Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இருந்து வந்தவர் பிரித்தானியாவில் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மூன்று பேர் மேல் பிரித்தானிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 32 வயது சுரேன் சிவானந்தம் (கனடா) என்பவரை பிரித்தானியா Milton Keynes பகுதியில் வைத்து கொலை செய்தார்கள் என்று ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் (37), கிரோராஜ்  யோகராஜா (30) மற்றும் ஒரு 17 வயதுள்ளவர் ஆகியோர் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது.

http://www.thamesvalley.police.uk/yournh/yournh-tvp-pol-area/yournh-tvp-pol-area-mk-mk/yournh-tvp-pol-area-mk-mk-newslist/yournh-tvp-pol-area-mk-mk-newsitem.htm?id=347974

  • கருத்துக்கள உறவுகள்

கனடா இளைஞர் பிரித்தானியாவில் அடித்துக் கொலை!

 

Image

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 32 வயதான சுரேன் சிவானந்தன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்களால் அடையாளம் காட்டியுள்ளனர்

இந்நிலையில், குறித்த படுகொலை வழக்கு தொடர்பில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதில் 37 வயதான ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், கிரோராஜ் யோகராஜா (30) என்பவரும் கைது செய்யப்பட்டுள விசாரிக்கப்பட்டு வருகின்றார். கைது செய்யப்பட்டுள்ள நபர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,கடந்த வெள்ளி அதிகாலை 4 மணியளவில் கிரேட் லின்ஃபோர்டு பகுதியில் இருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் ஒன்றை அந்நாட்டு பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

caboy.jpg

http://tamilsguide.com/blog/canada-news/5274

  • கருத்துக்கள உறவுகள்

கொலையில் முடியும் விடயங்கள் பெரும்பாலும், சட்ட விரோத வியாபாரங்கள் சம்பந்தமானவை ஆகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் இங்கிலாந்தில் கொலை. பதிலை தேடும் துயரத்தில் வாடும் குடும்பத்தினர்.

 

Image

புது வருடத்திற்கு சிறிது முன்னர் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு தனது மூத்த சகோதரனை ஏற்றி சென்று வழி அனுப்பி வைத்தார் சிந்துஷா சுரேஷ். இருவரும் ஒருவரை ஒருவர் கடைசியாக சந்தித்ததும் அன்றுதான்.

பின்னர் லண்டன் இங்கிலாந்தில் இருந்து 85-கிலோ மீற்றர்கள் தொலைவில் மில்ரன் கெய்னெஸ் சுப்ப மார்க்கெட் வாகன தரிப்பில் சுரேன் சிவானந்தன் இறந்து கிடக்க கண்டுபிடிக்கப்பட்டார்.


ஜனவரி 21ல் லண்டன் நேரப்படி அதிகாலை 4மணியளவில் அதிகாரிகளிற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியீடு ஒன்றின் பிரகாரம் தெரிய வந்தது.


32வயதுடைய ரொறொன்ரோ மனிதன் எவ்வாறு தேம்ஸ் பள்ளத்தாக்கில் இறந்தார் என்பது தெளிவாகவில்ல ஆனால் 17-வயதுடைய பையன் உட்பட மூவரை பொலிசார் இக்கொலை சம்பந்தமாக  கைது செய்ததாக அறியப்படுகின்றது.


கடந்த வியாழக்கிழமை சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பரந்த பொது மக்களிற்கு ஆபத்து ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.


சிபிசி ரொறொன்ரோ, தேம்ஸ் பள்ளத்தாக்கு பொலிசாருடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் மேலதிக விபரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். செயலில் இருக்கும் சட்ட நடிவடிக்கைகள் இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.


கனடாவில் இருந்து லண்டன் வரை சென்றது இறப்பதற்கு இல்லை என சகோதரி தெரிவித்தார். இச்சம்பவத்தால் அனைத்து குடும்பமும் கலக்கத்தில் உள்ளனர்.
சுரேன் ஜேர்மனியில் வசிக்கும் அவரது இளைய சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அவரை பார்க்க பெற்றோருடன் அங்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நண்பர்களை சந்திக்க லண்டன் சென்றார் என சகோதரி தெரிவித்துள்ளார். பெற்றோருடன் ரொறொன்ரோ வருவதற்கு முன்னர் ஜேர்மனி செல்ல வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெற்றோருடன் ரொறொன்ரோ வரவேண்டியவர் வரவில்லை.
இவர் ஒரு அற்புதமான சகோதரர் என தெரிவித்த சகோதரி சுரேஷ் தனது சிறு பிள்ளைகளிற்கு என்ன சொல்வதென திண்டாடிக் கொண்டிருக்கின்றார்.
இவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராவார்.2009-லிருந்து மார்க்கம் ரொறொன்ரோ கிரிக்கெட் அணியில் சிவானந்தன் விளையாடியுள்ளார் என கூறப்படுகின்றது.
இவரது மரணசடங்குள் பெற்றோரும் சகோதரியும் ரொறொன்ரோ வந்ததும் ஒழுங்கு செய்யப்படும்.

london.JPG

London%202.JPG

http://tamilsguide.com/blog/canada-news/5421

  • கருத்துக்கள உறவுகள்

17 வயதில் உள்ளவர்கள் எல்லாம், கொலை  செய்யும் அளவிற்கு...  தமிழ்ச்  சமூகம் வந்து விட்டதா? :mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.