Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைதிக்கு தடையாகும் இராணுவமும் பௌத்தமும்

Featured Replies

அமை­திக்கு தடை­யாகும் இரா­ணு­வமும் பௌத்­தமும்

IMG0489-d458c4dff09854e0e64a267acb3d95b78189f731.jpg

 

இலங்­கையில் கடந்த நான்கு தசாப்­தங்­களில் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்தும் முயற்­சிகள், பேச்­சு­வார்த்­தை­க­ளுக்குச் சவா­லான விட­யங்­க­ளாக இரண்டு முக்­கி­ய­மான விட­யங்கள் இருந்து வந்­துள்­ளன.

முத­லா­வது இரா­ணு­வமும், அதன் நலன்­களும்.

இரண்­டா­வது- பௌத்த மதமும், அதனைச் சார்ந்த அடிப்­ப­டை­வா­தமும்.

இந்த இரண்­டுமே, கடந்த பல தசாப்­தங்­க­ளா­கவே, அமை­தி­யான முறையில் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தற்­கான வாய்ப்­பு­களை தடுத்து நிறுத்­து­வதில் முக்­கிய பங்­காற்றி வந்­தன.வடக்கு, கிழக்கில் ஆயுதப் போராட்டம் தொடங்­கிய காலத்­திலும் சரி, பின்னர் விடு­தலைப் புலிகள் உச்ச பலத்­துடன் இருந்த காலங்­க­ளிலும் சரி, புலிகள் தோற்­க­டிக்­கப்­பட்ட காலங்­க­ளிலும் சரி, இரா­ணு­வத்தின் நலன்­களை விட்டுக் கொடுக்க அர­சாங்கம் ஒரு­போதும் தயா­ராக இருந்­த­தில்லை.

இரா­ணுவ ரீதி­யான விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு அர­சாங்கம் தயா­ராக இல்­லா­தி­ருந்த நிலை, பேச்­சுக்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தது.

இப்­போதும் கூட, இரா­ணு­வத்தின் நலன்­களை விட்­டுக்­கொ­டுக்கத் தாம் தயா­ராக இல்லை என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கிறார். அதே­நி­லைப்­பாட்டில் தான், முன்­னைய ஜனா­தி­ப­தி­களும் இருந்­தார்கள்.

சில பகு­தி­களில் இருந்து இரா­ணு­வத்­தி­னரை விலக்­கு­வ­தற்கோ, அல்­லது முடக்கி வைத்­தி­ருப்­ப­தற்கோ அர­சாங்கம் தயா­ராக இருக்­க­வில்லை. இது பேச்சு மேசை­களில் இடை­வெ­ளி­களை ஏற்­ப­டுத்­தி­யது.

1994-,95 இல் சந்­தி­ரிகா அரசு புலி­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களில் பூந­கரிப் படைத்­த­ளமே பிர­தான பிரச்­சி­னை­யாக மாறி­யது, அதனை அகற்­று­வ­தற்கு மாத்­தி­ர­மன்றி சில நூறு மீற்றர் பின் தள்­ளு­வ­தற்குக் கூட சந்­தி­ரிகா தயா­ராக இருக்­க­வில்லை. அதனால் மூன்­றாம்­கட்ட ஈழப்போர் வெடித்­தது.

மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்த இரண்டு ஆண்­டு­களில் அதே பூந­கரிப் படைத்­த­ளத்தை சந்­தி­ரிகா அர­சாங்கம் கைவிட்டுப் பின்­வாங்க முடிவு செய்­தது. அப்­போது, இரா­ணு­வத்தின் பாது­காப்பு நலன் என்ற விட­யத்­துக்கு வேறு வியாக்­கி­யானம் கூறப்­பட்­டது.

இரா­ணுவ நலன்­களை முன்­னி­றுத்தி அர­சாங்கம் எடுத்த பல முடி­வுகள், அமை­தியை கொண்டு வரும் முயற்­சி­க­ளுக்குப் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யது.

கடை­சி­யாக, 2002ஆம் ஆண்டு ரணில் அர­சுக்கும் புலி­க­ளுக்கும் இடை­யி­லான போர் நிறுத்தம் கூட, பல்­வேறு இரா­ணுவ நலன்­களின் மீது அர­சாங்கம் இறுக்­க­மான போக்­கினைக் கடைப்­பி­டித்­ததால் தான், முறியும் கட்­டத்தை எட்­டி­யது.

இரா­ணுவம் தனது நலன்­களை விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்­லாத நிலை ஏற்­பட்­டதும், அமை­தியைக் குழப்பும் வகையில் ர­க­சிய நிழல் போர் ஒன்றை முன்­னெ­டுக்கத் தயா­ரா­கி­யதும், நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

விடு­தலைப் புலி­களும் கூட, தமது இரா­ணுவ நலன்­களில் விட்டுக் கொடுப்­புக்குத் தயா­ராக இருக்­க­வில்லை என்­ப­தையும் இங்கு சுட்­டிக்­காட்­டுதல் பொருத்தம்.  எனவே, இரா­ணுவ நலன்­களின் மீது காட்­டப்­பட்ட அதீ­த­மான ஈடு­பாடு தான், அமைதி வழியில் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யது. 

அது­போ­லவே, பேச்­சுக்கள், அமைதி முயற்­சி­க­ளுக்கு தடை­யாக இருந்த இன்­னொரு விடயம், பௌத்த மதமும், அதன் நலன்­களின் ஆதிக்­கமும்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நியா­ய­மான தீர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கு இனம் என்­பதை விட, மதமே கூடுதல் தடை­யாக இருந்து வந்­துள்­ளது.

அதா­வது பௌத்த மேலா­திக்­க­வாதம் தான், இதில் பிர­தான பாத்­தி­ரத்தை வகித்து வந்­துள்­ளது. அத­னுடன் சிங்­கள இன­வா­தமும் இணைந்து கொள்ளும் போதும் இன்னும் வலிமை பெற்­ற­தாக மாறி­யது.

தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் ஒவ்­வொன்­றுமே, பௌத்த மேலா­திக்­கத்தை- முன்­னி­றுத்தித் தான் மேற்­கொள்­ளப்­பட்­டன.

வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில், தங்­கத்­துரை, குட்­டி­மணி, ஜெகன் உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கைதி­களை படு­கொலை செய்­த­வர்கள் அவர்­களின் உடல்­களை அங்­கி­ருந்த புத்தர் சிலைக்கு முன்­பாக குவித்து, இரத்­தத்­தினால் குளிப்­பாட்­டி­ய­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கின.

அமை­தியை போதித்த புத்தர் உயிர்ப்­பலி கேட்­டாரா, இரத்தக் குளி­யலைக் கேட்­டாரா? இல்லை. இந்தச் சந்­தர்ப்­பத்தில் சிங்­கள பௌத்த மேலா­திக்­க­வாதம், புத்­தரின் மீது தனது தவ­று­களைப் போட்டுத் தப்பிக் கொள்ள முனைந்­தது.

தமி­ழரைப் பழி­வாங்­கு­கிறோம் என்று, புத்­தரைப் பின்­பற்­றி­ய­வர்கள், புத்­தரைத் தான் கேவ­லப்­ப­டுத்­தி­னார்கள்.

2002ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­க­ளுடன், ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் போர் நிறுத்தம் செய்து பேச்­சுக்­களை நடத்திக் கொண்­டி­ருந்த போது, அதனை முறித்து போருக்குள் தள்ளிச் சென்­றது, அப்­போது பௌத்த பிக்­குகள் கோலோச்­சிய ஜாதிக ஹெல உறு­யம தான்.

மாவி­லாறில் அர­சாங்கம் போர்ப்­பி­ர­க­டனம் செய்­த­மைக்கு தாமே காரணம் என்று ஜாதிக ஹெல உறு­மய இப்­போதும் உரிமை கோரு­கி­றது. அத்­து­ர­லியே ரத்­தன தேரர் இதனைப் பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்தார்.

நோர்வே தூத­ரகம் முன்­பாக ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி அமைதி முயற்­சி­களை குழப்­பி­யதில் பௌத்த பிக்­கு­க­ளுக்கு இருந்த வகி­பா­கத்தை யாராலும் குறைத்து மதிப்­பிட முடி­யாது.

போர் முடிந்த பின்னர் கூட, மஹிந்த ராஜபக் ஷவை ஆட்­சியில் இருந்து அகற்­று­வ­தற்கும் பௌத்த பிக்­கு­களே கார­ண­மா­யினர். பொது பல­சேனா போன்ற பௌத்த அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களின் திடீர் எழுச்சி தான், போருக்குப் பின்னர் மஹிந்­தவின் இருப்பை ஆட்டம் காணச் செய்­தது,

இப்­போ­தைய அர­சாங்­கத்தின், அமை­தியை ஏற்­ப­டுத்தும், நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தும், முயற்­சி­களும் கூட, பௌத்த மதம் மற்றும் இரா­ணுவ நலன்கள் என்ற இரண்டு கார­ணி­களால் தான் நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டி­ருக்­கி­றது.

வடக்கில் இரா­ணுவம் தனது நலன்­களை விட்டுக் கொடுப்­ப­தற்குத் தயா­ராக இல்லை. பொது­மக்­களின் காணி­களைக் கூட தனது கட்­டுப்­பாட்டில் இருந்து விடு­விப்­ப­தற்கு தயங்­கு­கி­றது.

படை­களைக் குறைப்­பது, உள்­ளிட்ட பல்­வேறு இரா­ணுவ நலன்­களை விட்­டுக்­கொ­டுக்கத் தயங்­கு­வது, அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டி­யாக இருக்­கி­றது. தமிழ் மக்­களின் நம்­பிக்­கையைப் பெறு­வ­தற்கும் தடை­யாக இருக்­கி­றது.

இரா­ணு­வத்தின் நலன்­க­ளையும் உறுதி செய்து, தமிழ் மக்­களின் நம்­பிக்­கை­யையும் பாது­காப்­பது என்­பது சிக்­க­லான விட­ய­மா­கவே அர­சுக்கு இருக்­கி­றது.

கடந்­த­வாரம் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, போரில் வெற்­றி­யீட்ட உத­விய படை­யினர், நல்­லி­ணக்க முயற்­சி­க­ளிலும் வெற்­றி­யீட்ட உதவ வேண்டும் என்று கோரி­யி­ருந்தார்.

இது, நல்­லி­ணக்க முயற்­சி­களில் இரா­ணு­வத்தின் சவால்­களை அர­சாங்கம் எதிர்­கொள்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை வழக்கம் போலவே, இப்­போதும் பௌத்த மேலா­திக்­க­வாதம், அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டி­யாக மாறி வரு­கி­றது. எந்த பௌத்த மேலா­திக்­க­வாதம் மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்தை அரி­ய­ணையில் இருந்து வீழ்த்­தி­யதோ அது மீண்டும் எழுச்சி கொள்ளத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

வடக்கில் சம்­பந்­தமே இல்­லாத இடங்­களில் முளைக்­கின்ற புத்தர் சிலை­களும், விகா­ரை­களும், அவை தொடர்­பாக அர­சாங்­கத்­தினால் கடைப்­பி­டிக்­கப்­படும் மெத்­தனப் போக்கும், தமிழ் மக்­க­ளி­டத்தில் அதி­ருப்­தி­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.

கிழக்­கிலும் அது­போ­லவே பௌத்த மேலா­திக்­க­வாதம், மேலோங்­கு­கி­றது என்­பதை, மட்­டக்­க­ளப்பில் மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டிய சும­ண­ரத்ன தேரர் நடந்து கொள்ளும் முறைகள் எடுத்துக் காட்­டு­கின்­றன.

அரச அதி­கா­ரியை இனத்­து­வே­ச­மாக பேசு­கிறார். தனியார் காணிக்குள் புகுந்து விகாரை கட்டப் போவ­தாக அடா­வ­டித்­தனம் செய்­கிறார். பொலி­சாரின் தடுப்­பு­களின் மீது ஏறி நின்று ஆவே­ச­மாக இன­வாதம் பேசு­கிறார்.

இவை­யெல்லாம் ஒரு பௌத்த பிக்­குவின் அடிப்­படைக் குணாம்­சங்­களைப் பிர­தி­ப­லிக்­க­வில்லை. அது­போ­லவே பொது பல­சே­னாவின் பொதுச்­செ­யலர் ஞான­சார தேர­ரா­கட்டும், சிங்­கள ராவ­யவின் சத்­தா­திஸ்ஸ தேர­ரா­கட்டும், பௌத்த பிக்­கு­க­ளுக்­கு­ரிய பண்­பு­களை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

முஸ்­லிம்­க­ளுக்கும், தமி­ழர்­க­ளுக்கும் எதி­ராக இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் கக்­கு­கின்ற கரு­வி­க­ளாகத் தான் இவர்கள் தெரி­கி­றார்கள்.பௌத்த மேலா­திக்கம் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்­திலும் வலுவடையத் தொடங்கியுள்ளதானது, அரசாங்கத்தின் பிடி தளரத் தொடங்கியிருப்பதைத் தான் காட்டுகிறது. 

பௌத்த மேலாதிக்கத்தை செலுத்தி இனவாதம் அல்லது மதவாதக் கருத்துக்களைப் பரப்பிச் செயற்படும் பௌத்த பிக்குகள் சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கின்ற நிலையே, அரசின் நெகிழ்வுத்தன்மையைக் காட்டுகிறது.

இந்த நெகிழ்வு நிலைதான் நிலையான அமைதியை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு பிரதான தடையாகவும் மாறி வருகிறது.

தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு காண வேண்டுமாக இருந்தால், இராணுவம் மற்றும் பௌத்தம் ஆகிய இரண்டினதும் தலையீடுகளில் இருந்து அரசாங்கம் வெளியே வர வேண்டும்.

இவையிரண்டினதும் செல்வாக்கிற்கு வெளியே நிற்கக் கூடிய ஒரு அரசாங்கத்தினால் தான், நிலையான அமைதியை ஏற்படுத்த முடியும்.

அத்தகைய ஒரு அரசாங்கம் இலங்கையில் இப்போதைக்கு உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

 

  http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-12-11#page-2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை அரசாங்க உத்தியோகத்திலை வேலை செய்யிற ஒரு தமிழ் தம்பியை போனகிழமை சந்திச்சன்....கதையோடை கதையாய் நாட்டு நிலவரங்களை கதைச்சுக்கொண்டு போகேக்கை சொன்னார்....நோமலாய் பாக்கப்போனால் நாட்டிலை ஒரு பிரச்சனையுமே இல்லையாம்.....தமிழருக்கு என்ன குறை எண்டு தனக்கு தெரியேல்லையாம்.சண்டை இல்லை...சனம் சந்தோசமாய் இருக்குது ...எல்லா சாமான்களும் இருக்குது....இனி என்ன வேணுமெண்டு கேட்டார்......மிச்சத்தை எழுதினால் தேவையில்லாத சோலி வரும் எண்ட படியாலை.....விடுவம்.
இத்தனைக்கும் அவர் பிளட் இயக்கத்துக்கு காசு சேர்த்தவர் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.

இக்காலகட்டத்தில் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இஸ்லாமிய மதவெறியும், பௌத்த மதவெறியும் இருந்து வருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை அரசாங்க உத்தியோகத்திலை வேலை செய்யிற ஒரு தமிழ் தம்பியை போனகிழமை சந்திச்சன்....கதையோடை கதையாய் நாட்டு நிலவரங்களை கதைச்சுக்கொண்டு போகேக்கை சொன்னார்....நோமலாய் பாக்கப்போனால் நாட்டிலை ஒரு பிரச்சனையுமே இல்லையாம்.....தமிழருக்கு என்ன குறை எண்டு தனக்கு தெரியேல்லையாம்.சண்டை இல்லை...சனம் சந்தோசமாய் இருக்குது ...எல்லா சாமான்களும் இருக்குது....இனி என்ன வேணுமெண்டு கேட்டார்......மிச்சத்தை எழுதினால் தேவையில்லாத சோலி வரும் எண்ட படியாலை.....விடுவம்.
 

இத்தனைக்கும் அவர் பிளட் இயக்கத்துக்கு காசு சேர்த்தவர் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.

இதை... முதல்லேயே  எழுதியிருக்கலாமே..... 
மினக்கெட்டு வாசிச்சது  எல்லாம்... வீ ணாய்ப்  போச்சு. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.