Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் போரில் 200 பில்லியன் டொலர் இழப்பு! - என்கிறார் சிவ்சங்கர் மேனன்

Featured Replies

பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு
 
 
 
பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டி ருந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.  
 
பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய இந்திய அரசாங்கத்தின் கொள்கைக்கு, தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியாகவும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.  
 
இலங்கையிலுள்ள உண்மையான அரசியல் தலைவர்களை ஏற்கனவே இல்லாது ஒழி த்ததைப் போன்று, இந்தியாவில் உள்ள உண்மையான தமிழர்களின் தலைவர்களையும் இல்லாது ஒழிப்பதன் மூலமாக மாத்திரமே பிரபாகரனால் தழீழத்திற்கு இட்டுச்செல்ல முடி யும் என தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அறிந்திருந்ததாகவும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

http://www.onlineuthayan.com/news/21290

  • தொடங்கியவர்

பிரபாகரனை காப்பாற்றும் திட்டத்தை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர் – சிவ்சங்கர் மேனன்

sivasangermenan.jpg
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை காப்பாற்றும் திட்டத்தை தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்த்தனர் என இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிவ் சங்கர் மேனனின் Choices: Inside the Making of India’s  Foreign Policy என்ற நூலில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்காவும் நோர்வேயும் முயற்சித்த போது அதனை இந்தியா எதிர்த்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கத்தி;ன் எதிர்ப்பினை தமிழக அரசியல் தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் வரவேற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வாழும் தமிழ்த் தலைவர்களை பௌதீக ரீதியில் இல்லாமல் செய்வதன் மூலமே பிரபாகரன் தமிழீழத்தை உருவாக்குவார் என்பதனை தமிழக அரசியல் தலைமைகள் புரிந்து வைத்திருந்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழ் அரசியல் தலைமைகளை புலிகள் கொலை செய்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழக மாநில அரசியல் தலைமைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளியில் தென்பட்டாலும், இரண்டு தரப்புக்களும் ஒரே விதமான கொள்கைகளை பின்பற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே விதமான கொள்கைகளையே பின்பற்றின என அவர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டுடன் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் காணப்பட்ட தருணத்தில் தமிழீழ விடுதலைப் புலித் தலைமைகளை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை எனவும் மேற்குலக நாடுகள் அதற்கு முயற்சித்தன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரன் நடைமுறைச் சாத்தியமில்லா கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றிய காரணத்தில் புலிகள் இயக்கம் அழிந்ததுடன் அவரும் உயிரிழக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இன்னும் தாமதமாகியிருந்தால் உயிர்ச் சேதங்கள் மேலும் உயர்வடைந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், இவ்வாறான யுத்தங்களின் போது உயிர்ச் சேதங்களை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://globaltamilnews.net/archives/10123

விடுதலைப் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் பூரண ஆதரவு - சிவசங்கர் மேனன்!

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலரும், பாதுகாப்புச் செயலருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும், நோர்வேயும் கடும் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், இந்திய அரசாங்கமானது கடும் எதிர்ப்பை வெளியிட்டதுடன், இந்திய அரசாங்கத்துக்கு அப்போதை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியாகவும் மிகவும் ஆக்கபூர்வமான வகையில் ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் சிறீலங்காவிலுள்ள உண்மையான அரசியல் தலைவர்களை இல்லாது ஒழித்ததைப்போன்று, இந்தியாவில் உள்ள உண்மையான தமிழர்களின் தலைவர்களையும் இல்லாது ஒழிப்பதன் மூலமாக மாத்திரமே தமிழீழத்தைப் பெறமுடியும் என தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்கள் தமது அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் அறிந்திருந்ததாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=51282

  • கருத்துக்கள உறவுகள்

உந்த கடைசிப்புகைப்படத்தில் உள்ள புத்தக அலுமாரியில் தங்கப்புத்தர் சிரிச்சு கொண்டிருக்கிறார் ...உது உங்களிடம் எப்பிடி வந்தது 
என்றும் எங்களுக்கு தெரியும் ...யார் உங்களுக்கு தந்திருப்பார் என்றும் தெரியும் 

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் டொலர்கள்

sivasangermenan.jpg
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் நிறைவடைந்த உள்நாட்டு யுத்தத்திற்காக இந்தளவு தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்


தெற்காசியாவின் மிகவும் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இலங்கையின் பொருளாதாரம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும்  100,000 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


இதில் 30000 முதல் 50000 வரையிலானவர்கள் பொதுமக்கள் எனவும், 1155 பேர் இந்திய அமைதி காக்கும் படையினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள  அவர் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் யுத்த வெற்றியின் பின்னர் அதனை நல்லிணக்கத்தை நோக்கியோ சமாதானத்தை  நோக்கியோ நகர்த்த முயற்சிக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய முனைப்புக் காட்டும் தமிழ்த் தலைவர்களும் இருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்

http://globaltamilnews.net/archives/10135

யார் அவர்கள் ??????????

  • கருத்துக்கள உறவுகள்

மாண்டவர்கள் எழுந்து வந்து இம்மாதிரி குள்ளநரி அயோக்கியர்களை பின்னி பெடலெடுக்க மாட்டார்களென்ற தைரியத்தில் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள்..

  • தொடங்கியவர்

புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை தெரியுமா ? மரணமடைந்த பொதுமக்கள், புலிகள், இந்திய அமைதிப் படையினரின் எண்ணிக்கை தெரியுமா? : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட மேனன்

 

 

 

War-in-sl.jpgவிடுதலைப்புலிகளுடன் நடைப்பெற்ற யுத்தத்திற்காக இலங்கை அரசு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டொலரை செலவு செய்ததாக முன்னாள் இலங்கைக்கான இந்திய தூதுவராக கடமையாற்றியவரும்  இந்திய மத்திய அரசின்  பாதுகாப்பு ஆலோசகருமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

 அவர் எழுதியுள்ள ஓர் புத்தகத்திலேயே இந்த விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் போராளிகள் உள்ளிட்ட இரண்டு தரப்பிலும் ஒரு இலட்சம் பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

யுத்தத்தால் சுமார் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் வாரையிலான  பொது மக்கள் இறந்திருக்கலாமெனவும் இதில் தமிழ் சிங்கள மக்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் சுமார் 27693 விடுதலைப் புலிகள்   மரணமடைந்துள்ள அதேநேரம் அரசு படைகள் சுமார் 23790 பேர் இறந்திருப்பதாகவும் என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அமைதிகாக்கும் படையை சார்ந்த 1155 பேர் உயிரிழந்ததாவும் 3 இலட்சம் பேர் இடம் பெயர்ந்ததாகவும் வடக்கு – கிழக்கில் சுமார் 1.6 மில்லியன் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தனது நூலில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போருக்கு இருதரப்பினருமே காரணம் எனவும் இவர் மேலும் குறிப்பிடுட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/14360

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் முன்னாள்  தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். Choices: Inside the Making of India’s  Foreign Policy என்ற தமது நூலில் மேனன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தத்தினால் சுமார் 200 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவருமான சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற தமது நூலில் மேனன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

   

கடந்த 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரையான காலத்தில் 80,000 தொடக்கம் 100,000 வரையிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மேனன், அதில் பொதுமக்களின் தொகை 30,000 தொடக்கம் 50,000 வரையில் இருக்கலாமென குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகளில் 27,693 பேரும் இராணுவத்தில் 23,790 பேரும் இந்திய சமாதான படையைச் சேர்ந்த 1,155 பேரும் இறந்துள்ளதாக மேனன் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தமானது 300,000 உள்நாட்டு அகதிகளை உருவாக்கியுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தில் விடுதலைப் புலிகள் நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கைகளை பின்பற்றிய காரணத்தினாலேயே தோல்வியை சந்தித்தனர். இறுதிக்கட்ட யுத்தம் நீடித்திருந்தால் உயிரிழப்புகள் மேலும் அதிகமாகியிருக்குமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளர்.

அத்தோடு, யுத்தத்திற்கு முன்பு தென் கிழக்காசியாவின் அதிவேக வளர்ச்சியைக் கண்ட பொருளாதார நிலையமாக இலங்கை விளங்கியதாக தெரிவித்த மேனன், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் சுமார் 200 பில்லியன் டொலரை விரயமாக்கியுள்ளதென குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த செலவுகளுக்குள் சந்தர்ப்ப செலவு பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் இந்திய வெளிவிவகார செயலாளராக சிவ்சங்கர் மேனன் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=171654&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.