Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா!

Featured Replies

எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா!

w_18032.jpg

நேற்று (05.12.2016) இரவு 11.30 மணி அலவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார். இன்று முழுவதும் ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பார்வைக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. 4.30 மணியளவில் ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரை நோக்கி ஜெயலலிதா கொண்டு வரப்பட்டார்.

மாலை 6.00 மணிக்கு, அவரது உடல் மெரினா கடற்கரையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

http://www.vikatan.com/news/tamilnadu/74324-jayalalithaa-buried-at-mgr-memorial-in-marina-beach.art

  • கருத்துக்கள உறவுகள்

மெரினாவில் துயிலும் மூவருக்கும் பிள்ளையில்லை ஆமா கருணாநிதி செத்தால் எங்கு கொண்டு போவாங்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, பெருமாள் said:

மெரினாவில் துயிலும் மூவருக்கும் பிள்ளையில்லை ஆமா கருணாநிதி செத்தால் எங்கு கொண்டு போவாங்கள் ?

ஜெயலலிதாவுக்கு பிள்ளை இருக்கெண்டு முந்தி ஒரு கதை அடிபட்டதெல்லோ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மெரினாவில் துயிலும் மூவருக்கும் பிள்ளையில்லை ஆமா கருணாநிதி செத்தால் எங்கு கொண்டு போவாங்கள் ?

செம்மொழிப் பூங்கா - அரசுப் பதவியில் இருந்தால்.. (அது ஒன்றுதான் சென்னையில் இன்னும் மாசுபடவில்லை)

'நைனா' (அண்ணா)  அறிவாலயம் - அரசுப் பதவியில் இல்லாவிட்டால்..!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

ஜெயலலிதாவுக்கு பிள்ளை இருக்கெண்டு முந்தி ஒரு கதை அடிபட்டதெல்லோ? :rolleyes:

அந்த அறிவிக்கபடாத பிள்ளை வரும் என்று எதிர்பார்த்தவங்கள் கடைசி நேரம் மட்டும் ஆள் வரவில்லை mgrக்கும் இருக்கு இருக்கு என்றாங்கள் ஜெயலலிதாவின்கோடிக்கணக்கான சொத்துக்கள் சசியின் உறவினர்களுக்கே போயஸ்கார்டன் வீடு கூட எழுதிவைக்கப்பட்டள்ளது .

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்

பச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்

 

 

தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முதல்வர் ஜெயலலிதா மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். 

போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதா வெளியேறுகிறார் என்றாலே அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டு இருப்பார்கள்.ayalalithaa_s-body-has-been-laid-to-rest

 தெய்வத்தைக் கண்ட பக்தர்களைப் போல் காலில் விழுந்து மலர் தூவி வணங்குவார்கள். 

ஒரு நொடி தரிசித்தால் போதும் ஓராண்டுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என தமிழக மக்கள் கூறுவதுண்டு.

 இன்றைய தினம் ஜெயலலிதாவின் இறுதி யாத்திரையின் போதும் அலைகடலென திரண்டு கொண்டிருந்த மக்கள், கண்ணீர் மல்க மலர்கள் தூவி பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.Cy_r9uRXcAAvusN.jpg

முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா காரில் வரும் போது, தொண்டர்கள் தூவும் மலர்கள் நிரம்பி வழியும். இதுபோன்றே ஜெயலலிதாவின் இறுதிப் பயணத்திலும்  வழியெங்கும் மக்கள் மலர்கள் தூவி வழியனுப்பி வைத்தனர்.

'பெற்றால்தான் பிள்ளையா நாங்கள் இருக்கிறோம் அம்மா.." என்று கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். 

Cy_qxwvUQAAH9gk.jpg

பச்சை நிற புடவை, பச்சைக்கல் மோதிரம், நெற்றியில் சின்னதாக ஒரு மெருன் நிற பொட்டு, லேசாய் இழுத்து விடப்பட்ட நாமம் என தரிசமாய் தோற்றமளித்த ஜெயலலிதா, இறுதி துயில் கொள்ளும் போதும் அதே பச்சை நிற பட்டுப்புடவையுடன் புன்னகை ஓய்ந்த  முகத்துடன், மெரீனா கடற்கரையில் சந்தன பேழைக்குள் பட்டுத்தலையணையில் படுத்துறங்குகிறார்.Cy_pWTkUcAAZJl6.jpg

75 நாட்களுக்கு முன்புவரை போயஸ் தோட்டத்து பட்டு மெத்தையில் துயில் கொண்ட ஜெயலலிதா, செப்டம்பர் 22ஆம் திகதி இறுதியாக போயஸ் தோட்டத்தை விட்டுச் சென்றார்.Cy_sKsOUsAAfCwd.jpg

  நேற்று வரை அப்பலோவில் 2008ஆம் இலக்க அறையில் வைத்தியசாலை படுக்கையில் உறங்கியவர் இன்று முதல் மெரீனா கடற்கரையில் சந்தனபேழையில் தன் அரசியல் ஆசான் நினைவிடத்தின் அருகில் மீளாத் துயில் கொண்டு விட்டார். 

ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மறையாது என்பது நிச்சயம்.13239084_10153548143947694_2823876193791

 

60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. கண்ணீரில் மூழ்கியது தமிழகம்

 

 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.

ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.

அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  ராஜாஜி மண்டபத்துக்கு வந்திருந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.Cy_lZXAWIAAnEcz.jpg

ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார். 

பிறகு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையைச் சுற்றி வந்து பால் தெளித்தார். ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.

பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது._21494236-bb97-11e6-acf3-8522f55b22d1.jp

உடல் நலக் குறைவால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிய ளவில் காலமானார்.

முதல்வர் மறைவையடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.Jayalalitha-dead-live-old-memory.jpg

இதே போன்று, மாநில முதல்வர்கள் நாராயணசாமி, சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், சிவ்ராஜ் சிங் சௌஹான், பினராயி விஜயன், தேவேந்திர ஃபட்னவிஸ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஏராளமான கலைத் துறையினரும், பல முக்கியப் பிரபலங்களும் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இலட்சக்கணக்கான தமிழக மக்கள் அலைகடல் என திரண்டு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

சரியாக மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இராணுவ பீரங்கி வாகனத்தில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டது.

ராஜாஜி அரங்கில் இருந்து மாலை 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நோக்கி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

மாலை சரியாக 6 மணியளவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இராணுவ மற்றும் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மக்களின் முதல்வருக்கு, இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

http://www.virakesari.lk/article/14216

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.