன்கிழமை (23), கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். 

அதுமட்டுமின்றி, இந்த வழக்கின் சந்தேகநபரான சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷை, கொழும்பு கங்காராமை, லொன்றிவத்தை பகுதியில் வைத்து, ரவிராஜ் எம்.பி கொல்லப்படுவதற்கு முந்தைய தினம் சந்தித்தபோது, அவருடன் இருந்த கடற்படை வீரர்கள் மூவரையும் மன்றுக்கு அடையாளம் காட்டினார்.  

த.தே.கூ எம்.பியான நடராஜா ரவிராஜ், படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக தலைமையில், சிங்கள ஜூரிகள் எழுவர் அடங்கிய ஜூரிகள் சபை முன்னிலையில், நேற்று முற்பகல் 11.17 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபராக இருந்து, அரச தரப்புச் சாட்சியாக மாறிய பிருதிவிராஜ் மனம்பேரி சாட்சியமளிக்க, சாட்சிக் கூண்டில் ஏற்றப்பட்டார். 

அவரிடம், சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ரோஹந்த அபேசூரிய கேள்வி கேட்டபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறியதோடு, பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கேள்விகளுக்குப் பதிளித்து, சாட்சியம் வழங்கினார். 

அவர் சாட்சியமளித்த போது தெரிவித்த விடயங்களாவன,  

“கிழக்கு மாகாணத்தில், பொலிஸ் அதிகாரியாக நான் பணியாற்றியபோது, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பிலிருந்து பிரிந்த கருணா குழுவினர் எங்களுடன் சேர்ந்து செயற்பட்டனர். இதன்போதே சாமி என்றழைக்கப்படும் பழனிச்சாமி சுரேஷுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர்களுடன் இணைந்து, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முகாமொன்றைத் தாக்க முயன்றபோது, விசேட அதிரடிப்படையினர் எங்களைத் தடுத்தனர். அதனையடுத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவுக்கு நான் மாற்றப்பட்டேன். 

நான், கொழும்பில் பணியாற்றிக்கொண்டிருந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில், கருணா குழுவைச் சேர்ந்த சாமி என்பவர், கொட்டாஞ்சேனைப் பகுதியிலேயே தங்கியிருந்தார். 2006.11.09 அன்று மாலை 4.30 மணியளவில், சாமியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர், கங்காராமை, லொன்றிவத்தை பகுதியிலுள்ள கட்டடத்தில் அவரைச் சந்தித்தேன்.  

அங்கேயே, கடற்படை அதிகாரிகளான பிரசாத் ஹெட்டியாராச்சி, செனவிரத்ன, வஜிர என்ற கடற்படை அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்னரும், அப்பகுதியில் வைத்து அவர்களைச் சந்தித்துள்ளேன்.  

“எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?” என, சாமி கேட்டார். நானும் சரி என்றேன். அன்றையதினம், தனது மோட்டார் சைக்கிளையும் தலைக்கவசங்கள் இரண்டையும் என்னிடம் தந்த சாமி, நாளை (2006.11.10) காலை 6 மணிக்கு பொரளை கனத்தை மயானத்துக்கு அருகில் வருமாறு என்னிடம் கூறினார். நானும், அந்த இடத்துக்குச் சென்றேன்” எனச் சாட்சியமளித்தார். 

அத்துடன், சாட்சியமளிப்பு நிறுத்தப்பட்டது. முதலாவது சந்தேகநபரின் சாட்சியமளிப்பு, இன்றும் தொடரவுள்ள நிலையில், வழக்கு விசாரணையை, இன்று காலை 10.30க்கு, நீதிபதி ஒத்திவைத்தார். 

- See more at: http://www.tamilmirror.lk/186787/-ப-ல-த-தல-வர-ப-ட-ட-த-தள-ள-வ-ம-எனக-க-ட-டனர-#sthash.HTX9aniL.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோருக்கும் தெரிந்த விடயம் உத்தியோகபூர்வமாக வெளிவரப்போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.