Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

Featured Replies

13 ஆவது நாளாக தொடரும் கேப்பாபுலவு மக்கள் போராட்டம்

 

 

கடற்­ப­டை­யினர் நிலை­கொண்­டுள்ள தமது காணி­களை மீள தம்­மிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு கோரிக்கை விடுத்து கேப்­பா­பு­லவு மக்கள் மேற் ­கொண்டு வரும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தீர்வின்றித் தொடர்கின்றது.

கேப்­பா­பு­லவு மக்­களின் கோரிக்கை குறித்து கடந்த வாரம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்ற போது தாம் அவுஸ்­தி­ரே­லிய விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்­பி­யதும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

நல்லாட்சியே பதில் சொல்.!

 

 

கடற்படையினர் நிலைகொண்டுள்ள தமது காணிகளை மீள தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்து கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு நகரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இன்று காலை பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றது.

1.jpg

மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்கா முன்றலில் மணிக்கூட்டுக் கோபுரம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் காந்தி வோ.சங்க தலைவர் அ.செல்வேந்திரன் தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

2.jpg

இராணுவமே வெளியேறு.! நல்லாட்சியே பதில் சொல்.! எமது காணிகள் எமக்கு வேண்டும்.! எனும் வாசகங்கள் உட்பட பல கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

கேப்பாப்பிலவு மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வட. மாகாண சபையினர் சென்றுள்ளனர்

IMG_2284.jpg

தங்களின சொந்த நிலங்கள் தங்களுக்கு மீண்டும் கிடைக்கும் வரைக்கும் தங்களின் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் தங்களின் சொந்த நிலங்களே தங்களுக்கு வேண்டும் எனவும் தெரிவித்து சத்தியாக்கிர போராட்டம் நடத்தின் 13ஆவது நாளான இன்று  அங்கு  வட. மாகாண சபையினர்  சென்றுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சகலரும் கேப்பாப்பிலவிற்கு சென்று தமது ஆதரவை வழங்கவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இரவில் அதிகளவான பனி, பகலில் அதிக வெயில் என காலநிலையின்  தாக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் உறுதியாக நிற்கின்ற  இந்த மக்களின் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் தரப்புகள், மாணவர் அமைப்புகள், பொது அமைப்புகள், மத அமைப்புகள்,சில  சிங்கள மக்கள், என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றதுடன் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் 10ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/archives/17386

  • கருத்துக்கள உறவுகள்

13நாட்கள் யோசித்திருப்பார்களோ!
நிலத்திலும் புலத்திலும் ஒரு உறுதியான தமிழரது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து முன்னகர்த்தக்கூடிய துணிச்சலான தலைமைத்துவமற்று அனாதையாக எமதினம் நிற்கிறது. 
தந்தை செல்வாவின் வரிகள் நிதர்சனமாகி வருகிறதா? வாராது வந்தவரையும் தொலைத்துவிட்டு நிற்கும்தமிழினமோ, இனி நமக்கு நாமே என்று போராடத்துணிய அதிலே குளிர்காய்கிறது மெத்தப்படித்த(?) அரசியல்(?) தலைமைகள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nochchi said:

13நாட்கள் யோசித்திருப்பார்களோ!
நிலத்திலும் புலத்திலும் ஒரு உறுதியான தமிழரது பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து முன்னகர்த்தக்கூடிய துணிச்சலான தலைமைத்துவமற்று அனாதையாக எமதினம் நிற்கிறது. 
தந்தை செல்வாவின் வரிகள் நிதர்சனமாகி வருகிறதா? வாராது வந்தவரையும் தொலைத்துவிட்டு நிற்கும்தமிழினமோ, இனி நமக்கு நாமே என்று போராடத்துணிய அதிலே குளிர்காய்கிறது மெத்தப்படித்த(?) அரசியல்(?) தலைமைகள்.
 

16711510_750123065155233_122420132132689

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அரசுக்கு எதிராக போராடியதே சும் இன் பிரச்சனை. மக்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, முனிவர் ஜீ said:

16711510_750123065155233_122420132132689


அப்படியென்றால் இவர்கள் எதற்காக...


தாங்கள் தமிழினத்துக்காகக் கதைக்காது சிங்கள அரசியலையும் சிங்களத்தையும் காக்கவே தொண்டுசெய்வதை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட சுமந்திரன் மாமா(!) பாராட்டிற்குரியவரே.

Just now, MEERA said:

மக்கள் அரசுக்கு எதிராக போராடியதே சும் இன் பிரச்சனை. மக்கள் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்டார்கள்.

 

 

அதுதான் இவரது கடுப்பு. 
அடுத்த வெளிவிவகார அமைச்சராகும் நோக்கோடு, இன்னொரு கதிர்காமராகவும் காக்கைவன்னியானாகவும் உருவெடுக்கத் துடிக்கிறார். அதன் வெளிப்பாடே. அடுத்த தேர்தலில் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலூடாக இவர் செல்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:


அப்படியென்றால் இவர்கள் எதற்காக...


தாங்கள் தமிழினத்துக்காகக் கதைக்காது சிங்கள அரசியலையும் சிங்களத்தையும் காக்கவே தொண்டுசெய்வதை பகிரங்கமாக ஒத்துக்கொண்ட சுமந்திரன் மாமா(!) பாராட்டிற்குரியவரே.

அதுதான் இவரது கடுப்பு. 
அடுத்த வெளிவிவகார அமைச்சராகும் நோக்கோடு, இன்னொரு கதிர்காமராகவும் காக்கைவன்னியானாகவும் உருவெடுக்கத் துடிக்கிறார். அதன் வெளிப்பாடே. அடுத்த தேர்தலில் ஐ.தே.கவின் தேசியப்பட்டியலூடாக இவர் செல்வார்.

பின் கதவால் வந்தவர் வேற என்னத்தை சொல்ல செய்ய முடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, முனிவர் ஜீ said:

16711510_750123065155233_122420132132689

"அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. "

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

"அரசாங்கத்தினால் முன்வைக்கப்படும் யோசனைகள் மீது தமக்கு நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளில் பாதிப்பேரையாவது விடுதலை செய்ய வேண்டும் என்றும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.. "

அதற்க்கான பதிலை ரணில்  தெரிவித்து விட்டாரே அண்ண காணாமல் போனவர்களை நாம் எங்கு போய் தேடுவோம் அவர்கள் சில வேலை வெளீநாடுகள் சென்று இருக்கலாம் என்று  அர்சிடம் பேசியாவது சில காரியங்களை சாதிக்கலாம் தமிழ் அரசியல் வாதிகளைடம் பேசி பலன் இல்லை ..................................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.