Jump to content

அச்சுறுத்தும் கடற்புலிகள்


Recommended Posts

அச்சுறுத்தும் கடற்புலிகள்!

-விதுரன்

முழு அளவிலான போரில் புலிகள் குதிக்காத நிலையில் இன்று முப்படைகளையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் புலிகளுக்குள்ளதா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. வடக்கில் இராணுவத்தினர் புலிகளிடம் பல தோல்விகளைச் சந்தித்துள்ள அதேநேரம், கிழக்கில் புலிகள் வசமுள்ள பெரும்பாலான பகுதிகளை படையினர் கைப்பற்றி வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகமாயிருந்த போதிலும் கிழக்கில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள படைவலுச் சமநிலையிலான மாற்றங்கள், கிழக்கில் புலிகள் மரபு வழிச் சமரிலிருந்து மீண்டும் கெரில்லாப் பாணியிலான போர் முறைக்குள் தள்ளப்பட்டுள்ளார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கிழக்கில் தற்போது தொடரும் படை நடவடிக்கைகள் தங்களுக்கு மிகவும் சாதகமாயிருப்பதாகக் கருதும் அரசு, இந்தப் படை நடவடிக்கையை மேலும் தொடரவே முயல்கிறது. எனினும், கிழக்கில் இதுவரை புலிகள் முழு அளவிலான சமரில் ஈடுபடாததுடன் தங்கள் ஆட்பலத்தையும் ஆயுத வளத்தையம் பாதுகாத்தவாறு தற்காப்புச் சமருடன் பின் நகர்ந்து வருகின்றனர்.

இதன் மூலம் புலிகள் வசமுள்ள நிலப்பிரதேசங்களை மீட்டு அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை இல்லாது செய்து விடலாமென அரசு கருதுகிறது. இதனாலேயே அங்கு மேலும் மேலும் படை நடவடிக்கையில் ஆர்வம் காட்டி வரும் அரசு மட்டக்களப்பில் தற்போது புலிகள் வசமுள்ள பிரதேசங்கள் அனைத்தையும் பிடித்து விட வேண்டுமென்ற முனைப்பிலுள்ளது.

எனினும், கிழக்கில் அகலக் கால் வைத்துவரும் படையினருக்கு பெரும் ஆளணிப் பற்றாக்கறை ஏற்பட்டு வருகிறது. புதிதாகப் பிடிக்கும் இடங்களை தக்க வைக்க மேலும் ஆயிரக் கணக்கான படையினர் தேவைப்படுவதால் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு மீண்டும் மீண்டும் பொது மன்னிப்புகளை வழங்கி அவர்களை மீண்டும் படையணிகளில் இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வரும் அதேநேரம், புதிதாக படையணிகளுக்கு ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன.

கிழக்கில் தரைப் படையினர் ஆளணிப் பற்றாக்குறையை எதிர்நோக்குகையில் அவர்களால் அங்கு மேலும் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதேநேரம், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் புலிகள் வசமிருந்த பகுதிகளை ஆக்கிரமித்த விஷேட அதிரடிப் படையினர், அங்கு புலிகளின் ஊடுருவல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பக்கிமிட்டிய மற்றும் தங்க வேலாயுதபுரம் பகுதிகளில் புலிகள் நடத்திய ஊடுருவல் தாக்குதல்களில் 25 க்கும் மேற்பட்ட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் 30 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். எனினும் இது தொடர்பான தகவல்களை படைத் தரப்பினர் மூடி மறைக்க முயன்றுள்ளனர்.

புலிகளுக்கெதிராக முழு அளவிலான யுத்தத்தை கிழக்கில் நடத்தி வரும் அரசு வடக்கிலும், தெற்கிலும் பாரிய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகிறது.

கிழக்கில் அகலக் கால் வைத்துள்ள படையினருக்கு வடக்கு என்றுமே மிகவும் நெருக்கடிக் குரியதாகவேயுள்ளது. கிழக்கில் கடற்புலிகளை முற்றாக இல்லாது செய்து விட்டதாக கருதும் படைத் தரப்புக்கு வடக்கே கடற்புலிகளின் பலம் சிம்ம சொப்பனமாயுள்ளது.

அதேநேரம் அண்மைக் காலங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் கடற்படையினரின் பாதுகாப்பை விட இலங்கைத் துறைமுகங்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்விகளை எழுப்புகிறது. இதற்கேற்ப அண்மைக் காலங்களில் இடம்பெற்ற கடல் நடவடிக்கைகளும் பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை அதன் துறைமுகங்களின் பாதுகாப்பு இன்று உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை. வடக்கு- கிழக்கில் காங்கேசன்துறை, பருத்தித்துறை ( இறங்குதுறை) திருகோணமலை துறைமுகங்களுள்ளன. இதற்கு வெளியே கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுள்ளன.

இவற்றில் எந்த துறைமுகத்தையும் தாக்கக் கூடிய ஆற்றல் கடற்புலிகளுக்கு இருப்பதாகவே அரசும் படைத் தரப்பும் கருதுகின்றன. கடந்த மாதம் 27 ஆம் திகதி கொழும்புத் துறைமுகம் மீதுபுலிகள் நடத்த விருந்த தாக்குதலைத் தாங்கள் முறியடித்து விட்டதாக கடற்படையினர் கூறுகின்றனர்.

இதன் போது கடற்புலிகளின் மூன்று படகுகள் அழிக்கப்பட்டதாகவும் அவை தற்கொலைத் தாக்குதலை நடத்தும் கரும் புலிப் படகுகளாயிருக்கலாமெனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தப் படகுகள் கொழும்புத் துறைமுகத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நுழைய முற்பட்ட போதே அதனைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர் ஒன்றன் பின் ஒன்றாக ஆறு கடல் மைல் தூரத்திலும் 11 கடல் மைல் தூரத்திலும் 14 கடல் மைல் தூரத்திலும் அந்தப் படகுகளை அழித்ததாகத் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்களானது அதிகாலை 5.30 மணிக்குப் பின்பே நடைபெற்றுள்ளதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் இந்தத் தாக்குதல்களில் கடற்படையினருக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லையென்பதுடன் கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை முறியடித்ததன் மூலம் கொழும்புத் துறைமுகம் மிகவும் பாதுகாப்பானதொரு துறைமுகமென்பதை கடற்படையினர் நிரூபித்துள்ளதாகவும் துறைமுக அமைச்சர் மங்கள சமரவீர கொழும்புத் துறைமுகத்திலிருந்து அறிவித்தார்.

இதேநேரம், இந்தத் தாக்குதலை நடத்த வந்த புலிகளில் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கடற்படையினர் தெரிவித்த போதும் அவர்கள் யாரென்ற விபரங்களை இதுவரை வெளியிடவில்லை.

எனினும், இந்தத் தாக்குதல், கடற்படையினர் கூறுவது போல் கொழும்புத் துறைமுகத்திற்கு வெளியே நடைபெறவில்லையென்றும் துறைமுகத்தை தாக்க எவரும் வரவில்லையென்றும் அப்பாவி மீனவர்களே கடற்படையினரின் தாக்குதலுக்கிலக்காகினர் என்பதும் பின்னர் சிங்கள கடற்றொழிலார்கள் மூலம் தெரிய வந்தது.

இது குறித்து நீர்கொழும்பு கடற்றொழிலாளர் சங்கம் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் வரை அவசர கடிதங்களை அனுப்பியுள்ளதுடன் அன்றைய தினம் தாக்குதலுக்கிலக்கானது அப்பாவி மீனவர்களென்றும் அந்தத் தாக்குதல் கூட கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெறவில்லையென்றும், துறைமுகத்திலிருந்து 20 கடல்மைல் தூரத்தில் ஆழ்கடலில் இடம்பெற்றதாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தாங்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு திடீரென தாக்குதல் நடத்தியவாறு வந்த கடற்படையினர் தங்களைக் கடலில் குதிக்குமாறு கூறிவிட்டு தாங்கள் கடலில் குதித்தும் படகுகளை தாக்கி அழித்ததாகவும் பின்னர் ஒன்பது பேரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

படையினரும் ஊடகங்களும், கொழும்புத் துறைமுகத்தை தாக்க வந்த கற்புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதாக பொய் கூறுவதாகவும் உண்மையிலேயே தாக்குதலுக்கிலக்கானவை சிங்கள மீனவர்களின் படகுகளே என்றும் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

உண்மை இதுவாயின் ஏன் இந்தப் புனைகதையை அரசும் படைத் தரப்பும் பரவ விட்டன. காலியில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெறும் சமயத்ததில் இவ்வாறானதொரு பொய்ப் பிரசாரத்தின் மூலம் கொழும்புத் துறைமுகத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் காண்பித்து உதவி வழங்கும் நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற்றுவிடலாமெனக் கருதினார்களா?

எனினும், தென்பகுதியில் உண்மை நிலையை அரசும் படைத் தரப்பும் ஊடகங்களும் மூடி மறைத்துவிட்டன. அதேநேரம், கடற்புலிகளின் தாக்குதலிலிருந்து கடற்படையினர் மிகத் திறமையாக துறைமுகத்தை பாதுகாத்து விட்டனரெனவும் படைத்தரப்புக்கு பெரும் புகழாரம் சூட்டப்பட்டது.

கொழும்புத் துறைமுகத்தை கடற்புலிகள் தாக்க வந்ததாக அரசும் படைத் தரப்பும் கூறியதன் மூலம், இலங்கையில் இன்று எந்தத் துறைமுகமும் கடற்படைத் தளமும் எவ்வேளையிலும் புலிகளின் தாக்குதலுக்கிலக்காகும் நிலைமை ஏற்பட்டுள்ளதை அரசும் படைத் தரப்பும் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளன.

புலிகளின் தரைப் படையை விட இன்று கடற்புலிகள் குறித்தே படைத் தரப்பு அச்சமடைந்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு துறைமுகமும் ஒவ்வொரு கடற்படைத்தளமும் தாக்குதலுக்கிலக்காகும் போது, கடற்புலிகள் எங்கிருந்து, எப்படி வந்தார்கள் என்ற கேள்வியை தென்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.

காலியில் கடற்படைத்தளம் மீதான தாக்குதல் தென்பகுதி மக்கள் மத்தியில் கடற்புலிகள் குறித்து பெரும் அச்சத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொழும்புத் துறைமுகமும் அதனோடிணைந்த இராணுவ முகாமுமே இலங்கைக்குள் வரும் போர்த்தளபாடங்களைப் பெற்று ஏனைய பகுதிகளுக்கு விநியோகிக்கும் மையங்களாகும். இதனால் ஏனைய துறைமுகங்கள், கடற்படைத் தளங்களை விட கொழும்புத் துறைமுகத்தின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதைவிட கொழும்புத் துறைமுகமே இன்று இலங்கையின் மிகப்பெரும் பொருளாதார மையமுமாகும். இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மிகப் பெரும்பாலும் கடல் வழியூடாகவே நடைபெறுவதால் கொழும்புத் துறைமுகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாயுள்ளது.

இந்தத் துறைமுகத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியானால் இலங்கையின் பாதுகாப்பே கேள்விக்குறியாகும். 2000 ஆம் ஆண்டில் கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மற்றும் சர்வதேச விமான நிலையம் தாக்குதலுக்கிலக்கான போது நாட்டின் பொருளாதார நிலைமை எப்படிக் கேள்விக்குறியானதோ அவ்வாறே கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள்ளாகுமானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த உள்நாட்டுப் போரில் விமானப் படையின் பங்களிப்பு கணிசமாயுள்ள போதும் தற்போது புலிகளின் வான்படையினது அல்லது விமான எதிர்ப்பு படையணியின் பலவீனம் இலங்கை விமானப் படையினருக்கு அண்மைக் காலமாக சாதகமாகவேயுள்ளது.

புலிகளின் மெளனத்தை பலவீனமாக எப்படி நினைக்கமுடியும். முழுப்போர் என்று வரும்போது

சிங்கள இயந்திரப்பறவைகள்

தமிழ்நிலத்தில் தற்கொலை செய்து கொள்ளும்.

Link to comment
Share on other sites

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

Link to comment
Share on other sites

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனவுகளில் மிதந்து வாழ்ந்தே பழக்கப்பட்டு விட்டோம். இப்படி சாகசம் எல்லாம் செய்யக் கூடியவர்களாக நாம் இருந்தால் 25 வருடங்கள் போராடிக் கொண்டு இருக்கத்தேவையில்லை. கனவுகளை நிறுத்தி விட்டு, தாயகத்துக்கு என்ன உதவி தேவையோ, அதைச் செய்வது தான் சரி.

ஏனென்றால் நாங்கள் என்னும் பூரணமாகவில்லை

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

பறவைக்காய்ச்சல் திரும்பி வருதாம். சிலவேளை அதனால் செத்து விழுவதை தற்கொலை எண்டு சொல்லுறாரோ என்னமோ?

Link to comment
Share on other sites

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

குசுக்காலபோவான் அண்ண்னாவுக்கு எப்பவும் ஒரு நக்கலும் மட்டம் தட்டுதலும் தான்.

Link to comment
Share on other sites

எங்களுக்கும் பலப்பரீட்சைக்கான கால வந்து கொண்டு இருக்கின்றது அதற்கான உதவிகளை செய்ய புலம் பெயர் மக்களும் ஆயுத்தங்களை செய்து விட்டு களமுணை நோக்கி காத்துருங்கள். வெறுங்கை முழமிடாது

கனவுகளில் மிதந்து வாழ்ந்தே பழக்கப்பட்டு விட்டோம். இப்படி சாகசம் எல்லாம் செய்யக் கூடியவர்களாக நாம் இருந்தால் 25 வருடங்கள் போராடிக் கொண்டு இருக்கத்தேவையில்லை. கனவுகளை நிறுத்தி விட்டு, தாயகத்துக்கு என்ன உதவி தேவையோ, அதைச் செய்வது தான் சரி.

ஏனென்றால் நாங்கள் என்னும் பூரணமாகவில்லை

பறவைக்காய்ச்சல் திரும்பி வருதாம். சிலவேளை அதனால் செத்து விழுவதை தற்கொலை எண்டு சொல்லுறாரோ என்னமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தற்கொலை செய்யுமா? அப்ப ஏதோ வசியம் செய்து விழுத்திறதோ? அதி விசேட மந்திரங்கள் கேரளாவில போய் படிச்சவையாமோ ? முழுசா போர் தொடங்கினால் மந்திரம் ஓதுவினம் ஊரில இருக்கிறவை இயந்திரப் பறவைகள் எல்லாம் தங்கடை பாட்டில தற்கொலை செய்யுமோ? நல்ல வசதியாப் போச்சே போராட்டம். உப்பிடியே மந்திரமோதி இயங்கு நிலையிலை எல்லா ஆயுதங்களையும் குடுத்துட்டுப் போனா எவ்வளவு நல்லா இருக்கு.

அப்பிடியே மந்திரம் ஓதி ஜநா வில கொடி ஏத்தினா அந்தமாதிரி.

untha "kurukaalapoovanuku" eppavume kurukkala pona puththi than

Link to comment
Share on other sites

எங்களுக்கு நம்பிக்கை இருக்கு ...நம்பியதால் தான் வியாற்நாம் விடிந்தது.... எங்கள் சுதந்திரத்தை வென்றெடுக்க எங்களுக்கு உரிமையிருக்கு கடமையிருக்கு.... தற்கொலை செய்து கொள்ளும் என்பது ஒரு மொழி நயத்துடன் சொல்லப்பட்டது.. அதை கூட புரிந்து கொள்ள துப்பில்லை.. ஏன் கடந்த காலங்களில் புக்காரா விழவில்லையா? அவ்ரோ விழவில்லையா? MI 24 விழவில்லையா? மாங்குளம் விழவில்லையா? ஆனையிறவு விழவில்லையா? டோரா தகர்க்கப்படவில்லையா? எங்களில் சிலருக்கு நினைப்பு எதையாவது விமர்சித்தால் ...தாங்கள் அறிவாளிகள் அல்லது வித்தியாசமான சிந்தனையாளர்கள் என்று.... இவர்களுக்கு சிலவேளைகளில் இப்படி கதைத்தால் விளங்கும்... அதாவது.... விடுதலை புலிகள் ஒன்றுமே செய்யவில்லை... ஆனையிறவை ஆமி விட்டுட்டு போனான் ...இதுவரை விழுந்த விமானங்கள் எல்லாம் ஆமியே வேண்டாம் என்று வீழ்த்தியது .. எரிந்த டோரா எல்லாம் பழையது என்பதால் அவர்களே எரித்தார்கள்..

இப்படி எல்லா இனத்திலும் குறுக்காலை போனவை கொஞ்சப் பேர் இருப்பினம்... இவர்களூக்கு என்ன செய்யலாம் என்டால் ....ஒரு சங்கிலியாலை கழுத்திலை கட்டிப்போட்டு... அதை மரத்தில கட்டி விட வேனும்...பின்னர் ஒரு நெளிந்த தகரத்திலை முட்டையை உடைத்து ஊத்திவிட்டா நக்கி கொன்டு கிடப்பினம்.... அவிட்டு விட்டா ஆபத்து ....அடுத்த வீட்டுல போய் எழும்பு நக்க வெளிக்கிட்டுவிடுவினம்.... இப்படித்தான் நாலைந்து பேர் ஊரில நக்கி கொன்டு இருக்கினம்.....

Link to comment
Share on other sites

என்னதான் இருந்தாலும் எமது குறுக்ஸ்சை இவ்வளவு மட்டம்தட்டக்கூடாது :angry: :angry: :angry:

அது என்ன நெளிந்த தட்டு, ஏன் நெளியாத தட்டில் போடக்கூட்டாதோ. :huh::D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொட்டுவதே தப்பு இதுக்குள்ள நெளிச்ச தட்டா?

பேசாம ஒரு ஓரமாக போட்டு விடுங்கள் அது திண்டு விட்டு போகட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

சிங்கள அரசு தான் இப்பொழுது முழுப்போர் செய்கிறது.விரைவில் புலிகளும் முமுப்போர் செய்யும் போது பாருங்கள் அதிசயத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள அரசு தான் இப்பொழுது முழுப்போர் செய்கிறது.விரைவில் புலிகளும் முமுப்போர் செய்யும் போது பாருங்கள் அதிசயத்தை.

அண்ணை கந்தப்பண்ணை என்னதான் சொன்னாலும் குறுக்காலை போறவைக்கு நக்குத்தண்ணி நக்குதண்ணிதான். அவை எசமான விசுவாசத்தை இப்படியான மட்டமான எண்ணங்களினால்தான் விமர்சிக்கமுடியும்.

புலிகளின் மெளனத்தில் சிறுநரிகள்(சீச்சீ ஓநாய்கள்) சலசலக்கும் புலிகள் உறுமும்போது அடுத்த முகமூடியுடன் வாழ்த்துமடல்களை களத்துக்கு சுமந்துவருவினம். நரிக்கு தலையாக இருப்பதைவிட புலிக்கு வாலாக இருப்பது எவ்வளவோமேல்

நான் வாலாக இருப்பதிலேயே மகிழ்ச்சியடைகின்றேன்.

வெற்றிமுரசு தமிழர்படை கொட்டும்

நாணி வெறியர்படை ஓடும்.

களத்தில் சிறுமதியர் கூட்டம்

கதிகலங்கி வார்த்தையின்றி கலங்கும்

தூயவன் நான் கஞ்சி குடித்தாலும் கெளரவமாக குடிக்க விரும்புகிறேன்.

என் பங்களிப்பை நான் தவறாமல் செய்து கொண்டிருக்கின்றேன். என்பாதை தெளிவானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

KADALATHAI NAANGAL VELLUVOM KADATPULI NANGAL AALUVOM :huh:undefined

முழுப்போர் தொடங்கி பல மாசமாகிவிட்டது வியாசன்.....

தமிழ்நெட்டின் வரலாறு பக்கங்களை போய் செக் பண்ணுங்கொ அண்ணே!

undefined

undefined

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாசன் அண்ணா தாயகம் குறித்த உங்களது பங்களிப்பை நான் என்றைக்குமே குறைத்து மதிப்பிடவில்லை. உங்களின் பங்களிப்பு குறித்து நிறைய மரியாதை உண்டு.

யாழ்களத்தில் பொதுவாக எழுதும்போது பொதுவாக அனைவருக்கும் சொல்லக் கூடியதாகவே சொன்னேன். தலைவரைப் போன்று சொல்லை விடச் செயலுக்கே மதிப்புக் கொடுப்போம் என்பது தான் நான் சொல்ல வந்தது.

நாங்கள் வெல்லுவோம் என்றது முக்கியமல்ல. வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். அதற்கு நாம் பூரணமடைவதே முதல் பணி. அதைத் தான் குறுக்கால போவனும் சொல்ல வருகின்றார் என்றே நான் நினைக்கின்றேன்.

யாருடைய மனதையும் வருத்தியிருந்தால் அதற்காக வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயவன் எனக்கு நேரம் கிடைப்பதில்லை அதனால்தான் களத்துக்கு நான் வருவதில்லை. ஆனால் களத்தில் குறுக்காலை விசத்தை பரப்புவதை பல தடவை பார்த்திருக்கின்றேன்.

என்வரை நாம் புலிகளை சந்தேகிப்பது

தாய் எமக்கு காட்டிய தந்தையை நாம் நம்பாமல் விடுவதுபோல்தான் குறுக்காலைகள் தந்தையை நம்பாதவர் போலும்.............

Link to comment
Share on other sites

குசுக்காலபோவான் அண்ண்னாவுக்கு எப்பவும் ஒரு நக்கலும் மட்டம் தட்டுதலும் தான்.

என்னப்பா புது பெயர் எல்லாம் கண்டு பிடிகிறியல் :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஈழம் வெல்லப்படுவது என்பது உறுதியானது. அந்த முடிவினைத்

தலைவரே சொல்லிவிட்டார். அந்த நிலையில் இன்று போராட்டம்

நகர்ந்து கொண்டிருக்கிறது. அது வெளிப்படையாகவே தெரிகிறது.

அனைத்துக் கட்டுமானங்களும் இயக்கம் பெறத் தொடங்கி

விட்டது. அரச இராணுவ நடவடிக்கைகளால் பின்னோக்கி

நகர்ந்ததினால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் விரைவில் தீரும்.

அப்போது தெரியும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியது

கடற்புலிகள் மட்டுமல்ல ஏனையவையுந்தானென்று.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.